Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா; குட்டிக் கதை! -பொதுக்குழுவுக்குத் தயாராகும் சசிகலா

Featured Replies

எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா; குட்டிக் கதை! -பொதுக்குழுவுக்குத் தயாராகும் சசிகலா

 

sasi_cho1_11387.jpg

பொதுச் செயலாளர் பதவியை எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் கைப்பற்றுவதற்கான ஆலோசனைகளில் இருக்கிறார் சசிகலா. ' துணைப் பொதுச் செயலாளர்களாக யாரும் தேர்வு செய்யப்பட போவதில்லை. பொதுச் செயலாளர் பதவிக்கு மட்டும்தான் பொதுக்குழு கூடுகிறது. கூட்டத்தில் ஏழு நிமிடத்திற்கும் மேல் விரிவாகப் பேசுவதற்கும் தயாராகி வருகிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ம் தேதி வானகரத்தில் நடக்க இருக்கிறது. இதுவரையில், ஜெயலலிதா பின்புறம் இருந்தே அரசியல் அசைவுகளைக் கவனித்து வந்த சசிகலா, முதல்முறையாக மேடையில் பேசுவதற்கான ஒத்திகையில் இருக்கிறார். " கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களாக 2,700 பேர் வரை உள்ளனர். ஒவ்வொரு முறை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது, சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பிரிவில் நூற்றுக்கணக்கானோர் அழைக்கப்படுவது வழக்கம். இந்தமுறை தேவையற்ற கூச்சல் குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்பதற்காக, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளது. அதையும் கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம் கொடுத்து, அவர்களின் கண்காணிப்பில் அழைத்து வரப்பட உள்ளனர்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

ops_ele1_11551.jpg"கார்டன் அதிகாரத்திற்குள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தாலும், சசிகலாவின் குரலை அடிமட்ட கட்சித் தொண்டர்கள் யாரும் கேட்டதில்லை. அவர் முதன்முறையாக பொதுக்குழுவில் பேச இருக்கிறார். இதற்கான குறிப்புகளை தயாரிக்கும் பணியை மன்னார்குடி உறவுகளே கையில் எடுத்துள்ளனர். 'நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் ஆசிரியர் மருது அழகுராஜ் தயாரிக்கலாம்' என்றுதான் மாவட்ட செயலாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சசிகலாவின் முதல் மேடைப் பேச்சு எப்படி அமைய வேண்டும் என்பதை மன்னார்குடி உறவுகளே தீர்மானித்துள்ளனர். அதற்காக, நீண்ட ஒத்திகையே நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றியோ, ஓ.பி.எஸ் அதிகாரத்தில் தொடர்வதைப் பற்றியோ எதுவும் அவர் பேசப் போவதில்லை. அ.தி.மு.க.வைக் கட்டிக் காக்க எம்.ஜி.ஆர் உழைத்தவிதம்; ஜெயலலிதாவின் தலைமையில் கட்சியின் அசுர வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி மட்டுமே பேசுவார். இறுதியாக, கட்சி அதிகாரத்திற்குள் தன்னுடைய வருகையைப் பற்றி குட்டிக் கதையின் மூலம் விளக்குவார். இதுதான் பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல். பொதுக்குழு கூடி முடிவு செய்த பிறகு, உடனே செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். இதன் நகலை சசிகலாவிடம் வழங்க உள்ளனர். அதன்பிறகே, எம்.ஜி.ஆர் சமாதிக்கு செல்வது என முடிவு செய்திருக்கிறார் சசிகலா" என்றார் விரிவாக. 

"தற்போதுள்ள சூழலில் கட்சிக்குள் உள்ள சாதிகளின் அடிப்படையில் துணைப் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. 'ஆட்சி அதிகாரத்திற்குள் ஓ.பி.எஸ் தொடர்வதே நல்லது' என சசிகலா நினைக்கிறார். வருமான வரிச் சோதனையைத் தடுக்க வழி தெரியாமல் கார்டன் வட்டாரத்தில் உள்ளவர்கள் திணறி வருகின்றனர். ' டெல்லி லாபிக்கு தம்பிதுரை சரியானவர்தான். ஆனால், நம்பகத்தன்மை உள்ளவரா'  என்ற கேள்விதான் மன்னார்குடி தரப்பில் எழுந்துள்ளது. 'காங்கிரஸ் தலைவர்களோடு தொடர்பில் இருப்பதுதான், எல்லா சிக்கலுக்கும் காரணம்' என சசிகலா நினைக்கிறார். ஆனால், 'பா.ஜ.க.வோடு இணக்கமாகவே செல்கிறோம்' என்பதை பிரதமருக்குப் புரிய வைப்பதற்கான வேலைகளில் சிலர் இறங்கியுள்ளனர். ' சசிகலா பொதுச் செயலாளர் ஆனால் அ.தி.மு.க அழிந்துவிடும்' என ஆர்.எஸ்.எஸ் முகாமில் இருந்தே குரல்கள் வெளியாகி உள்ளன. இதையும் எதிர்கொள்வது பற்றித்தான் விவாதித்து வருகின்றனர். சசிகலாவுக்கு எதிராக வரும் புகார்களை ஒன்றுவிடாமல், கையில் வாங்கிக் கொள்கிறது மத்திய அரசு. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படும் நாளில், இன்னொரு எதிர்பாராத அதிர்ச்சியை வருமான வரித்துறை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது" என்கின்றனர் அ.தி.மு.கவின் ஒருபிரிவினர். 

"வருமான வரித்துறையின் கரங்கள் கார்டனை நோக்கி எந்த நிமிடத்திலும் வரலாம் என்பதை மன்னார்குடி தரப்பில் அறிந்து வைத்திருக்கிறார்கள். இப்போதுள்ள நெருக்கடியான சூழலில், 'கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கும் ஓ.பி.எஸ்ஸையே முன்னிறுத்தலாம்' என ஒரு தரப்பில் பேசி வருகின்றனர். அப்படிச் செய்தால், 'மத்திய அரசின் கோபப் பார்வையில் இருந்து சில காலம் தப்பிக்கலாம்' எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, வருமான வரித்துறையின் அடுத்தகட்ட அதிரடிகள், கார்டன் வட்டாரத்தின் செயல் திட்டத்தை மாற்றலாம். ' பொதுக்குழுவுக்கு சின்னம்மா வருவாரா' என்ற கேள்விகளும் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது" என்கின்றனர் தலைமைக் கழக வட்டாரத்தில். 

http://www.vikatan.com/news/tamilnadu/75924-will-sasikala-come-to-admk-general-body-meeting.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.