Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரம் கோடிகளை அள்ளுவது எப்படி? ரெய்டில் வெளியான 'சகல சந்தோஷங்கள்'!

Featured Replies

ஆயிரம் கோடிகளை அள்ளுவது எப்படி? ரெய்டில் வெளியான 'சகல சந்தோஷங்கள்'!

 

sekar_reddy_Relative_13457.jpgசென்னையில் சிங்கிள் டீக்கு வழியில்லாமல் அலைந்த சேகர் ரெட்டியின் உறவினர் ஒருவருக்கு இன்று பல கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொழிலதிபர் சேகர்ரெட்டியைத் தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு, அலுவலகங்கள் உள்பட 13 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் நகை, பணம், டைரி, ஆவணங்கள் சிக்கின. அந்த டைரியில் ராம மோகன ராவிடம் நெருக்கமானவர்களின் விவரங்கள் உள்ளன. அதன்அடிப்படையில் வருமான வரித்துறையின் அடுத்தகட்ட அதிரடியை தொடங்கவுள்ளது.  இந்நிலையில் வெளியுலகத்துக்குத் தெரியாமல் சேகர் ரெட்டியின் உறவினர் ஒருவர் சென்னையை அடுத்த ஆவடியில் கோலோச்சி வந்த ரகசிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரும் வருமான வரித்துறையின் சந்தேக வளையத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

காட்பாடி டூ கப்பல் படை!

அந்த நபர் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், " தமிழகத்தில் மணல் பிசினஸில் சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். சேகர் ரெட்டிக்கு நெருங்கிய உறவினர். காட்பாடியைச் சேர்ந்த இவர், கப்பல் படையில் பணியாற்றியவர். பின்னர் அந்த வேலையை உதறி விட்டு ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் குடியேறினார். அப்போது அவருக்கும், ரயில்வேயில் பணியாற்றிய ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் வாங்கிய சொத்தில் வில்லங்கம் ஏற்பட, சட்ட ரீதியாக போராடினார். அந்த வழக்கில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. இதற்கிடையில் வேலை இல்லாததால் அந்த நபர் வறுமையில் வாடினார். அப்போது அவருக்கு உறுதுணையாக அந்த பெண் இருந்தார். இந்த சமயத்தில் கடந்த சில ஆண்டுகளாக திடீரென மாயமாகி விட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆவடிக்கு சொகுசு காரில் வந்து இறங்கினார். கழுத்தில் செயின், கையில் பிரேஸ்லெட், விரல்களில் மோதிரம், அவருக்கு செக்யூரிட்டியாக நான்கைந்து நபர்களுடன் வந்தார் சேகர் ரெட்டியின் உறவினர். அவரைப் பலருக்கு அடையாளம் தெரியவில்லை. தனக்கு நெருக்கமான அந்தப் பெண்ணின் வில்லங்க இடத்தில் கோடிகளை கொட்டி பங்களா வீட்டைக் கட்டினார்.

மந்திரச் சொல்!

’நானும் ஒரு தொழிலதிபர்’ என்ற பந்தாவுடன் வலம் வரத் தொடங்கினார். அடுத்து ஆவடி பகுதியில் உள்ள ஒரு ஏரியில் மணல் குவாரி பிசினஸை கையில் எடுத்தார். விதிமுறைகளை மீறி மணல் எடுக்கப்பட்டது. அதைக் கண்டுக்கொள்ளாமலிருக்க தலைமைச் செயலகத்தில் உள்ள ஒருவரின் பெயரை மந்திரமாக உச்சரித்தார். அனைவரும் அமைதியாகி விட்டனர். ஆவடி பகுதியைச் சுற்றி பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டினார். அதோடு பண்ணை வீடுகளும் இரண்டு இடத்தில் கட்டினார். தன்னுடைய மகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கோடிகளை செலவழித்து ஆடம்பரமாக திருமணம் செய்து கொடுத்தார். அந்த விழாவில் சேகர் ரெட்டி, தலைமைச் செயலக முக்கிய அதிகாரி உள்பட பல வி.ஐ.பிக்கள் பங்கேற்றனர். இதனால் சேகர் ரெட்டியின் உறவினரை ஊர்மக்கள் வியந்து பார்த்தனர்.

எரிக்கப்பட்ட ஆவணங்கள்!

மணல் குவாரி அமைந்துள்ள அந்த ஏரியின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்ற இன்ஸ்பெக்டர்கள் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். சேகர் ரெட்டியின் உறவினர் ஒருவர் மணல் குவாரி பிசினஸை கையில் எடுத்தவுடன் சம்பந்தப்பட்ட அந்த காவல் நிலையத்தில் கல்லா கட்ட தொடங்கியது. தற்போது அங்கு பணியாற்ற அதிகாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த சமயத்தில் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதும் அவரது உறவினரின் வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அந்த நபருக்கு சேகர் ரெட்டி மூலம் தூது விடப்பட்டது. அதில் ஒரு உத்தரவு வந்துள்ளது. பினாமி பெயரில் உள்ள சொத்துப் பத்திரங்களை எரித்து விடும்படி தெரிவிக்கப்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பல ஆவணங்கள் எரிக்கப்பட்டன. இதை அப்பகுதி மக்கள் பார்த்தவுடன் அங்கிருந்து ஒரு கும்பல் தப்பி ஓடி விட்டது. அந்த இடத்தில் எரிந்து மீதி கருகிய நிலையில் முத்திரைதாள்கள் இருந்துள்ளன. பொது மக்கள் சென்ற பிறகு அந்த முத்திரைத் தாள்களையும் அந்த கும்பல் எடுத்து சென்று விட்டது.

துணை நடிகைகள்!

வார விடுமுறை நாட்களில் சேகர் ரெட்டியின் உறவினரும், தி.மு.க முக்கிய புள்ளி ஒருவரும் பண்ணை வீட்டுக்குச் செல்வதுண்டு. அங்கு துணை நடிகைகளும் நள்ளிரவில் சொகுசு காரில் வந்து இறங்குவர். விடிந்த பிறகு கிளம்பிச் செல்வார்கள். இந்தப் பழக்கம் அப்பகுதி மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த பண்ணை வீடு கொண்டாட்டங்கள், குடியிருப்பு பகுதிகளின் நடுவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு மாறி இருக்கிறது. தற்போது அவர்களும் சேகர் ரெட்டியின் உறவினர், தி.மு.க பிரமுகரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் அதிகார மையத்தில் இருப்பவர்களிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் ஏனோ அமைதியாக இருக்கின்றனர். சேகர் ரெட்டி கைது, ராம மோகன ராவ் வீடு, அலுவலகத்தில் சோதனைக்குப் பிறகு சேகர்ரெட்டியின் உறவினர் தனது கூட்டாளிகளுடன் தலைமறைவாகி விட்டார்" என்றனர்.

சிங்கிள் டீ!

பிரபல வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், "சேகர் ரெட்டியின் உறவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிங்கிள் டீ.க்கு வழி இல்லாதவர். தற்போது அவர் அடியாட்களுடன் சொகுசு காரில் வலம் வருகிறார். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தவுடன் சேகர்ரெட்டியின் உறவினர், தி.மு.க பிரமுகர் உதவியுடன் அந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர். சேகர் ரெட்டியின் உறவினரிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் புதைந்திருக்கும் பல உண்மைகள் வெளியில் வரும்!" என்றார்.

நிலத்தில் முதலீடு!

 "சேகர் ரெட்டியின் உறவினருக்கு ஆவடி, பண்ருட்டி, அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் பல ஏக்கர் நிலம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த இடங்கள் யாருடைய பெயரில் இருக்கிறது என்ற விவரங்கள் தெரியவில்லை. குறுகிய காலத்தில் சேகர் ரெட்டியின் வளர்ச்சியைப் பார்த்து பொதுமக்களே வியப்பில் இருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் சேகர் ரெட்டியின் உறவினர் குறித்து முழு விவரம் தெரிந்தவர்களும் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர்" என்று சொல்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

http://www.vikatan.com/news/coverstory/75941-how-sekar-reddys-relative-acquired-so-much-assets.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.