Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மோடியை எதிர்த்தால் மட்டுமே கட்சி நீடிக்கும்!' -எஸ்.ஆர்.பி, ராமமோகன ராவ் கொந்தளிப்பின் பின்னணி

Featured Replies

'மோடியை எதிர்த்தால் மட்டுமே கட்சி நீடிக்கும்!'  -எஸ்.ஆர்.பி, ராமமோகன ராவ் கொந்தளிப்பின் பின்னணி 

 

sasi_garden1_11130.jpg

பொதுக்குழுவை நல்லபடியாக நடத்தி முடிக்கும் முடிவில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். ' மத்திய அரசுக்கு எதிராக வலுவாகப் போராட இருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். அதையொட்டியே எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் நேற்று அறிக்கை வெளியிட்டார். இன்றைக்கு ராம மோகன ராவ் கொதித்திருக்கிறார். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் ஓ.பி.எஸ் மௌனமாக இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை மறுநாள் அ.தி.மு.க.வின் பொதுக்குழு நடக்க இருக்கிறது. இதில், பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "ஜெயலலிதா இருந்தவரையில், 'அரசியலுக்கு வர மாட்டேன். காலம் முழுவதும் உங்களுக்குப் பணிவிடைசெய்வதே என்னுடைய கடமை' என எழுதிக் கொடுத்துவிட்டுத்தான், மீண்டும் கார்டனுக்குள் வந்தார் சசிகலா. தற்போது பொதுக்குழு கூட்டத்துக்கு வந்து, பதவியை ஏற்றுக் கொண்டால், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற விவாதம் எழும். எனவே, 'பொதுக்குழுவில் பங்கேற்கலாமா' என்பது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறார். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுத்த பிறகு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து தீர்மானத்தின் நகலைக் கொடுக்க இருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ' அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போடுவார் சசிகலா' என்றுதான் கார்டன் தரப்பில் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், வானகரம் பொதுக்குழுவுக்கு அவரை வரவேற்று கட்சி நிர்வாகிகள் போஸ்டர் அச்சடித்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில்தான் சில மாறுதல்களைச் செய்திருக்கிறார் சசிகலா" என விவரித்த கட்சி நிர்வாகி ஒருவர், தொடர்ந்து நம்மிடம் பேசினார். 

rmr_11272.jpg"பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த பிறகு, விரைவிலேயே முதலமைச்சர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்று சசிகலாவை மன்னார்குடி உறவுகள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கேற்ப, தேர்தலை சந்திக்காமல் முதலமைச்சர் ஆவது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். மத்திய அரசு நடத்தும் தொடர்ச்சியான சோதனைகளால், சசிகலா தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். அவர்களிடம் பேசிய கார்டன் சூத்ரதாரி ஒருவர், ' நம்மை முழுதாக பா.ஜ.க கட்டுப்பாட்டில் வைப்பதற்காகத்தான் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன. நமக்கு வேண்டியவர்கள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்துள்ளனர். இதைப் பார்த்து நாம் பயந்து ஒதுங்கினால், அ.தி.மு.க என்ற கட்சியை மறந்துவிட வேண்டியதுதான். இப்படியொரு சூழலை எதிர்த்துப் போராடினால்தான், கட்சியும் நிலைக்கும். நம் மீது தொண்டர்களுக்கும் முழுமையான மரியாதை வரும். ஆட்சியா? அடங்கிப் போவதா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்' எனக் கொந்தளித்த பிறகே, அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார் சசிகலா.

ops_11468.jpgநேற்று மாலை மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், 'கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது' எனக் காட்டமாக விமர்சித்தார். ஆனால், மத்திய அரசின் துணை ராணுவப் படை வந்ததை விமர்சிக்க வேண்டிய இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அவரிடம் இருந்து கடந்த ஒரு வாரமாக எந்தவித கருத்தும் வெளியாகவில்லை. 'அவர் வெளியிடுவதற்கு வாய்ப்பில்லை' என்பதை உணர்ந்துதான், எஸ்.ஆர்.பி மூலம் அறிக்கை வெளியிட வைத்தனர். இன்று மீடியாக்களை சந்தித்து ராம மோகன ராவை சந்தித்துப் பேச வைத்திருக்கிறார்கள். 'உங்களை எதிர்க்க நாங்கள் தயார்' என பகிரங்கமாகவே மத்திய அரசின் கவனத்துக்கு தெரியப்படுத்தியிருக்கிறது கார்டன். 'சசிகலா தரப்பில் இப்படியொரு முடிவை எடுக்கலாம்' என்பதை அறிந்துதான், ' ஹைதராபாத்தில் இருந்து ஏராளமான ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். விரைவில் சசிகலா உறவினர்களை நோக்கியும் ஐ.ஏ.எஸ்களை நோக்கியும் ரெய்டு பாயும்' எனத் தகவல்களை கசியவிட்டுள்ளனர்" என விரிவாகவே விளக்கி முடித்தார். 

"முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், தலைமைச் செயலகத்துக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திருப்பார்களா என ராம மோகன ராவ் கேள்வி எழுப்புகிறார். அப்படியானால், பன்னீர்செல்வம் அனுமதி கொடுத்ததால்தான் வந்தார்கள் என்பதை மறைமுகமாகவே சொல்கிறார். இந்தளவுக்கு அவர் பேசுவதற்குக் காரணம், தனியார் மருத்துவமனையில் ராம மோகன ராவை சிலர் சந்தித்துப் பேசியதுதான். அவர்கள் கொடுத்த தைரியத்தில்தான், மம்தாவுக்கும் ராகுலுக்கும் நன்றி தெரிவிக்கிறார் ராம மோகன ராவ். மோடிக்கு எதிரான யுத்தத்துக்குத் தயாராகிவிட்டது கார்டன்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகி ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/76032-admk-has-to-oppose-modi-to-survive-reason-behind-srb-ramamohana-rao-sudden-angst.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.