Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

#BREAKING அ.தி.மு.க அலுவலகத்தில் கைகலப்பு

Featured Replies

#BREAKING அ.தி.மு.க அலுவலகத்தில் கைகலப்பு

 

admkprotest_14241.png

சென்னை  ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிமுக பொது செயலாளருக்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்கள் அதிமுக அலுவலகம் வந்த போது கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/76156-quarrel-in-between-admk-head-office.art

  • தொடங்கியவர்

அதிமுக தலைமை அலுவலகத்தில் தள்ளுமுள்ளு: சசிகலா புஷ்பா கணவர் மீது தாக்குதல்

 

 
 
காயமடைந்த சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர். | படம்: எல்.சீனிவாசன்
காயமடைந்த சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர். | படம்: எல்.சீனிவாசன்
 
 

அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பா ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் தாக்கப்பட்டதால், அவர் காயமடைந்தார்.

ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புதன்கிழமை சசிகலா புஷ்பா எம்.பி. வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் வந்தார்.

வியாழக்கிழமை அதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில், லிங்கேஸ்வர் ஒரு ஆவணத்தை கொடுக்க வந்திருப்பதை அறிந்த அதிமுகவினருக்கும், சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதற்குப் பிறகு அது மோதலாக மாறியது. கட்சியினருக்குள் ஏற்பட்ட கைகலப்பில் லிங்கேஸ்வர திலகர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த லிங்கேஸ்வரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல்

adm1_3109784a.jpg

adm2_3109785a.jpg

adm3_3109786a.jpg

adm5_3109787a.jpg

படங்கள்: எல்.சீனிவாசன்

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-தலைமை-அலுவலகத்தில்-தள்ளுமுள்ளு-சசிகலா-புஷ்பா-கணவர்-மீது-தாக்குதல்/article9447641.ece?homepage=true

  • தொடங்கியவர்

BREAKING அ.தி.மு.க அலுவலகத்தில் கைகலப்பு

 

admkpro_15506.png

படங்கள் : தி.குமரகுருபரன்

சென்னை  ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

admk4a_15255.jpg

இன்று அதிமுக பொதுச் செயலாளருக்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்கள் அதிமுக அலுவலகம் வந்த போது கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

admkpro3blu_15447.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/76156-quarrel-in-between-admk-head-office.art

  • தொடங்கியவர்

என் கணவரைத் தாக்கியவர்களை சும்மா விட மாட்டேன், சீறும் சசிகலா புஷ்பா

 

தாக்குதல்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு விருப்ப மனு அளிக்க வந்த தனது கணவர் லிங்கேஸ்வர திலகன் மீது தாக்குதல் நடத்தியவர்களை சும்மா விட மாட்டேன் என்று சசிகலா புஷ்பா எம்.பி கடுமையாக எச்சரித்துள்ளார். 

sasikala-pushpa_20453.jpg

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் டிசம்பர் 29 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில் இந்தப் பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்தப் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நடராஜன் பெயரை அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் முன்மொழிந்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு குரல்களும் அ.தி.மு.க.வில் ஒலித்து வருகின்றன. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா புஷ்பா எம்.பி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று (28-12-16)  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்காக அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சசிகலா புஷ்பா வரப்போவதாக பேச்சு நிலவியது. ஆனால், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகனும் மற்றும் அவரது வழக்கறிஞருமே வந்தனர். இவர்கள், வருவதைக் கண்ட அ.தி.மு.க.வினர் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர்.  இதில் லிங்கேஸ்வர திலகனுக்கு தலை மற்றும் உடம்பில் பலமான அடிகள் விழுந்தன. அவருக்கு மூக்கு உடைப்பட்டு ரத்தம் பீறிட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த லிங்கேஸ்வர திலகனை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.

sasikalapushpa1_20591.jpg

இந்தத் தாக்குதலைப்பற்றி சசிகலா புஷ்பா எம்.பி கூறுகையில், "அ.தி.மு.க. பொதுச்செயலாளராக விருப்ப மனு தாக்கல் செய்ய, என் கணவர் சென்றபோது, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த எனது கணவரை போலீசார் அழைத்து செல்வதை டிவி.யில் பார்த்த நான் அதிர்ந்து போனேன். உடனே எனது வக்கீல் உதவியுடன் காவல் நிலையம் மற்றும் மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டேன். ஆனால், எங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்று கூறிவிட்டனர். எனது கணவரின் உடலுக்கும், உயிருக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக காவல் துறைதான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதை நான் சும்மா விடப்போவதில்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தேடுக்கப்பட வேண்டிய பொதுச்செயலாளார் பதவியை, குறுக்கு வழியில் கைப்பற்ற நினைக்கிறார் சசிகலா. இந்தப் பிரச்னையை இதோடு நான் விடப்போவதில்லை" என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/76203-sasikala-slams-admk-party-cadres-who-attacked-her-husband.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.