Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ., மரணத்தில் நீதிபதிக்கு சந்தேகம்

Featured Replies

ஜெ., மரணத்தில் நீதிபதிக்கு சந்தேகம்
 
Tamil_News_large_1679626_318_219.jpg
 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிச., 5ம் தேதி இரவு,11:30 மணிக்கு மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.



அப்போது, நீதிபதி வைத்தியநாதன் தன் சொந்த கருத்தாக கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. ‛அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார்' என, செய்திகள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1679626

  • தொடங்கியவர்

ஜெ. மரணத்தில் சந்தேகம் உள்ளது! உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தால் பரபரப்பு

 

death_jaya_11574.jpg

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு மரணம் அடைந்தார். 75 நாள் சிகிச்சைக்குப் பின் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அதிமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது உடல் மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட அமர்வு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் அதிமுக பிரமுகர் ஜோசப் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல் ஏன் முழுமையாக வெளியிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வைத்தியநாதன், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.vikatan.com/news/tamilnadu/76237-high-court-sends-notice-to-state-and-central-government-to-give-explanation-about-jayalalithaa-death.art

  • தொடங்கியவர்
gallerye_000602131_1679752.jpg

சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற, சென்னை உயர் நீதிமன்றம், அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

 

Tamil_News_large_1679752_318_219.jpg

ஜெ., மரணத்தில், தனிப்பட்ட முறையில், தனக்கும் சந்தேகம் உள்ளதாக கூறிய நீதிபதி, உடலை தோண்டி எடுக்க, ஏன் உத்தரவிடக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி, கண்டிப்பான உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை, ஜன., 9க்கு தள்ளிவைத்தார்.

அ.தி.மு.க., உறுப்பினரான, சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் தாக்கல் செய்த மனு:முதல்வராக பொறுப்பேற்ற, நான்கு மாதங்களில், செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அதிலிருந்து, அவர் மரணம் அடையும் வரை, என்ன நடந்தது என்பது பற்றி, மக்களுக்கு தெரியவில்லை.

முதல்வரின் உடல் நலம் குறித்து, மருத்துவ மனை தான் அறிக்கைகள் வெளியிட்டது; அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக, ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை. மர்மமான முறையில், ஜெயலலிதா இறந்துள்ளார். எனவே, உண்மையை கண்டறிய, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மூவர் அடங்கிய குழுவை, நியமிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் அடங்கிய,

'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜயன், தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி, மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் மதனகோபால் ராவ் ஆஜராகினர்.
அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி, ''ஜெயலலிதா மரணத்தில், மர்மம் எதுவும் இல்லை. இதுபோன்ற வழக்கு, உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அவருக்கு,உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டது,'' என்றார். மத்திய அரசு வழக்கறிஞர் மதனகோபால் ராவ், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.

இதையடுத்து, நீதிபதி வைத்தியநாதன் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு அளித்த மருத்துவ சிகிச்சை பற்றிய பிரச்னைக்குள் செல்ல, நாங்கள் விரும்பவில்லை. அவரது மரணம் குறித்து, சந்தேகம் எழும் போது, என்ன நடந்தது என்பது, பொது மக்களுக்கு தெரிய வேண்டும். அதுகுறித்து, கேள்வி கேட்க, உரிமை உள்ளது. எனக்கே கூட, தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளது.

முதல்வர் குணமடைகிறார்; சாப்பிடுகிறார்; கூட்டங்கள் நடத்தினார்; பேப்பரில் கையெழுத்திடுகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. திடீரென, அவருக்கு என்ன நடந்தது; அவரது உறவினர்களை கூட, பார்க்க அனுமதிக்கவில்லை என்ற செய்தியும் வந்தது.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்ற போது, 'வீடியோ' வெளியிடப்பட்டது.
ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும், எந்த புகைப்படமும், மருத்துவ விபரங்களும் வெளியிடப்படவில்லை. வருவாய் கோட்ட அதிகாரியான, ஆர்.டி.ஓ., கூடபார்க்கவில்லை. எனவே, அவரது உடலை தோண்டி எடுப்பதற்கு, ஏன் உத்தரவிடக் கூடாது?

 



மத்திய அரசும், அறிக்கை எதுவும் வெளியிட வில்லை. மத்திய அரசுக்கு, எல்லாம் தெரியும்; ஆனால்,எதையும் வெளியிடாததற்கு காரணம் என்ன என்பது, அவர்களுக்கே தெரியும். மத்திய அரசு, அமைதியாக இருந்து விட்டது.இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் விஜயன், ''உண்மையை கண்டறியும் குழு போல, விசாரணை ஆணையம் செயல்பட வேண்டும்; அரசு மற்றும் மருத்துவமனை வசம் உள்ள, ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும்,'' என்றார்.
 

இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:


பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலர் மற்றும் மத்திய அரசு துறைகள் சார்பில் பதிலளிக்க, மத்திய அரசு வழக்கறிஞர் மதனகோபால் ராவ்; தமிழக அரசு சார்பில் பதிலளிக்க, அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, நோட்டீஸ் பெற்று கொள்வதாக கூறினர்.
இந்த மனுவை, விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால், ஜன., 4க்கு, விசாரணையை தள்ளிவைக்க, இந்த நீதிமன்றம் விரும்பியது; ஆனால், மனுதாரர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால், விசாரணையை, ஜன., 9க்கு தள்ளிவைக்கிறோம். மனுவை, விசாரணைக்கு ஏற்கிறோம்.

அப்பல்லோ மருத்துவமனையின் தலைவருக் கும், நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தனிப்பட்ட முறையிலும், நோட்டீஸ் அனுப்ப அனுமதிக்கப்படுகிறது. மனுவை, ஜன., 9க்கு, விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத் துறைக்கு உத்தர விடப்படுகிறது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1679752

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.