Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபத்தில் சசிகலா... கொந்தளித்த பன்னீர்! - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு?”

Featured Replies

கோபத்தில் சசிகலா... கொந்தளித்த பன்னீர்! - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு?”

 

 

ழுகாருக்கு வாட்ஸ் அப் அனுப்பிக் காத்திருந்தோம். ‘‘போயஸ் கார்டன் வட்டாரத்தில் இருக்கிறேன். வருகிறேன்!” என்று பதில் அனுப்பியவர் வந்து  இறங்கினார். அவரது சிறகுகளுக்குள் மூன்று பக்க அறிக்கை இருந்தது.

‘‘இப்போதுதான் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் இன்னாள் ராஜ்யசபா அவை அ.தி.மு.க.

எம்.பி-யுமான எஸ்.ஆர்.பி. விடுத்துள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பப் போகிறது. தமிழக அரசையும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும் சசிகலாவையும் அ.தி.மு.க-வையும், பி.ஜே.பி-யும் மத்திய அரசும் மிரட்டிக்கொண்டு இருக்கின்றன என்று சொல்லப்பட்டு வந்த நேரத்தில் எஸ்.ஆர்.பி-யின் அறிக்கை மத்திய அரசு மீது பாய்ந்துள்ளது”

p42.jpg

‘‘சொல்லும்?”

‘‘எஸ்.ஆர்.பி. அறிக்கையில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது, ‘வருமானவரித் துறைக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களின்படி சோதனையிடுவதற்கு என்று வருமானவரித் துறை அதிகாரிகள் இந்தியாவில் எங்கு சென்றாலும் மத்திய அல்லது மாநில அரசின் காவல் மற்றும் பிற  துறை அதிகாரிகளின் உதவிகள் மற்றும் துணையினை கேட்டுப் பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பது உண்மைதான். எனவே, ராம மோகன ராவின் வீட்டுக்கு சோதனைக்குச் சென்றபோது மாநில அரசின் காவல் துறையின் உதவியைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும். கூடவே, துணை ராணுவத்தினரையும் கூட்டிச் சென்றிருந்தாலும் கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், துணை ராணுவத்தை மட்டும் கூட்டிச் செல்வது ஒட்டுமொத்தமாக மொத்த மாநிலமும் நம்பகத்தன்மையற்றது என்று அவர்கள் கருதுவதுபோன்ற தோற்றத்தை அளிக்கிறது. இது மிகமிகத் தவறான, பின்பற்றக் கூடாத முன் உதாரணம்.

p42b.jpgஒரு நாட்டை வழி நடத்திச் செல்வது அதன் அரசியல் நிர்ணயச் சட்டமும் மற்றும் பிற சட்டங்களும் மட்டும் அல்ல. நாட்டின் நிர்வாகத்தின் மரபுகள் மிக கவனத்துடன் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. தலைமைச்செயலகத்துக்குள் சென்று சோதனையிடும் முன் மாநில அரசின் அனுமதியைக் கேட்டுப் பெறுவது அத்தகைய மரபுகளில் ஒன்று. அப்படி அனுமதியைக் கேட்டுப் பெற்றார்கள் என்று எந்தத் தகவலும் இல்லை. கேட்காமல் சென்றிருந்தால் அதைவிட மோசமான முன்னுதாரணம் இந்தியக் கூட்டாட்சி முறையில் இருக்க முடியாது’ என்று ஏறி அடித்து உள்ளார் எஸ்.ஆர்.பி.!”

‘‘இது அ.தி.மு.க. தலைமையின் அனுமதியுடன் வெளியிடப்பட்டதா?”

“அ.தி.மு.க. எம்.பி-யும் அந்தக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமாக இருப்பவர் தான் எஸ்.ஆர்.பி. அவர் கட்சியின் தலைமையை மீறி, தலைமையின் எண்ணத்துக்கு மாறாக எப்படி அறிக்கை வெளியிடுவார்? தலைமையின் அனுமதி வாங்கினாரா எனத் தெரியவில்லை. ஆனால், தலைமை நினைப்பதற்கு மாறாக, எதையாவது சொல்ல மாட்டார்கள் அல்லவா?”

‘‘ஆமாம்!”

‘‘எஸ்.ஆர்.பி. அறிக்கை வெளியான சில நிமிடங்களில் போயஸ் கார்டன் வந்தார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். சசிகலாவை சந்தித்தார். 10 நிமிடங்கள் தான் இருந்தார். உடனே போய்விட்டார். ‘டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக போயஸ் கார்டன் வந்தார் பன்னீர். ஐந்து நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். டெல்லியில் இருந்து வந்தபிறகு இப்போது பத்து நிமிடங்கள் பேசினார். சாதாரணமான முறையில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதைக் காட்டுவதற்காகத்தான் சில நிமிடங்கள் இருந்தார். அதிக நேரம் இருந்தால் சர்ச்சை ஆகும் என்று நினைத்தார்’ என்று சொல்கிறார்கள்.”

‘‘அப்போது ரெய்டு குறித்து பேசப்பட்டதா?”

p42a.jpg

‘‘அப்படித்தான் சொல்கிறார்கள். ‘தலைமைச்செயலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டு இருப்பது தவறு’ என்று கோபமான வார்த்தைகளை பன்னீர் சொன்னதாகவும், மிரட்ட நினைக்கிறார்களா என்று சசிகலா கொந்தளித்ததாகவும் சொல்கிறார்கள். ‘ரெய்டு நடத்துவது அவர்களது உரிமை. ஆனால், தலைமைச்செயலகத்தில் பொதுத்துறை, உள்துறை அனுமதி இல்லாமல் சோதனை செய்யலாமா?’ என்ற கோணத்தில் அ.தி.மு.க. தரப்பு கொந்தளிக்கிறது.ஆனால், இதைப் பற்றி எல்லாம் மத்திய அரசு கவலைப்படுவது மாதிரி தெரியவில்லை.

அரசியல் விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆபரேஷன்களை முடுக்கிவிடச் சொல்லி இருக்கிறாராம் பிரதமர் மோடி. ஐந்து உயர் அதிகாரிகள் கொண்ட டீமை நியமித்து சில உத்தரவுகளை மோடி பிறப்பித்தாராம். மத்திய வருவாய் துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா இந்த தமிழக ஆபரேஷனின் ‘பாஸ்’ ஆக நியமிக்கப் பட்டாராம். குஜராத் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவருக்கு வலதுகரமாக செயல்படுகிறவர் - ராகேஸ் அஸ்தானா ஐ.பி.எஸ். சி.பி.ஐ-யின் இயக்குநர் பதவியை தற்காலிகமாகக் கவனிப்பவர். இவரும் குஜராத்காரர். அமலாக்கப் பிரிவின் இயக்குநர் கர்னல் சிங் ஐ.பி.எஸ்., இதே துறையின் தென் மண்டல ஸ்பெஷல் டைரக்டர் உதய் பாஸ்கர் ஐ.ஏ.எஸ், மத்திய உளவுப்பிரிவான ஐ.பி-யின் சென்னை மண்டல கூடுதல் டி.ஜி.பி-யான வர்மா ஆகியோர்தான் பிரதமர் நியமித்த டீமில் உள்ளவர்களாம். இவர்களுக்குக் கீழே, இன்னும் முக்கிய அதிகாரிகள் களத்தில் இறக்கிவிடப்பட்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி ரெய்டை இன்னும் அதிகப்படுத்தினால் அதற்கு அரசியல் முத்திரை குத்திவிடுவார்கள் என்றும் மத்திய அரசு நினைக்கிறதாம். எல்லாம் நேர்மையான நடவடிக்கை தான் என்பதைக் காட்டுவதற்காக மெல்லவே அனைத்தையும் செய்ய முடிவெடுத்து உள்ளார்களாம்.”

‘இப்படி ஒரு நெருக்கடியான நேரத்தில்தான் அ.தி.மு.க. பொதுக்குழு கூடப் போகிறதா?

‘‘வரும் 29-ம் தேதி சென்னை வானகரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் ‘அம்மா இடத்தில் சின்னம்மா’ என்ற புதிய முழக்கத்தின்படி சசிகலாவை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அறிவிக்கும் திட்டம் உள்ளது.  இதற்கு பொதுக்குழு உறுப்பினர்களை எப்படி அழைத்துவர வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது.  இது அ.தி.மு.க-வில் புதிய நடைமுறையாகும்.  அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 40 பொதுக்குழு உறுப்பினர்களும் 28-ம் தேதி மயிலாடுதுறையில் ஒன்றுகூடி சொகுசு பஸ்ஸில் சென்னை செல்ல வேண்டும்.  தனிப்பட்ட முறையில் யாரும் காரில் வரக்கூடாது.  சென்னையில் தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  பொதுக்குழுக் கூட்டத்தில், சின்னம்மாதான் பொதுச் செயலாளராக வரவேண்டும், என்ற ஒற்றை வாக்கியத்தைத் தவிர வேறு எதுவும் பேசக்கூடாது.  கூட்டம் முடிந்த பின் அவரவர் எப்படி வேண்டுமானாலும் வீடு திரும்பிக் கொள்ளலாம்.  முன்பெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு இருக்கும்.  ஆனால் இந்த முறை கிடையாது. கட்சிக்குப் பொதுச்செயலாளர் இல்லை என்பதால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்கிறார்கள். யார் யாரை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கலாம் என்று முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதால் இந்த முடிவு என்று சொல்லப்பட்டது. ‘சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் வருபவர்கள் சசிகலாவை எதிர்த்து ஏதாவது பேசிவிடக்கூடாது என்பதால்தான் இந்த ஏற்பாடு’ என்றும் சொல்கிறார்கள்” என்ற கழுகார் அடுத்து தி.மு.க. மேட்டருக்கு வந்தார்.

‘‘தி.மு.க பொதுக்குழு டிசம்பர் 20-ம் தேதி கூடும் என்று  முதலில் அறிவித்தார்கள். ஆனால், 15-ம் தேதி அன்றே திடீரென கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அது தள்ளிப்போனது. அதன் பிறகு அவர் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை ஆண்டு இறுதிக்குள் நடத்திவிடவேண்டும் என்று சொல்லி ‘டிசம்பர் 28-ல் பொதுக்குழு’ என்றார்கள். ஆனால், ஸ்டாலின் கொஞ்சம் அப்செட் ஆகியிருந்ததால் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் வைத்திருந்தார்கள்.’’

‘‘என்ன அப்செட்டாம்?’’

‘‘ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘நான் ஊர் ஊராக அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தும் நூல் இழையில் ஆட்சியைக் கோட்டை விட்டுவிட்டோம். தலைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இதுவரை பொதுக்குழுவுக்கு தேதி குறித்த நாள் தள்ளிப் போனது இல்லை. ஆனால், இந்த முறை அதுவும் தள்ளிப்போய்விட்டது. குடும்பத்திலும் எனக்கு எதிராக ஓர் அணி உருவாகி என்னை மன உளைச்சலுக்குக் கொண்டு போய்விட்டதே...’ என்று வருத்தப்பட்டுள்ளார். பதிலுக்கு அவர்களும் ‘அ.தி.மு.க-வின் நிலைமையும் சரியில்லாமல்தான் உள்ளது. இந்த நிலையில், நாம் செய்யும் அரசியல்தான் நமக்கு பலம்’ என்று உத்வேகம் கொடுத்துள்ளனர். மேலும் 28-ம் தேதி நாளும் நல்லதாக இல்லை என்பதை சிலர் ஸ்டாலின் காதில் போட்டுவிட பொதுக்குழு எண்ணத்தில் இருந்தே அந்த நாளை அப்புறப்படுத்திவிட்டார் ஸ்டாலின்.’’

‘‘ம்!’’

‘‘அ.தி.மு.க. பொதுக்குழு  29-ம் தேதி கூடுகிறது.  அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு அதன் பிறகு நமது பொதுக்குழுவை வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் சொல்லியதும், துரைமுருகன் ஓ.கே சொல்லியுள்ளார்.
அதனால்தான் 28-ம் தேதி வைக்க வேண்டிய பொதுக்குழு அறிவிப்பு முதலில் தள்ளிப்போனது. அதன் பிறகு அன்பழகனிடம் இந்தத் தகவல் சொல்லப்பட்டதும், ‘பொதுக்குழுவுக்கு தலைவர் வந்தால்தான் நன்றாக இருக்கும். எனவே, அவரிடம் ஒரு ஒப்புதலை கேட்டுக்கொள்ளலாம்’ என்று சொல்லியுள்ளார். ஸ்டாலினோ, ‘தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதால், அடுத்த ஆண்டு முதல் வாரத்தில் பொதுக்குழுவைக் கூட்டலாம்’ என்று சொல்லியுள்ளார். ஆக, இந்த வாரம் நடக்க வேண்டிய பொதுக்குழு அடுத்த வாரம் தள்ளிவைக்க முடிவாகியது.’’

‘‘தேர்தல் கமிஷனிடம் ஒப்புதல் வாங்கி விட்டார்களா?’’

‘‘கருணாநிதியின் உடல்நிலையை சுட்டிக்காட்டி தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதில், அடுத்த மாதம் பொதுக்குழுவை நடத்த ஒப்புதல் கேட்டுள்ளனர். அங்கிருந்து ஓ.கே சொன்ன பிறகுதான், ஜனவரி 4-ம் தேதி அறிவாலயத்தில் பொதுக்குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது.’’

‘‘பொதுக்குழுவுக்கு கருணாநிதி வருவாரா?’’

‘‘கருணாநிதி வருவார். ஆனால், அவரால் பேச முடியுமா என்று தெரியவில்லை. அவருக்கு இன்னமும் குரல் சரியாக எழவில்லை என்றுதான் சொல்கிறார்கள். கருணாநிதியால் பேச முடியாத நிலை ஏற்பட்டாலும்  மேடையில் வந்து அமர்ந்துவிடுவார் என்கிறார்கள். தனக்கு பொறுப்பு கொடுக்கும் பொதுக்குழுவுக்கு தலைவரை எப்படியாவது ஸ்டாலின் அழைத்து வந்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.’’

p42v.jpg

‘‘கருணாநிதி உடல்நிலை எப்படி உள்ளது?’’

‘‘மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் கொஞ்சம் உற்சாகமாத்தான் இருந்துள்ளார். கழுத்தில் துளைபோட்டு மாட்டியுள்ள ட்யூப் இன்னும் அகற்றப்படவில்லை. அதை அகற்றுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். கருணாநிதிக்கு மருத்துவம் செய்த மருத்துவர்கள், கருணாநிதி உடல்நிலையைவிட மனநிலையினால் தான் சோர்ந்துபோய் உள்ளார். எனவே, அவர் மனநிலையை மாற்ற அவருக்கு நெருக்கமானவர்கள் தினந்தோறும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருங்கள்’ என அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘தினமும் சிறிது நேரம் உடலில் வெயில் படும்படி உட்கார வையுங்கள்’ என்றும் சொல்லியுள்ளார்கள்.’’

‘‘அப்படியா!’’

‘‘ஆமாம்! ஆனால் இதனை குடும்பத்தினர் அனுமதிக்கவில்லையாம். மருத்துவமனையில் இருந்து திரும்பி ஒருவாரம் ஆகியும் கருணாநிதியை சந்திக்க யாரையும் அனுமதிப்பது இல்லையாம். படுக்கை அறையைவிட்டுக்கூட வெளியே கொண்டுவராமல், அதே அறையில் உட்கார வைத்துள்ளனர். பேப்பரை அவர் அறையில் கொண்டு போய் வைத்துவிடுகிறார்கள். சில நேரங்களில் சேரில் அமர்ந்து டி.வி மட்டும் பார்க்கிறார். இன்னும் திட உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாததால், திரவ உணவுகளைத்தான் உட்கொண்டு வருகிறார். கருணாநிதியின் ஆஸ்தான மருத்துவர் கோபால், சிறப்பு மருத்துவர்கள் மோகன் காமேஸ்வரன், தேவராஜன் உள்ளிட்டோர் தினமும் வந்து அவரைப் பார்த்துச் செல்கின்றார்கள். ‘நன்றாக இருக்கிறார். ஆனால் உற்சாகம் இல்லாமல் இருக்கிறார்’ என்கிறார்கள் கோபாலபுரம் வீட்டில் இருப்பவர்கள்’’ என்றபடி பறந்தார் கழுகார்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.