Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ? ரவிராஜ் கொலை வழக்கும் தீர்ப்பும் ஒரு பார்வை

Featured Replies

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ?

 

ரவிராஜ் கொலை வழக்கும் தீர்ப்பும் ஒரு பார்வை

 

 

ஒரு­முறை சர்­வ­தேச பொலிஸார் அல்­லது ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் என அழைக்­கப்­படும் பொலிஸார் இலங்கை பொலி­ஸா­ருக்கு பயிற்­சி­ய­ளிக்க இலங்கை வந்­தனர். வரும்­போது கூடவே 3 குதி­ரை­க­ளையும் அவர்கள் கொண்டு வந்­தனர். அக்­கு­தி­ரை­களை அவர்கள் ஒரு காட்டில் விட்­டனர். பின்னர் பயிற்­சி­களை ஆரம்­பித்த அவர்கள் முதலில் சாதா­ரண பொலிஸ் நிலைய பொலி­ஸாரை அழைத்து தாம் கொண்­டு­வந்த குதி­ரைகள் காட்டில் காணாமல் போய்­விட்­ட­தா­கவும் அவற்றை கண்டு பிடிக்­கு­மாறும் கூறி­யுள்­ளனர்.

உடனே காட்­டுக்குள் சென்ற பொலிஸார் 3 குதி­ரை­களின் கால்­தடம் காட்டில் உள்­ள­தா­கவும் அதனால் அவை அங்கு சென்­றமை உறுதி எனவும் அறி­வித்­த­துடன் எனினும் அதனை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை எனவும் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் காட்­டினுள் அனுப்­பப்­பட்­டனர். அவர்கள் காடு முழு­வதும் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­விட்டு குதி­ரைகள் எதுவும் காட்டில் இல்லை எனவும் அப்­படி இருந்­தி­ருப்பின் தமது நட­வ­டிக்­கையில் அவை இறந்­தி­ருக்க வேண்டும் எனவும் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து எஸ்.ஐ.யூ. எனப்­படும் விசேட விசா­ரணை பிரி­வினர் அனுப்­பப்­பட்­டனர். வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்த அவர்கள் அப்­படி 3 குதி­ரைகள் காட்­டுக்குள் செல்­லவே இல்­லை­யென்­றனர்.

இத­னை­ய­டுத்து விசா­ர­ணைகள் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விடம் (சி.ஐ.டி) கைய­ளிக்­கப்­பட்­டன. விசா­ர­ணையை பொறுப்­பேற்ற அவர்கள் காட்­டுக்குள் சென்று விசா­ரணை செய்­தனர். பின்னர் காட்டில் இருந்த 3 கர­டி­களை பிடித்துக் கொண்டுவந்து இதோ இவைதான் காட்­டுக்குள் தொலைத்த உங்கள் குதி­ரைகள் என சி.ஐ.டி.யினர் தெரி­வித்­தனர். அதில் ஒரு கர­டி­யிடம் தான் காட்டில் தொலைந்த குதி­ரைகள் என வாக்கு மூலமும் பதிவு செய்­த­னராம். மேலுள்ள நகைச்­சுவை கதை ரவிராஜ் கொலை வழக்கின் பிர­தி­வா­திகள் சார்பில் தொகுப்­புரை வழங்­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனோஜ பிரே­ம­ரத்ன தொகுப்­பு­ரையை ஆரம்­பிக்க கூறிய குட்டிக் கதை. இதன்­போது பிர­தி­வாதிக் கூண்­டி­லி­ருந்த மூவ­ரையும் காட்டி அந்த கர­டி­களின் நிலைதான் இவர்­களின் நிலை என்றார். வழக்கின் தீர்­ப்பைய­டுத்து கடந்த நவம்பர் 22 ஆம் திகதி முதல் 22 நாட்கள் கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­திய தில­கவின் மேற்­பார்­வையில் சிங்­களம் பேசும் சிறப்பு ஜூரிகள் முன் இடம் பெற்ற சாட்சி விசா­ர­ணைகள், குறுக்கு விசா­ர­ணைகள், தொகுப்­பு­ரைகள் மீது மீள ஒரு முறை அவ­தானம் செலுத்தும் போது அக்­க­தையின் உள்­ள­டக்­கத்தில் வழக்கின் தீர்ப்பின் யதார்த்தம் இருப்­பதை அவ­தா­னிக்க முடிந்­தது.

ஆம், கடந்த 2006.11.10 ஆம் திக­தி­யன்று காலை தனியார் தொலைக்­காட்­சி­யொன்றின் நேரடி நிக­ழச்­சி­யொன்றில் கலந்து கொண்ட ரவிராஜ் பின்னர் வீட்­டுக்கு வந்து அங்­கி­ருந்து புதுக்­க­டையில் உள்ள தனது சட்­டத்­த­ரணி அலு­வ­ல­கத்­துக்கு செல்லும் போது சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருந்தார். ரவிராஜுடன் பய­ணித்த அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரான லொகு­வெல்ல முரகே லக் ஷ்மன் என்ற பொலிஸ் கான்ஸ்­ட­பிளும் கொல்­லப்­பட்­டி­ருந்தார்.

இது தொடர்பில் 2006 ஆம் ஆண்டு முதல் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு விசா­ர­ணை­களை செய்­து­வந்­தது. இக்­கு­ழு­வுக்கு பொலிஸ் பரி­சோ­தகர் அம­ர­வன்ச பொறுப்­பாக செயற்­பட்டார்.

2008 ஆம் ஆண்டு ஆகும் போது இவ்­வி­சா­ர­ணை­களில் பிரித்­தா­னி­யாவின் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலி­ஸாரும் இணைந்து கொண்­டனர்.

விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட காலப்­ப­கு­தியில் கொலை­யா­ளி­கள் தப்பிச் சென்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் மோட்டார் சைக்கிள் இலக்­கத்தை மையப்­ப­டுத்தி இருவர் கைது செய்­யப்­பட்­டனர். சுமார் ஒன்­றரை வருட விளக்­க­ம­றி­யலின் பின்னர் அவர்­க­ளுக்கும் குறித்த சம்­ப­வத்­துக்கும் சம்­பந்தம் இல்லை என அவர்கள் விடு­விக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்­சி­மாற்றம் வரையில் எவரும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­ப­ட­வில்லை. 2015ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் அம­ர­வன்ச மீளவும் நார­ஹேன்­பிட்டி சென்று இவ்­வி­வ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்தார். அதன் பிர­தி­ப­ல­னாக ரவி­ராஜை நார­ஹேன்­பிட்டி மாதா வீதி­ய­ருகே கொலை செய்த சந்­தேக நபரை மோட்டார் சைக்­கிளில் அழைத்துச் சென்ற ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபிள் விஜே­விக்­ரம பிரித்­தி­விராஜ் மனம்பேரி பொலி­ஸா­ருக்கு நடந்­த­வற்றை கூறி­யி­ருந்தார்.

அதன்­படி 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ரவிராஜ் படு­கொலை விவ­கா­ரத்தின் கைது படலம் ஆரம்­ப­மா­னது. அதன் பிர­தி­ப­ல­னாக 4 கடற்­படை வீரர்கள் கைது செய்­யப்­பட்ட நிலையில் அவர்­களில் ஒருவர் நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணை­களின் போதே விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து கருணா குழு­வி­னரின் இருவர், பொலிஸ் உள­வுத்­து­றையின் முன்னாள் கான்ஸ்­டபிள் ஆகி­யோரும் கடற்­படை புல­னாய்­வா­ளர்­களும் இணைந்து ரவிராஜ் மற்றும் அவ­ரது பாது­கா­வலர் ஆகி­யோரை கொலை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டனர். குற்றம் சுமத்­தப்­பட்ட கடற்­படை புல­னாய்­வா­ளர்கள் மூவரும் 2006 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் விசேட திட்­டத்தின் கீழ் தேசிய உள­வுத்­து­றையின் கீழ் பணி­யாற்­றி­ய­வர்கள் என விசா­ர­ணை­களில் உறு­தி­யா­னதை அடுத்து ரவிராஜ் கொலை­யுடன் உளவுத்துறை தொடர்­பு­பட்­டதா என்ற பாரிய சந்­தேகம் எழுந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி சட்­டமா அதிபர் ஜயந்த சந்­தி­ர­சிறி ஜய­சூ­ரிய ரவிராஜ் கொலை தொடர்பில் 6 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக CRI/104/2016 எனும் இலக்­கத்தின் கீழ் கொழும்பு மேல் நீதி­மன்றில் குற்­றப்­பத்­தி­ரி­கையை தாக்கல் செய்தார். HC 8331/16 எனும் மேல்­நீ­தி­மன்ற குற்­ற­வியல் வழக்­கி­லக்­கத்தின் கீழ் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்ட இவ்­வ­ழக்கில் கருணா குழுவைச் சேர்ந்த பழனிச் சாமி சுரேஷ் அல்­லது சாமி, கடற்­படை லெப்­டி­ன­னான ஹெட்டி ஆரச்சி முதி­யன்­ச­லாகே பிரசாத் சந்­தன குமார அல்­லது சம்பத், கடற்­ப­டையின் கப்பல் கெப்­ட­னான (14809 SS) தெலி­வல கெதர காமினி சென­வி­ரத்ன, கடற்­ப­டையின் சிரேஷ்ட உத்­தி­யோ­கத்தர் (SNCO – SS 10625) கங்­கா­னம்­லாகே பிரதீப் சாமிந்த அல்­லது வஜிர, கருணா குழுவின் சிவ­காந்தன் விவே­கா­னந்தன் அல்­லது சரண் மற்றும் தேசிய உளவுத் துறையின் முன்னாள் கான்ஸ்­டபிள் பேபியன் ரொய்ஸ்டன் டூசேன் ஆகிய அறுவர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த 6 பேருக்கும் எதி­ராக 5 குற்­றச்­சாட்­டுக்கள் சட்­டமா அதி­பரால் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. அதில் 3 குற்­றச்­சாட்­டுக்கள் 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்­டங்கள் ஊடாக திருத்­தப்­பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தின் கீழும் ஏனைய இரு குற்­றச்­சாட்­டுக்­களும் தண்­டனை சட்­டக்­கோ­வையின் கீழும் இருந்­தன.

குறிப்­பாக வழக்குத் தொடுநர், முறைப்­பாட்­டாளர் தரப்பு அறி­யா­த­வர்­க­ளுடன் சேர்த்து ரவிராஜ் மற்றும் அவ­ரது சார­தியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்­டி­யமை, கொலை செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2(1) அ அத்­தி­யா­யத்­துடன் இணைத்து கூறப்­படும் 3 (ஆ) அத்­தி­யா­யத்தின் கீழும் 2(2)(i) அத்­தி­யா­யத்தின் கீழும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றங்­களை புரிந்துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­விட தண்­டனை சட்­டக்­கோ­வையின் 296 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழும் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் முத­லா­வது பிர­தி­வா­தி­யான பழ­னி­ச்சாமி சுரேஷ் அல்­லது சாமி வெள்ளை வேனில் கடத்­தப்­பட்டு காணாமல் போயுள்­ள­தாக நீதி­மன்றில் சாட்­சிகள் நெறிப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் அவர் மர­ணித்து விட்­ட­தாக நீதி­மன்றம் தீர்­மா­னித்­தது.

இந்­நி­லையில் ஏனைய பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. அத்­துடன் ஏனைய பிர­தி­வா­தி­களில் இருவர் (சரண், டூசேன்) மன்றில் ஆஜ­ரா­காது இருந்­து­வந்த நிலையில் அவர்கள் இல்­லா­ம­லேயே அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரணை செய்ய குற்­ற­வியல் சட்­டத்தின் 241 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய தீர்­மா­னித்­தது.

இத­னை­ய­டுத்து ரவிராஜ் படு­கொலை விசா­ர­ணை­களை சிங்­களம் பேசும் ஜூரிகள் முன்­னி­லையில் விசா­ரணை செய்ய வேண்டும் என பிர­தி­வா­திகள் தரப்பில் கோரப்­பட்­டது. எனினும் அப்­போது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான கே.வி.தவ­ராசா, எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் உள்ள போது பிர­தி­வா­திகள் ஜூரி விசா­ர­ணை­களை கோர முடி­யாது என அவர்கள் வாதிட்­டனர். எனினும் தண்­டனை சட்­டக்­கோ­வையின் கீழும் இரு குற்­றச்­சாட்­டுக்கள் இருந்த நிலையில் ஜூரி­களை கோரும் உரிமை தமக்கு உள்­ளது என பிர­தி­வா­திகள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளான அனுஜ பிரே­ம­ரத்ன, ரசிக பால­சூ­ரிய, அஜித் சிறி­வர்­தன ஆகியோர் வாதிட்­டனர்.

இதன்­போது தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­திய சட்­டமா அதிபர் சாதா­ரண ஜூரிகள் சபை முன் அல்­லாது சிறப்பு ஜூரிகள் சபை முன் விசா­ரணை செய்ய முடியும் என ஆலோ­சனை வழங்­கினார். சட்­டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய, சிரேஷ்ட அரச சட்­ட­வாதி சுகர்சி ஹேரத் ஆகியோர் இந்த நிலைப்­பாட்­டினை மன்­றுக்கு தெளி­வு­ப­டுத்­தினர்.

இறு­தியில் சிங்­களம் பேசும் சிறப்பு ஜூரிகள் முன் ரவிராஜ் மற்றும் அவ­ரது பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் கொலை தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நீதி­பதி மணிலால் வைத்­திய திலக அனு­மதி வழங்­கினார்.

அதன்­பி­ர­காரம் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி சிங்­களம் பேசும் சிறப்பு ஜூரிகள் சபை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­துடன் அன்று முதல் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

தொடர்ச்­சி­யாக ஒவ்­வொரு நாளும் விசா­ர­ணைக்கு வந்த இந்த வழக்கு 22 நாட்கள் விசா­ரணை செய்­யப்­பட்டு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. இதன்­போது மன்­றுக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்த 68 பேர் கொண்ட சாட்சிப் பட்­டி­யலில் 25 சாட்­சிகள் விசா­ரணை செய்­யப்­பட்­ட­துடன் 34 ஆவ­ணங்கள் மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

சாட்சி விசா­ர­ணை­களை தொடர்ந்து வழக்கின் 22 ஆவது நாளன்று அனைத்து தரப்­பி­ன­ரதும் தொகுப்­பு­ரைகள் அல்­லது சமர்ப்­ப­ணங்கள் மன்றில் முன்­வைக்­கப்­பட்­டன.

இவ்­வ­ழக்­கா­னது பிர­தா­ன­மாக குற்­றத்­துக்கு உடந்­தை­யாக இருந்து சட்­டமா அதி­பரின் நிபந்­தனை மன்­னிப்பை பெற்ற அரச சாட்­சி­யான முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­திவிராஜ் மனம் பேரியின் சாட்­சி­யத்­தையே முக்­கி­ய­மாக கொண்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. இவ­ரது சாட்­சியம் மட்டும் சுமார் 5 நாட்கள் மன்றில் பதிவு செய்­யப்­பட்­டது. இதன் போது குறுக்குக் கேள்­வி­களை தொடுத்த பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணிகள் அவ­ரது நம்­ப­கத்­தன்­மையை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது.

எனினும் சமர்ப்­ப­ணத்தின் போது அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய அரச சாட்­சி­யான பிரித்­வி­ராஜின் நம்­ப­கத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்த கடும் பிர­யத்­த­னத்­தினை முன்­னெ­டுத்தார்.

குற்­றத்­துக்கு உடந்­தை­யாக இருந்­த­வரின் சாட்­சியம் ஏனைய சாட்­சிகள் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில் அதனை ஏற்­றுக்­கொள்ள வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.

அத்­துடன் குற்­றப்­பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முறைப்­பாட்­டாளர் தரப்பு அறி­யா­த­வர்­க­ளுடன் சேர்ந்து சதி செய்து என்ற பதத்தில் ‘அறி­யா­த­வர்­களை’ மன்றில் உறு­திப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு தமக்கு இல்லை என பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் கூறினார்.

இத­னை­விட இவ்­வ­ழக்கில் பிர­தா­ன­மாக சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட டீ.என்.ஏ. விவ­கா­ரத்­துக்கும், ரொஹந்த அபே­சூ­ரிய பதி­ல­ளித்தார். ஸ்கொட்லன்ட் யார்ட் முன்­னெ­டுத்த டீ.என்.ஏ. சோத­னை­களை மையப்­ப­டுத்­திய குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­ப­டு­வோ­ருக்கு மரண தண்­டனை அளிக்கக் கூடாது என்ற நிபந்­த­னையை நிரா­க­ரித்­த­வர்கள் அதனை பூர்த்தி செய்ய முடி­ய­வில்லை என அவர் விளக்­க­ம­ளித்தார்.

எனினும் தொகுப்­பு­ரையை வழங்­கிய பாதிக்­கப்­பட்ட தரப்பின் சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் பிர­தி­வாதி கூண்டில் இருந்து மூன்று பிர­தி­வா­தி­க­ளையும் சுட்­டிக்­காட்டி அவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக ரவி­ராஜை கொலை செய்ய உத்­த­ர­விட்­ட­வர்­களும் மன்றில் நிறுத்­தப்­படல் வேண்டும் என்றார்.

அதன் பின்னர் பிர­தி­வா­திகள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான யுரான் லிய­னகே, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்ன ஆகி­யோரின் தொகுப்­பு­ரைகள் இடம் பெற்­றன. இதன்­போது சட்­டத்­த­ரணி யுரான் லிய­னகே பிர­தான அரச சாட்­சியின் நம்­ப­கத்­தன்­மை­யையும் சாட்­சி­களின் பரஸ்­ப­ர­தன்­மை­யையும் கேள்­விக்­குட்­ப­டுத்­தினார்.

குறிப்­பாக பிர­தி­வா­தி­யான லெப்­டினன் பிர­சாந்தை இரு மாதங்­க­ளாக தான் அறிந்­தி­ருந்­த­தாக அரச சாட்­சி­யான பிர­தி­வாதிக் கூறிய போதும் அது பொய் என்­பது முறைப்­பாட்­டாளர் தரப்பின் ஏனைய சாட்­சிகள் ஊடா­கவே நிரூ­ப­ண­மா­ன­தாக அவர் சுட்­டிக்­காட்டி வாதிட்டார்.

இத­னை­விட குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ர­ணை­க­ளிலும் மன்றில் முன்­வைத்த சாட்­சி­களில் குறை­பா­டு­க­ளையும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரட்ன கடு­மை­யாக விமர்­சித்தார். குறிப்­பாக ஸ்கொட்லன்ட் யார்ட் பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து வழக்கின் தடயப் பொருட்கள் மீளப் பெறப்­பட்ட பின்­னரே அரச இர­சா­யன பகுப்­பாய்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அப்­ப­டி­யாயின் டீ.என்.ஏ.மட்டும் ஏன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை? நாட­ளா­விய ரீதியில் ஜீன் டெக் நிறு­வ­னத்தில் டீ.என்.ஏ. பரி­சோ­தனை முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில் இவ்­வ­ழக்கில் மட்டும் ஏன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என கேள்வி எழுப்­பி­ய­துடன் தமது தரப்­பி­ன­ரிடம் இரத்த மாதி­ரி­களை கூட பெற்ற புல­னாய்வுப் பிரி­வினர் ஏன் டீ.என்.ஏ. பரி­சோ­தனை செய்­ய­வில்லை எனவும் அவ்­வாறு செய்தால் உண்மை குற்­ற­வாளி உறு­தி­யாவர் அல்­லவா எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­விட குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் வழக்­கொன்றின் பிர­தான சாட்­சி­ய­மாக தொலை­பேசி வலை­ய­மைப்பு பகுப்­பாய்வு அறிக்கை பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது வழமை. ரவிராஜ் கொலை­யா­ளிகள் தொலை­பே­சி­யூ­டாக தொடர்­பு­பட்­டி­ருந்­தனர் என சாட்­சியம் உள்ள நிலையில் ஏன் தொலை­பேசி வலை­ய­மைப்பு பகுப்­பாய்வு அறிக்கை சாட்­சி­யாக மன்றில் சமர்­பிக்­கப்­ப­ட­வில்லை என அவர் பிர­தா­ன­மாக கேள்வி எழுப்­பினார்.

இத்­த­கையை பல்­வேறு குறை­பா­டு­க­ளு­ட­னேயே ரவிராஜ் கொலை வழக்கில் புல­னாய்வுப் பிரிவு சாட்­சி­களை மன்றில் ஆஜர் செய்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் கடந்த 24 ஆம் திகதி அதி­காலை 12.20 மணிக்கு தீர்ப்­ப­றி­வித்த நீதி­மன்றம் பிர­தி­வா­திகள் அனை­வ­ரையும் ஜூரிகள் சபையின் தீர்­மா­னத்­துக்கு அமைய நிர­ப­ரா­திகள் என அறி­வித்து விடு­தலை செய்­தது.

வழக்கின் தீர்ப்பின் பின்னர் பலரும் பல­வி­த­மான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். குறிப்­பாக சிங்­கள சிறப்பு ஜூரிகள் சபையை சிலர் விமர்­சித்­துள்­ளனர். ஜூரிகள் சபையை கோரு­வது பிர­தி­வா­திகள் உரிமை என்ற ரீதியில் அதனை விமர்­சிப்­பதில் நியா­ய­மில்லை. குறிப்­பாக ஜூரிகள் சபையின் அவ­தா­னத்தை பெற பிர­தி­வா­திகள் தரப்பு 'நாட்டை காத்தவர்கள்' என தம்மை அடிக்கடி விளிக்கவும் சுட்டிக்காட்டவும் தவறவில்லை என்பதும் முக்கியமான விடயமாகும்.

பிரதானமாக குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டோர் "முறைப்பாட்டாளர் தரப்பு அறியாதோருடன் இணைந்து" ரவிராஜை கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது. சாட்சிகள் கட்டளை சட்டத்தின் பிரகாரம் குற்றத்துக்கு தூண்டியோர் அல்லது உத்தரவிட்டவர்கள் விசாரணை ஊடாக உறுதிப்படுத்தப்படின் அது அக்குற்றத்துக்கான பிரபலமான சாட்சியாகும். அப்படி இருக்கையில் அதனை உறுதிப்படுத்த விசாரணையாளர்களும் முறைப்பாட்டாளர் தரப்பும் முயற்சிக்காமை மிகப் பெரிய ஓட்டையாகும்.

இதனைவிட விசாரணையாளர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் டீ.என்.ஏ. பகுப்பாய்வு, தொலைபேசி வலையமைப்பு பகுப்பாய்வு தொடர்பில் அவதானம் செலுத்தாமை விசாரணைகள் மீதான நம்பிக்கையை சிதைக்கும் காரணியாகும்.

இவ்வாறான காரணிகளே ரவிராஜ் கொலையை யார் செய்தார்கள் என்ற கேள்வியை இன்று தோற்றுவித்துள்ளது. கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்ட நகைச்சுவைக்கதையுடன் வழக்கின் தீர்ப்பை ஒப்பிடும் போது அக்கதையின் யதார்த்தத்தை உணர்ந்தும் தீர்ப்பாக வழக்கில் பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட பிரதான காரணிகளை மையப்படுத்தி யோசிக்க வைக்கிறது.

தற்போது இவ்வழக்கில் மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் ரவிராஜை கொலை செய்ய உத்தரவிட்டவர்கள் சுதந்திரமாக இருக்க அரைகுறை விசாரணை அறிக்கையை வைத்துக் கொண்டு மேன்முறையீட்டு நடவடிக்கைக்கு செல்வதும் சிந்திக்க வேண்டிய விடயமே!

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.