Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘செல்லாக்காசு’... விரிசல் விழுந்த ம.ந.கூ.

Featured Replies

‘செல்லாக்காசு’... விரிசல் விழுந்த ம.ந.கூ.

 

 

.தி.மு.க., தனது புதிய தலைமையைத் தேர்வு செய்துள்ளது. தி.மு.க தனது தலைமையை உறுதிசெய்கிற முடிவில் இருக்கிறது. இத்தகைய அரசியல் சூழலில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகுவதாக, அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைகோ வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வைகோ விலகலுக்கு, பிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ நடவடிக்கை தொடர்பான கருத்துவேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையான காரணங்கள் வேறு!

p10.jpg

ருங்கிணைப்பாளர் பதவி ‘நோ’!

கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முதலில் எடுத்தவர் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன். இந்த முழக்கத்தை தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் ஏற்காது என்பதால் மூன்றாவது அணியை அமைக்க அவர் முயற்சித்தார். கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து திருமாவளவன் நடத்திய கருத்தரங்கில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. ‘இது அரசியல் கூட்டணியாக மாறும்’ என்று அந்தத் தலைவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். திருமாவளவன் தூண்டுதலில் வைகோவைச் சந்தித்தார் ஜி.ராமகிருஷ்ணன். வைகோ சம்மதித்த பிறகு இது அரசியல் கூட்டணியாக மாறியது.

கூட்டணியின் தலைவராக வைகோ நியமிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘ஒருங்கிணைப்பாளர்’ என்று சொன்னால்போதும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியது. இது வைகோவுக்கு வேதனையை ஏற்படுத்தியது. தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் தான் கூட்டணிக்குள் வருவேன் என்று விஜயகாந்த் சொன்னார். அதை வைகோ ஏற்கவில்லை. ‘நீங்கள் ஏற்காவிட்டால் விஜயகாந்த் வரமாட்டார்’ என்று கட்டாயப்படுத்தி திருமாவும், இடதுசாரிகளும் அவரை சம்மதிக்க வைத்தார்கள். பின்னர், விஜயகாந்தை ஏற்றுக்கொண்ட வைகோ, ‘இது கேப்டன் அணி’ என்று சொன்னதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட மோதல்களுடன்தான் அந்தக் கூட்டணி செயல்பட்டு வந்தது.

வைகோ பல்டி!

கோவில்பட்டி தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்த வைகோ, கடைசி நிமிடத்தில் போட்டியிடப்போவதில்லை என்று திடீரென அறிவித்தார். இந்த முடிவை எடுப்பதற்கு முன் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் வைகோ கலந்து பேசவில்லை என்று விஜயகாந்த், திருமா, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வருத்தப்பட்டார்கள். ‘நான் போட்டியிடப் போகிறேன் என்றுதான் கோவில்பட்டி தொகுதியை அவர் கேட்டு வாங்கினார். தான் போட்டியிடவில்லை என்றால் எங்களுக்குத் தந்திருக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொன்னது. இந்த மனநிலையில்தான் அவர்கள் தேர்தலைச் சந்தித்தார்கள். தேர்தலில் படுதோல்வியை அடைந்தார்கள். `மக்கள் நலக்கூட்டணிக்குத் தோல்வி ஏற்பட்டாலும், உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடர்ந்து இயங்கும்’ என்று திருமாவளவன் அறிக்கை வெளியிட்டார். ஆனால், எந்த இயக்கமும் இல்லாமல் அவர்கள் நாட்களை நகர்த்தி வந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியபோது, மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, சில விஷயங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கறாராகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, ‘ஆரம்பத்தில், உங்களை நாங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டோம். ஆனால், இப்போது கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் தேவையில்லை என்று நினைக்கிறோம். இதனை ஏற்றுக்கொண்டால் சந்திக்கலாம்’ என்று பேசியுள்ளனர். அதைக் கேட்டு வைகோ அப்செட் ஆகிவிட்டாராம்.  ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ‘நோ’ என்று சொன்னதுதான், வைகோ விலகலுக்கு விழுந்த முதல் விதை என்கிறார்கள்.

p10a.jpg

பிளவுக்கான அகலப்பாதை!

 காவிரிப் பிரச்னைக்காக தி.மு.க நடத்திய விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றதால் ம.ந.கூட்டணிக்குள் சலசலப்பு சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது. வைகோ, இது குறித்து அந்தக் கூட்டணியில் இருந்த தலைவர்களிடம் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளார். ‘ஒற்றுமையாக இருக்கலாம் என்று எண்ணுகிறபோது இப்படி முன்னணி நிர்வாகிகள், வேறு ஒரு கட்சியின் கூட்டத்துக்குச் செல்கிறார்கள். ஸ்டாலினையும் சந்திக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? இது சரியா?’ என்று வைகோ கேட்டுள்ளார். ‘தி.மு.க-வோடு நல் இணக்கமான உறவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இதன்மூலம், இவர்கள் தி.மு.க பக்கம் நகர்கிறார்கள்’ என்று வைகோ நினைத்தார்.அடுத்து ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க திருமாவளவன் நினைத்தார். அதனை வைகோவும் இடதுசாரிகளும் ஏற்கவில்லை.‘எல்லாப் பிரச்னைகளையும் தேர்தல் அரசியலுடன் சேர்த்துப் பார்க்கவேண்டியது இல்லை. மக்கள் பிரச்னைகளில் ஒன்று சேர்ந்து போராடுவது தவறு இல்லை” என்று திருமா சொன்னார். அதனை மற்றவர்கள் ஏற்கவில்லை.

 சூட்டைக் கிளப்பிய இடைத்தேர்தல்!

 மக்கள் நலக் கூட்டணி சார்பாக பிரதமரைச் சந்திக்கும் வைபவமும் நடந்தது. டெல்லி சென்ற இந்த தலைவர்கள், தமிழகத்தில் நடக்க இருந்த மூன்று தொகுதி இடைத்தேர்தல் பற்றி பேசினார்கள். இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று வைகோவும், திருமாவும் முடிவெடுத்தார்கள். இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி நினைத்தது.

குறிப்பாக, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தமது கட்சி போட்டியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டார நிர்வாகிகள் நினைத்தார்கள். தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சி சொன்னது. இதனால் கோபம் அடைந்தார் வைகோ. “போட்டியிடப் போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு, பின்னர் போட்டியிடுகிறேன் என்று என்னால் அறிவிக்க முடியாது. இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று வைகோ கூறினார். ‘‘வைகோ ம.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கலாம், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் செயலாளராக ஆக நினைக்கக் கூடாது” என்று மார்க்சிஸ்ட் தலைவர் ஒருவர் கமென்ட் அடித்தார்.

நாராயணசாமிக்கு வி.சி.க ஆதரவு!

புதுச்சேரியில் மக்கள் நலக் கூட்டணியில் ஏழு கட்சிகள் உள்ளன. அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் அமைப்பாளராக உள்ளார். புதுச்சேரி தேர்தலில் ஆதரவுக்கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி, கட்சிகளுக்கு கடிதம் கொடுத்துள்ளார். அதில் ம.தி.மு.க-வைத் தவிர்த்து விட்டு விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்குக் கடிதம் கொடுத்துள்ளார். அ.தி.மு.க நம்மை அணுகாதபோது, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் முடிவு செய்தனர்.

விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு நடவடிக்கையை வைகோவால் ஜீரணிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.  மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுக்குள் அவ்வப்போது எழும் கருத்துவேறுபாடுகளை அவர்களே சரிசெய்ய முயன்று, கூட்டணி உடையாதவாறு பார்த்துக் கொண்டார்கள் என்றும் சொல்கின்றனர்.

முடிவை உறுதிசெய்த ‘செல்லாக்காசு’!

 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், வைகோ மட்டும் மோடியின் அறிவிப்பை ஆதரித்தார். ‘செல்லாக்காசு’ நடவடிக்கைக்கு எதிராக வி.சி.க மாநாடு நடத்தியது. அதில் பங்கேற்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இசைவு தெரிவித்தனர். ஆனால், அதில் பங்கேற்க முடியாது என்று வைகோ மறுத்துவிட்டார். இந்தக் கருத்துவேறுபாட்டைக் காரணமாக வைத்து வெளியேறுவது என்று வைகோ முடிவெடுத்தார்.

‘‘பி.ஜே.பி-யை ஆதரிப்பது, மோடியைப் போய் பார்ப்பது என்று வைகோவின் செயல்பாடுகள் மக்கள் நலக்கூட்டணியின் நிலைப்பாடுகளுக்கு விரோதமாக இருந்தன. அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணிதான் நாடாளுமன்றத் தேர்தலில் அமையும்.அதில் சேர்ந்து எப்படியாவது எம்.பி ஆக வைகோ நினைக்கிறார். அதற்காக அவராகவே வெட்டிக்கொண்டு போய்விட்டார்” என்று இவர்கள் சொல்கிறார்கள். ‘‘எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் வைகோதான் இந்தக் கூட்டணிக்கு மொத்தமாக செலவு செய்தார். இவர்கள் ஒப்புக்கு மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு வந்து போகிறார்கள். இவர்களுக்கு ஓட்டும் இல்லை’’ என்று ம.தி.மு.க நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளிகள் இருப்பதைப் போலத்தான் இவர்கள் இருந்துள்ளார்கள்!

http://www.vikatan.com/juniorvikatan/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.