Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஜெ. வெற்றிடத்தை வைகோவால் நிரப்ப முடியாது! - திருமா அதிரடி

Featured Replies

“ஜெ. வெற்றிடத்தை வைகோவால் நிரப்ப முடியாது! - திருமா அதிரடி

 

 

“மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும்” என்று சொல்கிறார், இந்த அணியைத் தொடங்குவதற்கு முன்முயற்சி எடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

p36.jpg

“மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளாரே?”

“கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்ணன் வைகோ அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக மக்கள் நலக் கூட்டணியை மிகச் சிறப்பாக வழி நடத்தியவர்.  ஒருங்கிணைந்து போராடுவது என்கிற புரிதலோடு இயங்கி வந்தோம். நான்கு கட்சிகளுக்குள் முரண்பாடு எழுகிறபோது, மனம் திறந்து பேசி ஒருமித்த முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த நிலையில், ஒருவர் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்பது சற்று அதிர்ச்சியைத் தருகிறது. கூட்டணியில் இருந்து விலகினாலும் எங்களுடைய நட்பு தொடரும் என்று அவர் அறிவித்திருப்பதை வரவேற் கிறேன்.”

“வைகோவின் முடிவுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளனவா?”

“இதை என்னால் யூகிக்க முடியவில்லை. எங்களுக்குள் இருக்கும் ஒரே முரண்பாடு `500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற மோடியின் அறிவிப்பை அவர் வரவேற்று அறிக்கை வெளியிட்டதுதான். விடுதலைச் சிறுத்தைகள் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இடதுசாரிகளும் பிரதமரின்  நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தனர். மக்கள் நலக் கூட்டணியில் மூன்று கட்சிகள் ஒரு நிலைப் பாட்டையும், ம.தி.மு.க வேறு நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டிய சூழல் அமைந்துவிட்டது.”


‘‘கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து வைகோ உங்களிடம் பேசினாரா?”

‘‘என்னிடம் இதுகுறித்துப் பேசவில்லை. இடதுசாரி கட்சிகளின் தலைவர்களோடு பேசினாரா என்பது எனக்குத் தெரியாது. விலக முடிவுசெய்துவிட்ட பிறகு விவாதிக்கத் தேவையில்லை என்றும் கருதியிருக்கலாம்.”

“காவிரிப் பிரச்னை தொடர்பாக தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கெடுப்பதா, வேண்டாமா என்பதில் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தனவே?”

‘‘ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என்ற முடிவை எடுத்தார்கள். காவிரிப் பிரச்னை குறித்த கூட்டம் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டாம் என்று நாங்கள்தான் கூறினோம். பெரும்பான்மைக் கருத்து அடிப்படையில், தி.மு.க நடத்துகிற கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என்று முடிவு எடுத்தோம். வைகோ விரும்பியபடி, தி.மு.க கூட்டிய கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கவில்லை. எனவே, இது மோதலுக்குக் காரணம் அல்ல.”

“மக்கள் நலக் கூட்டணியில் வைகோ இருந்தபோது, தி.மு.க-வை அவர் கடுமையாக எதிர்த்தார். இப்போது அவர் விலகிவிட்டதால், தி.மு.க-வுடன் மக்கள் நலக் கூட்டணி நெருங்குமா?”

“வைகோ இருந்தபோது ஒரு நிலைப்பாடு, இல்லாதபோது ஒரு நிலைப்பாடு என்றெல்லாம் கிடையாது. மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை 5 கட்சிகளா, 3 கட்சிகளா என்பது அல்ல. மாற்றுசக்தியாக தமிழக  அரசியலில் வளர வேண்டும், புதிய திருப்பங்களை உருவாக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.”

“ஜெயலலிதா மறைவு, பிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ அறிவிப்பு போன்றவற்றைவைத்து, அரசியல் நகர்வை வேறுபக்கம் கொண்டு செல்ல வைகோ இந்த முடிவு எடுத்துள்ளாரா?”

“அது அவருக்கு மட்டுமே வெளிச்சம். மோடியைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி தமிழகத்தில் வளரவேண்டும் என்றுதான் விரும்புவார். ஜெயலலிதா அம்மையார் மறைந்துவிட்ட காரணத்தினால், அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்தி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அ.தி.மு.க-வுக்குத்   தலைமை இல்லை என்ற காரணத்தினால், ம.தி.மு.க-வை வலிமைப்படுத்திவிட முடியும் என்று வைகோ இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்று என்னால் சொல்ல இயலவில்லை. அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அந்தக் கட்சியே நிரப்பிக்கொள்ளும். மற்றொரு கட்சி வந்து அதனை நிரப்ப முடியாது. அ.தி.மு.க-வைத் தள்ளிவிட்டு தி.மு.க-வுக்கு எதிராக அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி  வரமுடியாது.”

 

p36a.jpg

“மக்கள் நலக் கூட்டணியின் அடுத்த செயல்பாடு?”

“புதுச்சேரி மாநாட்டுக்குப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூடி, மக்கள் நலக் கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், அதன் வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களை குறித்து விவாதிக்க இருக்கிறோம். மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவோம்.”

http://www.vikatan.com/juniorvikatan

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.