Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் பதவி! சசிகலாவுக்கு தம்பிதுரை முக்கிய கோரிக்கை

Featured Replies

முதல்வர் பதவி! சசிகலாவுக்கு தம்பிதுரை முக்கிய கோரிக்கை

sasikala_new_1a_11504.jpg

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் பேசிய சசிகலா, "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்" என்றார்.

பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு முன்பே, அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என்று வலியுறுத்தினாரே தவிர, அவர் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று கூறியதாக தெரியவில்லை.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கோரிக்கை வைத்துள்ளார்.

அதிமுக தொண்டர்களின் மனநிலையை ஏற்று விரைவாக சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் தனித்தனியாக இருப்பது ஏற்புடையதல்ல, ஒருவரிடமே இருக்க வேண்டும் என்றும், ஒரே இடத்தில் இருந்தால்தான் அதிமுக பணிகள், அரசு திட்டங்களை செய்ய இயலும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், சசிகலா முதலமைச்சராவது தமிழகத்திற்கும், அதிமுகவுக்கும் மிகவும் இன்றியமையாதது என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/76562-thambi-durai-requests-saikala-to-take-tamilnadu-cheif-minister-charge.art

  • தொடங்கியவர்

சசிகலா முதல்வராக கோகுலஇந்திரா- பா.வளர்மதி ஆதரவு

முதல் அமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று கோகுல இந்திராவும் பா.வளர்மதியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 
சசிகலா முதல்வராக கோகுலஇந்திரா- பா.வளர்மதி ஆதரவு
 
சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா முதல்- அமைச்சராக வேண்டும் என்று அமைச்சர்கள் உதய குமார், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்களும் பல்வேறு நிர்வாகிகளும் வலியுறுத்தினார்கள்.

முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திராவும் முதல்- அமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அமைச்சர்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது மரியாதை வைத்துள்ளார்கள். ஆனால் தலைவர்கள், கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்டிமென்டாக சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதியும் சசிகலா முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ஜெயலலிதாவோடு நீண்ட காலம் உடன் இருந்து எல்லா நிலைகளிலும் பணியாற்றியவர்.

இந்த இக்கட்டான நேரத்தில் கட்சியை கட்டுப்பாட்டுடன் வழி நடத்தும் தகுதி பெற்றவர் அவர். பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளராக சம்மதம் தெரிவித்து பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

கட்சி பதவி மட்டுமின்றி அவர் முதல்- அமைச்சராகவும் பொறுப்பேற்பதை அனைவரும் விரும்புகிறோம் என்றார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/02112211/1059550/CM-Shashikala-support-valarmathi-gokula-indira.vpf

  • தொடங்கியவர்

முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா ஓ.பி.எஸ்?! - ஆட்டத்தைத் தொடங்கிய அமைச்சர்கள்

sasikala_12210.jpg

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர்கள் அனைவரும், 'முதல்வர் பொறுப்பில் அவர் அமர வேண்டும்' என பேட்டி அளித்து வருகின்றனர். 'தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருக்கிறார் ஓ.பி.எஸ். முதலமைச்சர் பதவியில் தொடர்வதையே அவருடைய ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

'புரட்சித் தலைவி வழியில் புதுமைத் தலைவி' என டிசம்பர் 31 அன்று பொதுச் செயலாளராக பதவியேற்கும் சசிகலாவுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தார் அ.தி.மு.க பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம். வாழ்த்து விளம்பரத்தின் எந்த இடத்திலும் முதலமைச்சர் என்ற வாசகம் இடம் பெறவில்லை. "கார்டனில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், 'சின்னம்மாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்' என ஓ.பி.எஸ் உறுதிபடக் கூறிவிட்டார். விரைவில் முதலமைச்சராக சசிகலா பதவியேற்பார்" என மன்னார்குடி உறவுகள், உற்சாகத்தோடு பேசி வந்தனர். ஆனால், நேற்று அமைச்சர்கள் தங்கமணி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார் உள்ளிட்டவர்கள், 'சாதி சமய வேறுபாடு இல்லாமல் கட்சியை வழிநடத்துவேன் என பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்தார். அதேபோல், ஆட்சி அதிகாரத்திலும் அவர் அமர வேண்டும்' எனப் பேசி வருகின்றனர். 

225_12150.jpg"அ.தி.மு.கவின் தலைமைப் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தினார் ஓ.பி.எஸ். ஆட்சி அதிகாரத்தையும் அவர் விட்டுக் கொடுப்பார் என்று உறுதியாக நம்பும் சூழலில், அமைச்சர்கள் இவ்வாறு பேசக் காரணமே, 'ஓ.பி.எஸ் வேறு எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது' என்பதற்காகத்தான். முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கும் வரையில், மன்னார்குடி உறவுகளின் சந்தேகம் தீரப் போவதில்லை.' எத்தனை நாளைக்கு மத்திய அரசு உங்களைப் பாதுகாக்கும்? கார்டனுக்குள் சேகர் ரெட்டியைக் கூட்டி வந்ததே நீங்கள்தான்' என அவரிடம் மன்னார்குடி சீனியர் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார் பன்னீர்செல்வம்.

மன்னார்குடி உறவுகளுக்கு எதிராக அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டால், கட்சித் துரோகி என்ற முத்திரையைக் குத்திவிடுவார்கள். எனவே, கார்டன் வட்டாரத்தின் போக்கிலேயே சென்று, முதல்வர் பதவியைத் தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறார்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "கட்சிப் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தக் கூடாது என்பதற்காகத்தான் ரெய்டு நடவடிக்கைகள் கையாளப்பட்டன. அதையும் தாண்டி, பொதுச் செயலாளராக வந்துவிட்டார் சசிகலா. அதுவே, ஆட்சி அதிகாரத்துக்குள் வந்துவிட்டால், தேவையற்ற சிக்கல்கள் உருவாகலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும்விதமாக ஓ.பி.எஸ்ஸிடம் பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், 'முதல்வர் பதவியில் இருந்து நீங்கள் ராஜினாமா செய்துவிட்டால், அடுத்த வாய்ப்பு தி.மு.கவுக்குத்தான் போகும்' என உறுதிபடக் கூறிவிட்டார். 'கட்சிப் பதவியில் நீங்கள் தொடருவதையே நாங்கள் விரும்புகிறோம்' எனச் சொல்வதன் மூலம், முதல்வர் அதிகாரத்தை விட்டுத் தருவதில் தயக்கம் காட்டுகிறார் ஓ.பி.எஸ். இதை உணர்ந்துதான் அமைச்சர்கள் வலிய வந்து பேசுகின்றனர்" என்றார். 

"மத்திய அரசோடு அணுக்கமாக இருப்பதே நல்லது என்று ஓ.பி.எஸ் நினைக்கிறார். 'எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் பிரதமர் துணை இருந்தால் போதும். பதவியை விட்டுக் கொடுத்துவிட்டால், சேகர் ரெட்டி ஆயுதத்தை தன் மீது பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது' என்ற யோசனையும் அவருக்குள் இருக்கிறது. தவிர, உத்தரப்பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடந்த அரசியல் சர்ச்சைகளை கார்டன் சூத்ரதாரி கவனித்து வருகிறார். இரண்டு மாநிலத்திலும் முதலமைச்சர் பின்னால்தான் எம்.எல்.ஏக்கள் அணிவகுத்துள்ளனர். 'இங்கேயும் அப்படியொரு சூழல் வந்துவிடக் கூடாது. பன்னீர் விஷயத்தில் கவனம் தேவை' என மன்னார்குடி உறவுகளிடம் அவர் விவாதித்திருக்கிறார். எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சசிகலாவை முதல்வராக தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டால், பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது. இதுவரையில், 'சசிகலாவை முதல்வர் ஆக்குவோம்' என அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. வெகு நிதானமாகவே காய்களை நகர்த்தி வருகிறது கார்டன்" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

'பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்து முதல்வர் சீட்' எனக் கட்சியின் சீனியர்களைப் பேச வைத்துக் கொண்டிருக்கிறது கார்டன். ' ஓ.பி.எஸ் தானாக விலகுவார்' என்ற அவர்களின் நம்பிக்கை நனவாகுமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். 

http://www.vikatan.com/news/tamilnadu/76575-reason-behind-sudden-call-for-giving-cm-post-to-sasikala.art

  • தொடங்கியவர்

ஓ.பன்னீர்செல்வம் பத்திலாம் கேக்காதீங்க... சின்னம்மா முதல்வராகணும்... அவ்வளவுதான்!' தம்பிதுரை கொதிகொதி பேட்டி

c1_16377.jpg

கோவை : "ஓ.பன்னீர்செல்வம் பத்தி எல்லாம் கேக்காதீங்க. கட்சித்தலைமையும், ஆட்சித்தலைமையும் ஒருத்தர் கிட்ட இருக்கணும். அதுக்கு சின்னம்மா முதல்வராகணும். அவ்வளவுதான்" என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே, தற்போதைய முதல்வருக்கு பதில் இன்னொருவர் முதல்வர் ஆவார் என்கிறார். அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு, எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மாற்றாக இன்னொருவரை முதல்வராக வேண்டும் என கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரே பேட்டியும், அறிக்கையும் கொடுக்கிறார். சிலர் மட்டுமே இதை பேசுகிறார்கள். ஆனால் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பது அ.தி.மு.க.வில் உள்ளவர்களுக்கே புரியவில்லை.

c2_16530.jpg

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என திடீரென ஒரு கோரிக்கை கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது. கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகள் மத்தியில் திரும்பத் திரும்ப அந்த குரல் ஒலித்தது. இப்போது சசிகலா பொதுச்செயலாளராகி விட்டார். இப்போது முதல்வராக வேண்டும் என்ற குரல் ஒலிக்கத்துவங்கியுள்ளது. இதையும் அதே சிலர் தான் பேசுகிறார்கள். இப்போது சசிகலா முதல்வராக வேண்டும் என்ற குரல் வலுவாக ஒலிக்கத்துவங்கியுள்ளது.

அமைச்சர் உதயகுமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை என ஓரிருவர் மட்டுமே இது போன்ற கோரிக்கைகளை பேசுகிறார்கள். அல்லது பேச அனுமதிக்கப்படுகிறார்கள். இப்போது சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என பேசி அழுத்தம் கொடுக்கத்துவங்கியிருக்கிறார் தம்பிதுரை. கட்சித் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள சசிகலாவே, முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அறிக்கை, பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறார் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை.

c3_16531.jpg

கோவை வந்த தம்பிதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சின்னம்மா உடனடியாக முதல்வர் பதவியை ஏற்று செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தொண்டர்களின் வேண்டுகோள். இதை நிறைவேற்றித்தர வேண்டுமென்பதும், அம்மா ஆட்சியை சின்னம்மா எடுத்து நடத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அதை தான் நான் அறிக்கையாக கொடுத்திருக்கிறேன்.

இதை அமைச்சர்கள் ஆதரவுடன் தெரிவிக்க வேண்டியதில்லை. இது என்னுடைய கருத்து. ஆட்சியும், கட்சித் தலைமையும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். இது தான் அரசியலில் நாம் கற்ற பாடம். உத்திரப்பிரதேசத்தில் தந்தை கட்சித்தலைவராகவும், மகனிடத்தில் ஆட்சியும் இருப்பதால், இருவரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. அப்பா, மகனிடமே மோதல் நடக்கிறது. அதனால் தான் கட்சியும், ஆட்சியும் ஒரே தலைமையில் இருக்க வேண்டும் என்கிறேன்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா... அவ்வளவு ஏன் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட உலகத்தின் பல தலைவர்கள் இதை தான் பின்பற்றினார்கள். இது தான் நடைமுறை. சின்னம்மா இப்போது கட்சித்தலைமையேற்று இருக்கிறார். அவரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும்," என்றார்.

அப்படி என்றால் ஓ.பன்னீர்செல்வம் பற்றி என்ன சொல்கிறீர்கள் என அவரிடம் கேட்டபோது, "அதைப்பத்தி எல்லாம் நான் எதுவும் சொல்ல விரும்பலை. நான் சொல்ல வர்றது கட்சியும், ஆட்சியும் ஒண்ணா இருக்கணும். அதுக்கு சின்னம்மா முதல்வராகணும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. மக்கள் யாருக்கு ஓட்டு போடுறாங்க? கட்சிக்கு தானே? எனக்கா மக்கள் வாக்களித்தார்கள். கட்சிக்குத்தானே வாக்களித்தார்கள். எனவே கட்சித்தலைமையும், ஆட்சித்தலைமையும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். அது தான் நல்லது," என்றார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மீதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து விட்டுச் சென்றார் தம்பிதுரை.

http://www.vikatan.com/news/politics/76611-donot-ask-about-o-panneerselvam-sasikala-should-become-chief-minister-says-thambidurai.art

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைச்சர்கள் கட்சியை உடைத்து பாஜகவுடன் சேர்க்க வேலை பார்க்கிறார்கள் போலிருக்கு.. :unsure:

  • தொடங்கியவர்

தம்பிதுரை அறிக்கை எதிரொலி: சசிகலாவுடன் முதல்வர் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை

oo_17457.jpg

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை கூறிய நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போயஸ் கார்டனில் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார்.

ஆட்சியும், கட்சியும் வெவ்வேறு தலைமைகளைப் பெற்றதால் பல்வேறு சங்கடங்களும், செயல்திறன் இல்லாத நிலைக்கும் அரசு தள்ளப்படும் என்றும், இதனால் சசிகலா உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகி செங்கோட்டையன் ஆகியோர் போயஸ்கார்டன் வந்தனர். அவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/76621-cm--paneerselvam-meets-sasikala-in-poes-garden.art

  • தொடங்கியவர்

முதல்வருக்கு எதிராக தம்பிதுரை 'பொங்கியதற்குக்' காரணம் இதுவா?

 

 
thambidurai2


சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஏறக்குறைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான குரல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கட்சியின் தலைமையும், ஆட்சியின் தலைமையும் ஒருவராக இருந்தால்தான் ஒருமித்து செயல்பட முடியும் என்றும் அவர் சசிகலாவுக்குக் கூறியுள்ளார்.

இது கட்சி அடிப்படையில் அவர் கூறியுள்ள கருத்தாக எடுத்துக் கொண்டாலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்னவென்று தகவல் அறிந்த வட்டாரங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறார்கள்.

அதாவது, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் போது, ஓ. பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையின் பெயரும் அலசப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதே தம்பிதுரைக்கு பன்னீர்செல்வத்தின் மீது சற்று வருத்தம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்த வருத்தம் காண்டாக மாறும் வகையில் புது தில்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புது தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். அப்போது, பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையும் சென்றார். இருவரும் ஒன்றாகத்தான் மோடியை சந்தித்துப் பேசினர்.

ஆனால், இடையே தம்பிதுரையை வெளியே செல்லுமாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு, சுமார் 20 நிமிடங்கள் மோடியுடன் அவர் தனியாக பேசியுள்ளார். அப்போது அவர் என்ன கூறினார்? என்பது இன்னமும் சிதம்பரம் ரகசியமாகவே உள்ளது.

புது தில்லியில் கட்சி அளவில் செல்வாக்கு மிக்க தன்னையே வெளியே அனுப்பிவிட்டாரே பன்னீர்செல்வம் என்று அப்போதுதான் தம்பிதுரைக்கு அதிருப்தி ஏற்பட்டு, அது காண்டாக மாறி, சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்கும் அளவுக்கு மாறிவிட்டதாக தகவல் அறிந்த பட்சிகள் கதறுகின்றன.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.