Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தத் தொகுதி வெற்றித் தொகுதி?! - சசிகலாவுக்கு 'ஷாக்' கொடுத்த உளவுத்துறை

Featured Replies

எந்தத் தொகுதி வெற்றித் தொகுதி?! - சசிகலாவுக்கு 'ஷாக்' கொடுத்த உளவுத்துறை

 

 

 

'தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்' என அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 'சமுதாய வாக்கு பலத்தோடு அதிக ஓட்டு சதவீதத்தில் எந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியும்' என மன்னார்குடி உறவுகள் ஆலோசித்து வருகின்றனர். 

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றார் சசிகலா. கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கார்டன் அறிவுறுத்தலின்படியே செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து, எந்த எதிர்ப்பும் இல்லாமல் முதலமைச்சர் பதவியில் அவர் அமர வேண்டும் என்பதற்காக, காய் நகர்த்தி வருகின்றனர் மன்னார்குடி உறவுகள். "முதலமைச்சர் பதவியை ஏற்ற பிறகு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிர்வாகிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மதுரையில் இருந்து தேனி வரையில் பல தொகுதிகளை அலசி ஆராய்ந்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் பலத்த அதிருப்தியில் உள்ளனர். இதைத்தான் உளவுத்துறை அறிக்கையும் சுட்டிக் காட்டியுள்ளது" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

அவர்கள் நம்மிடம் பேசும்போது, " ஜெயலலிதாவைப் போல, சென்டிமெண்ட் உள்ள தொகுதியாக ஆண்டிப்பட்டியைப் பார்க்கிறார்கள். 'ஜெயலலிதா மீதுள்ள அனுதாபமும் சொந்தக் கட்சி பலமும் கூடுதல் பிளஸ். தங்க தமிழ்ச்செல்வனை ராஜினாமா செய்ய வைத்துவிட்டுப் போட்டியிட வைக்கலாம்' என்ற பேச்சு எழுந்தபோது, 'அந்த மாவட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அடிமட்டத் தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரையில் பெரிய ஆதரவு இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, மதுரை, திண்டுக்கல் என பல தொகுதிகளை அலசி வருகிறார்கள். 'சமுதாய பலம் அதிகமுள்ள ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்து, அந்தத் தொகுதியில் திருமங்கலம் ஃபார்முலா அடிப்படையில் வேலை பார்த்தால் வெற்றி பெற்றுவிடலாம்' என யோசனை தெரிவித்தாலும், உளவுப் பிரிவு போலீஸார் கொடுக்கும் அறிக்கைகளில் திருப்தியான பதில்கள் இல்லை. நமக்கான தொகுதி எது என்பதை அடையாளம் கண்டுகொள்வதில் அவர்களுக்கு இன்னமும் சிரமம் நீடிக்கிறது" என்கின்றனர் விரிவாக. 

"அ.தி.மு.கவுக்கு செல்வாக்குள்ள பகுதியாக தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்கள் வருகின்றன. இந்தப் பகுதியில் ஜெயலலிதா மறைவையொட்டி, சர்வகட்சி பிரார்த்தனை ஊர்வலத்தை கட்சி நிர்வாகிகள் நடத்தினர். இதற்கு தொண்டர்கள் மத்தியில் எந்த ஆதரவும் இல்லை. கட்சியின் கிளை அமைப்புகளில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. புதிய பொதுச் செயலாளர் தேர்வு குறித்து, ஆதரவுக் கூட்டங்களை சீனியர் நிர்வாகிகளால் நடத்த முடியவில்லை. காங்கிரஸ் கட்சியைப் போல, நிர்வாகிகள் மத்தியில் சசிகலாவுக்கு பெரிய வரவேற்பு இருந்தாலும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இதை எப்படி சரிசெய்வது என்ற ஆலோசனையில் சீனியர்கள் இறங்கியுள்ளனர். கூடவே, தென் மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, மன்னார்குடி உறவுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நாளொன்றுக்கு 25 முதல் 30 போன்கால்கள் வரையில் வருவதால், யாரை அனுசரித்துச் செல்வது என்ற குழப்பம்தான் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா இருந்தவரையில், இப்படியான எந்தச் சிக்கல்களும் அவர்களுக்கு இருந்ததில்லை. இந்தக் குமுறல்தான் கோட்டை வரையில் எதிரொலிக்கிறது. ஒருவேளை சசிகலாவை வேட்பாளராக அறிவித்தால், இந்த அதிகாரிகள் 'முறையாக' தேர்தல் வேலை பார்ப்பார்களா என்ற கேள்வியும் கார்டன் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாநிலம் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் அனுதாபம் இருக்கிறது. அதை அவர் பயன்படுத்துவாரா என்ற சந்தேகமும் தொண்டர்களுக்கு இருக்கிறது. எந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிட்டாலும், தொண்டர்கள் தேர்தல் வேலை பார்ப்பார்களா? மக்கள் ஆதரவைப் பெற முடியுமா என்ற கவலைதான் கார்டன் வட்டாரத்தில் வலம் வருகிறது" என்கிறார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் ஒருவர்.

வெற்றித் தொகுதியை அலசிக் கொண்டே இருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். கோட்டையை நோக்கிய கனவுகளும் தீவிரமடைந்துள்ளன. 'பதவிக்கு வருவாரா...? சோனியா காந்தியைப் போல் கட்சியை மட்டும் வழிநடத்துவாரா?' என்ற பட்டிமன்றங்களும் களைகட்டியுள்ளன.

http://www.vikatan.com/news/tamilnadu/76584-intelligence-report-reveals-in-which-constituency-sasikala-will-win.art

ஆர்.கே நகர் தொகுதியை சசிகலா தவிர்க்கச் செய்யும் காரணங்கள்!

 

 

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி, முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்... அந்தத் தொகுதியை, காலியான தொகுதியாக தமிழக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதன்படி, 23.12.16 தொடங்கி, அடுத்த 6 மாத காலத்துக்குள் ஒரு தேதியை இடைத்தேர்தலுக்காக தேர்தல் கமிஷன் நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கும். ஜெயலலிதாவின் மறைவால்... சட்டசபையில் அ.தி.மு.க-வின் பலம் 135-ல் இருந்து, 134 ஆகக் (சபாநாயகர் தவிர்த்து) குறைந்துள்ளது.

சசிகலா

இரண்டு ஆண்டுகளில்... 4 தேர்தல்களைச் சந்தித்த ஆர்.கே. நகர்!

ஆர்.கே.நகர் தொகுதி 2011-16-ம் ஆண்டுகளில் இரண்டு இடைத்தேர்தல்களையும், இரண்டு இயல்பான தேர்தல்களையும் எதிர்கொண்டுள்ளது. ராதாகிருஷ்ணன் நகர் என்ற பெயர் கொண்ட ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி, கடந்த 1977–ம் ஆண்டு உருவானது. ‘தி.மு.க-வின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட சென்னையில், 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்குக் கூடுதல் ஆறுதலாக... ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி கிடைத்தது. சென்னையில், அ.தி.மு.க. வெற்றி பெற்ற ஒரே சட்டமன்றத் தொகுதியும் அதுதான்.

9 தேர்தல்களில் 5-ஐக் கைப்பற்றிய அ.தி.மு.க.!

அன்றுமுதல் 2011 வரை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் 9 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், அ.தி.மு.க 5 முறை வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க மற்றும் காங்கிரஸ் தலா இருமுறை வென்றுள்ளன.

ஆர்.கே. நகரில் வென்றவர்கள் யார்யார்?

1977 - நடிகர் ஐசரி வேலன் (அ.தி.மு.க.) வெற்றி. 

1980 - வி.ராஜசேகரன், (இ.காங்கிரஸ்) வெற்றி 

1984 - வேணுகோபால் (காங்கிரஸ்) வெற்றி 

1989 -  எஸ்.பி.சற்குணம் (தி.மு.க.) வெற்றி 

1991 - மதுசூதனன் (அ.தி.மு.க.) வெற்றி 

1996 - எஸ்.பி.சற்குணம் (தி.மு.க.) வெற்றி 

2001 - சேகர்பாபு (அ.தி.மு.க.) வெற்றி 

2006 - சேகர்பாபு (அ.தி.மு.க.) வெற்றி

2011 - வெற்றிவேல் (அ.தி.மு.க.) வெற்றி 

2016 - ஜெயலலிதா (அ.தி.மு.க.) வெற்றி

இந்தத் தொகுதியில், கடந்த 4 சட்டமன்றத் தேர்தல்களிலும், ஓர் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2_12240.jpg

ஆர்.கே.நகர் சென்டிமென்ட்!

* ஆர்.கே. நகர் தொகுதி உருவான முதல் (1977) ஆண்டே நடிகர் ஐசரி வேலன் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வென்றாலும், ஒரு விபத்தில் சிக்கி அவர் கால்கள் முறிந்தன. அதன் பின்னர், ஐசரிவேலனால் முன்புபோல் அரசியலில் தீவிரமாகச் செயல்பட முடியவில்லை. ஆகவே அதில் இருந்து மெல்லமெல்லத் தன்னை விலக்கிக்கொண்டார்.

* வி.ராஜசேகரன் மற்றும் வேணுகோபால் ஆகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கும் பெரிய அளவில் ஏறுமுகம் ஏதும் இல்லாமலே போனது. ஒருமுறை மட்டுமே இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்து, பின்னர் காணாமல் போனார்கள்.

* தி.மு.க-வின் எஸ்.பி.சற்குணம் மட்டுமே இங்கே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு... அதில், ஒருமுறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தவர். முதலில் எஸ்.பி.சற்குணத்தின் கணவர் மரணம் அடைய, அடுத்து அவரும் மரணம் அடைந்தார்.

* ஐசரிவேலனுக்குப் பின்னர் அ.தி.மு.க-வின் சார்பில்... இந்தத் தொகுதியில் இருந்து சட்டசபைக்குப் போனவர்  மதுசூதனன். அவர், கைத்தறித் துறை மந்திரியாக இருந்தபோதே ஊழல் வழக்கில் கைது ஆனார். 

* தி.மு.க-வின் எஸ்.பி.சற்குணத்துக்குப் பின்னால் ஆர்.கே. நகர் தொகுதியில் இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக  இருந்தவர் அ.தி.மு.க-வின் சேகர்பாபு. தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்றபோதும் அவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்படவில்லை. ‘‘அ.தி.மு.க-வில் என்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை’’ என்று சொல்லிவிட்டு, கடைசியில், தி.மு.க-வில் இணைந்துவிட்டார். 

* அடுத்து, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் வெற்றிவேல். தி.மு.க-வில், ஆர்.கே. நகர் தொகுதியை சேகர்பாபுவுக்குத் தர இருந்தும்... அவர், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஜெ. தீர்ப்பு, சிறை, மரணம்!

ஆர்.கே.நகர் தொகுதி சென்டிமென்ட், வெற்றிவேலையும், விட்டு வைக்கவில்லை. கடந்த செப்டம்பர் 2014-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பின்போது... ஜெயலலிதா, முதல்வர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆகிய பதவிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேல் முறையீட்டின் முடிவில், ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து, நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். இதையடுத்து, அப்போது ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த வெற்றிவேல், தன் பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட வழிவிட்டதோடு, தொகுதியில் சுற்றிச்சுற்றி வேலை பார்த்தார்.

ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். 2016-ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைப் பொதுத் தேர்தலிலும்... அதே, ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக நான்கு மாதங்கள்கூட முடியாத நிலையில் ஜெயலலிதா, செப்டம்பர் 22, 2016 அன்று உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

1_12345.jpg

சசிகலா தேர்வில் ஆர்.கே. நகர் இல்லை!

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலா, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கூறப்பட்டது. ஆர்.கே. நகர் என்பதை நிரந்தர முதல்வர் தொகுதியாக தக்கவைக்கவும் இதுவே சிறந்த வழி என்றும் சசிகலாவுக்கு ஆதரவு தரப்பினர் சொல்லி வந்துள்ளனர். ஜெயலலிதாவைப் போன்றே பூஜை, பரிகாரம், நேர்த்திக்கடன் என்ற விவகாரங்களில் தீவிரமாகக் கவனம் செலுத்தும் சசிகலா, ஆர்.கே. நகர் தொகுதியின் சென்டிமென்ட் குறித்தும் அலசிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

‘‘அதிக அளவு நாக கன்னிகைகள், சித்தர்கள், சமூக விரோதிகளின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ள கோயில் நிலங்கள் என்று ஆர்.கே. நகர் தொகுதியின் 90 சதவிகிதப் பகுதி சாபங்களால் சூழப்பட்டுள்ளது. அதிகாரத்துக்கு வருகிறவர்கள், இவைகளுக்குத் தீர்வு காணாமல் போய்க்  கொண்டே இருப்பதால்தான் மரணம், சிறை, உயிர்பீதி போன்ற துர்விஷயங்கள் நடக்கின்றன’’ என்று ஆர்.கே. நகர் தொகுதி குறித்து சசியிடம் அவருக்கு வேண்டப்பட்ட ஜோதிட வல்லுநர்கள் சொன்னதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆழ ஆராய்ந்து குறி சொன்னவர்களின் தகவலால், ‘ஏதாவது தென்மாவட்டத்தைப் பாருங்கள்’ என்று சசிகலா தரப்புப் பின்வாங்க ஆரம்பித்துள்ளதாம்!

http://www.vikatan.com/news/tamilnadu/76587-this-is-why-sasikala-will-not-prefer-r-k-nagar-constituency.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.