Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பகத்தன்மையை கட்டியெழுப்பவே சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைத்தோம்

Featured Replies

நம்­ப­கத்­தன்­மையை கட்­டி­யெ­ழுப்­பவே சர்­வ­தேச நீதி­ப­தி­களை பரிந்­து­ரைத்தோம்

p18-ecb17e66fadb9aac4d971ca643f720b33457988b.jpg

 

அறிக்­கை­யை­கொண்டு அனைத்து தரப்­பி­னரும் அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கலாம் என்­கி­றது நல்­லி­ணக்க செய­லணி  
(ரொபட் அன்­டனி)

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் பொறி­முறை நம்­ப­க­ர­மா­கவும் இய­லு­மை  கொண்­ட­தா­கவும் அமை­ய­வேண்டும் என்­ப­தற்­காகவே மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு அமை­வாக சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்­டு­மென நாம் பரிந்­துரைசெய்தோம். விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்டும் என்ற கோரிக் கையை வடக்கு, கிழக்கு மக்கள் மட்­டு­மன்றி தென்­னி­லங்கை மக்­களும் முன்­வைத்­தனர் என்று நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் செய­லணி தெரி­வித்­தது.  

எமது பரிந்­துரை அறிக்­கை­யா­னது பொது­வான அறிக்­கை­யென்­பதால் அதனை வைத்து  அர­சாங்­கத்­திற்கு அனைத்­துத்­த­ரப்­பி­னரும் அழுத்தம் பிர­யோ­கிக்­கலாம்.   

 காணி­களை விடு­வித்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல், இரா­ணு­வத்தை அகற்­றுதல், போன்ற பரிந்­து­ரை­க­ளையும் மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு அமை­வா­கவே நாம் முன்­வைத்தோம் எனவும் நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் செய­லணி சுட்­டிக்­காட்­டி­யது. 

இதே­வேளை எமக்கு வழக்­கப்­பட்ட பொறுப்பை மிகவும் சுயா­தீ­ன­மான முறையில் பாதிக்­கப்ட்ட மக்­களின் பக்­க­மி­ருந்து நாங்கள் செய்­தி­ருக்­கின்றோம். அர­சாங்கம் இதனை ஏற்­குமா இல்லை என்­பது குறித்து நாங்கள் உத்­த­ர­வாதம் கூற முடி­யாது. ஆனால் இந்த அறிக்­கையை வைத்து அனைத்து தரப்­பி­னரும் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கலாம். கடந்த காலத்தில் இந்த நாட்­டி­லி­ருந்த சர்­வா­தி­கா­ரத்தை சிவில் சமூ­கத்­தி­னரே தூக்கி எறிந்­தனர் என்­பதை அனை­வரும் நினைவில் கொள்­வது நல்­லது என்றும் செய­ல­ணியின் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர். 

நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் செய­லணி தனது அறிக்­கையை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பித்த நிலையில் அது தொடர்­பாக விளக்­க­ம­ளிப்­ப­தற்­காக நேற்­றையத் தினம் அர­சாங்கத் தவகல் திணைக்­க­ளத்தில் செய்­தி­யாளர் மாநாட்டை நடத்­தி­யது. செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செய­ல­ணியின் பிர­தி­நி­தி­களே இந்த விட­யங்­களை தெரி­வித்­தனர்.  

இந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் செய­ல­ணியின் தலைவர் மனோரி முத்­தெட்­டு­கம, செய­லாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து, மற்றும் உறுப்­பி­னர்­க­ளான காமினி வியங்­கொட, பேரா­சி­ரியார் சித்­தி­ர­லேகா மௌன­குரு, கலா­நிதி பர்­ஷானா ஹனிபா, பேரா­சி­ரியர் கமீலா சம­ர­சிங்க, மிராக் ரஹீம் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டனர். 

மனோரி முத்­தெட்­டு­கம

செய­ல­ணியின் தலைவர் மனோரி முத்­தெட்­டு­கம குறிப்­பி­டு­கையில்:-

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் செயற்­பாடு தொடர்­பாக மக்­களின் கருத்­த­றியும் கட­மையை அர­சாங்­கத்தின் கோரிக்­கையின் பேரில் நாம் முன்­னெ­டுத்தோம். நாம் 92 உறுப்­பி­னர்கள் இதில் செயற்­பட்டோம். வல­ய­ரீ­தியில் 15 செய­ல­ணி­களை நிய­மித்து மக்­க­ளி­டையே கருத்­துக்­களைப் பெற்றோம். அகில இலங்கை ரீதியில் சுயா­தீ­ன­மாக செயற்­பட்டோம். அந்­த­வ­கையில் மக்­களின் பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருக்­கின்றோம். 

நாங்கள் மீண்டும் எமது சிவில் சமூக வேலைத்­திட்­டத்­திற்கு சென்­று­வி­டுவோம். நாம் முன்­வைத்த அறிக்கை தொடர்பில் அர­சாங்கம் தீர்­மானம் எடுக்கும். நாம் இந்த அறிக்­கையை முன்­வைப்­ப­தற்கு முன்­பாக பாது­காப்பு செய­லா­ளரை சந்­தித்து எமக்கு கருத்­துக்­களை முன்­வைத்த பாதிக்­கப்­பட்­டோரின் பாது­காப்பு தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி­யி­ருந்தோம். எமக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­வர்­களின் பாது­காப்பு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். எனவே இந்த மக்கள் அரச படை­யி­ன­ராலோ அல்­லது முன்னாள் போரா­ளி­க­ளாலோ எவ்­வ­கை­யிலும் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டா­த­வ­கையில் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்றார். 

பேரா­சி­ரியர் சித்­தி­ர­லேகா மௌன­குரு குறிப்­பி­டு­கையில்:

கடந்த வருடம் ஜூலை மாதத்­தி­லி­ருந்து செப்­டெம்பர் மாதம் வரை நாங்கள் இந்த பணியை முன்­னெ­டுத்தோம். நாடு முழு­வதும் அமைக்­கப்­பட்ட 15 வலய செய­ல­ணி­களில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் 8 செய­ல­ணிகள் செயற்­பட்­டன. 7306 சமர்ப்­ப­ணங்கள் எமக்கு கிடைத்­தன. அத்­துடன் சமூ­கத்தின் பல்­வேறு பட்ட பிரி­வி­ன­ரி­ட­மி­ருந்தும் நாங்கள் ஆலோ­ச­னை­களைப் பெற்றோம். 

படை­களின் உயர் அதி­கா­ரிகள், மத்­தி­ய­தர அதி­கா­ரிகள், தனி­ந­பர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்­பி­ன­ரி­டமும் ஆலோ­சனைப் பெற்றோம். காணாமல் போனோர் தொடர்­பா­கவே அதி­க­மான முறைப்­பா­டுகள் எமக்கு கிடைத்­தன. குறிப்­பாக நம்­ப­கத்­தன்மை பொறுப்­புக்­கூறல், நீதிக்­கான தேடல் போன்­ற­வற்­றையே மக்கள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தி­னார்கள். அதி­க­மானோர் தமக்கு நஷ்­ட­ஈடு தேவை­யில்லை என்றும் காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்மை அவ­சியம் என்றும் வலி­யுத்­தினர். 

தென்­ப­கு­தி­யி­லி­ருந்தும் மக்கள் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்­தனர். கிழக்கு மாகா­ணத்­திலும், தென்­ப­கு­தி­யிலும் அதி­க­ளவில் எழுத்­து­மூ­ல­மான சமர்ப்­ப­ணங்கள் கிடைத்­தன. கிழக்கு மாகா­ணத்தின் சில பகு­தி­களில் எமது செய­ல­ணி­யிடம் வந்த பாதிக்­கப்­பட்டோர் தாங்கள் டை, கோட் அணிந்த வெள்­ளைக்­கா­ரர்­க­ளையே எதிர்­பார்த்து வந்­த­தாக கூறினர். 

உண்மை நீதி ஆகிய இரண்­டுமே தமக்கு தேவை என தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி நின்­றனர். அந்த வகையில் நாங்கள் மக்­களின் கருத்­துக்­க­ளையே பரிந்­து­ரை­க­ளாக வைத்­தி­ருக்­கின்றோம். போரினால் ஏற்­பட்­டுள்ள வடுக்­களை நீக்­கு­வ­தற்கு நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அந்­த­வ­கையில் மக்கள் பொறி­முறை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வ­தற்கு முன்­ப­தா­கவே நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்டும் என்­பதை மக்கள் வலி­யு­றுத்­தினர். 

மக்கள் அதனை எதிர்­பார்க்­கின்­றனர். அர­சியல் ரீதி­யான மாற்­றத்­தையும் மக்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். மேலும் மொழி அமு­லாக்­கலும் மக்­களின் கோரிக்­கை­யாக உள்­ளது. அனைத்து விட­யங்­களும் சம­கா­லத்தில் நடை­பெ­ற­வேண்­டு­மென எதிர்­பார்க்­கின்­றனர். அது­மட்­டு­மன்றி நினை­வு­கூ­ரு­தலை ஒரு மிகப்­பெ­ரிய கோரிக்­கை­யாக மக்கள் முன்­வைத்­தனர் என்றார். 

காமினி வியங்­கொட 

செய­லணி உறுப்­பினர் காமினி வியங்­கொட குறிப்­பி­டு­கையில்:

நீதி­வ­ழங்கும் பொறி­மு­றைக்கு கருத்­துக்­களைப் பெறும் நோக்­கி­லேயே அர­சாங்கம் எமது செய­ல­ணியை நிய­மித்­தது. அந்­த­வ­கையில் நாங்கள் மக்­க­ளிடம் கருத்­துக்­களை கோரினோம். அத்­துடன் மக்­களின் கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருக்­கின்றோம். அர­சாங்கம் என்ன செய்­யப்­போ­கின்­றது எனத் தெரி­யாது. ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வழங்­கிய கருத்­துக்­களே இதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் நாட்டில் பாரிய விவா­தங்கள் நடத்­தப்­ப­ட­வேண்டும். சில குழுக்கள் அதனைக் குழப்ப முயற்­சிப்­ப­தாக தெரி­கின்­றது. நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தவும் தீர்வைப் பெற்­றுக்­கொள்­ளவும் இந்த அறிக்கை உத­வு­மென நம்­பு­கிறோம் என்றார். 

 கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து 

செய­ல­ணியின் பொதுச் செயலர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து குறிப்­பி­டு­கையில்:

நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்டும் என்­பதே மக்கள் எம்­மிடம் முன்­வைத்த பிர­தான கோரிக்­கை­யாகும். பொறி­மு­றையின் பிர­தான விட­ய­மாக நம்­ப­கத்­தன்மை காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் தீர்வு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல், இரா­ணுவ மய­மாக்­கலை நீக்­குதல், மற்றும் காணி­களை விடு­வித்தல், உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்­பா­கவும் மக்கள் ஆலோ­ச­னை­களை முன்­வைத்­தனர். 

குறிப்­பாக அர­சாங்கம் இந்த நீதி­வ­ழங்கும் பொறி­மு­றையில் நம்­பிக்­கை­யுடன் செயற்­ப­ட­வேண்டும். பொலிஸ், மற்றும் நீதித்­து­றையில் மக்கள் மறு­சீ­ர­மைப்பை எதிர்­பார்க்­கின்­றனர். இதே­வேளை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துடன் சட்ட வழக்­கு­ரைஞர் திணைக்­க­ளமும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென மக்கள் கூறு­கின்­றனர். மேலும் இந்தப் பொறி­மு­றையை கண்­கா­ணிப்­ப­தற்கு சிவில் சமூக மற்றும் நிபு­ணத்­துவ அனு­பவம் கொண்ட கண்­கா­ணிப்பு அமைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் கோரப்­பட்­டது. 

எமது பரிந்­து­ரையில் மிக முக்­கி­ய­மாக நாங்கள் கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையை நாங்கள் முன்­வைத்­துள்ளோம். ஜெனிவா பிரே­ர­ணை­யிலும் இந்த விடயம் உள்­ள­டக்­கப்­பட்­டது. அந்­த­வ­கையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் தெரிவு தொடர்­பான முறைமை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அத்­துடன் சர்­வ­தேச நீதி­ப­தி­களை தெரிவு செய்­யும்­போது ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­கத்தின் ஆலோ­ச­னையைப் பெற­வேண்டும்.

ஏன் சர்­வ­தேச நீதி­ப­தி­களை மக்கள் கோரு­கின்­றனர் என்ற கேள்வி எழலாம். நம்­ப­கத்­தன்மை மற்றும் அனு­பவம் ஆகிய இரண்டு விட­யங்­க­ளுக்­கா­கவே சர்­வ­தேச நீதி­ப­தி­களை மக்கள் கோரு­கின்­றனர். அது­மட்­டு­மன்றி பாதிப்­ப­டைந்த தரப்­பி­னரும் பொறி­மு­றையில் இடம்­பெ­ற­வேண்டும். உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவில் விசா­ரணை அலகும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அத்­துடன் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான ஆணைக்­கு­ழு­வொன்றும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்றார். 

கேள்வி:- இந்த செய­ல­ணியின் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்கு முன்­னரே சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனு­ம­திப்­ப­தில்­லை­யென ஜனா­தி­பதி கூறி­விட்டார். இது தொடர்பில் ?

பதில்:- எமது கட­மையை நாங்கள் நிறை­வேற்­றி­யி­ருக்­கின்றோம். மக்­களின் கருத்து எதுவோ அதனை தெரி­வித்­தி­ருக்­கின்றோம். இந்த இடத்­தி­லி­ருந்து நல்­லி­ணக்­கத்­திற்­கான பய­ணத்தை ஆரம்­பிக்­கலாம். இதற்கு அர­சி­ய­ல­மைப்பில் சட்ட ரீதி­யான மாற்­றங்கள் அவ­சியம். மேலும் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்கு மக்­க­ளுக்கு உரிமை வழங்­கப்­ப­டுதல் அவ­சியம். அந்­த­வ­கையில் மக்­களின் எண்­ணங்­க­ளையே பரிந்­து­ரை­க­ளாக முன்­வைத்­தி­ருக்­கின்றோம். பொரு­ளா­தார ரீதி­யான பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைத்­தி­ருக்­கின்றோம். 

கேள்வி:- 1987 ஆம் ஆண்டு முதல் 90 ஆம் ஆண்­டு­வரை இலங்­கையில் இந்­திய இரா­ணுவம் மேற்­கொண்ட குற்­றச்­செ­யல்கள் தொடர்­பா­கவும் பு.ௌாட் அமைப்­பினர் 1988 ஆம் ஆண்டு மாலை­தீவை கைப்­பற்ற முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள் தொடர்­பா­கவும் உங்­க­ளிடம் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டதா?

பதில்:- நாங்கள் எமது விட­யங்­களை முன்­னெ­டுத்­த­போது அனைத்து விட­யங்­க­ளையும் வகைப்­ப­டுத்­தினோம். இரா­ணுவம், புலிகள் தமிழ் ஆயு­தக்­கு­ழுக்கள், தனி­ந­பர்கள், இந்­திய இரா­ணுவம், ஜே.வி.பி.யினர் என அனைத்து மட்­டத்­திலும் வகைப்­ப­டுத்­தலை மேற்­கொண்டோம். யார் தவறு செய்­தி­ருந்­தாலும் அது தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வேண்டும். தற்­போது பத­வி­யி­லி­ருக்­கின்ற அர­சாங்­கத்­தினால் மட்­டுமே நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க முடியும் என்றும் மக்கள் எம்­மிடம் கூறினர். 

கேள்வி:- அர­சாங்கம் உங்கள் பரிந்­து­ரையை நிரா­க­ரித்­தி­ருக்­கி­றதே?

பதில்: அர­சாங்கம் என்ன செய்யும் என நாங்கள் உத்­த­ர­வாதம் அளிக்க முடி­யாது. அர­சாங்கம் மக்­களின் கருத்தை கேட்­டது. . நாங்கள் பெற்­றுக்­கொ­டுத்தோம். இது மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்கம். எமது செயற்­பா­டு­களை நாங்கள் தொட­ருவோம். மேலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் பொறி­முறை நம்­ப­க­ர­மா­கவும் இய­லு­மைக்­கொண்­ட­தா­கவும் அமை­ய­வேண்டும் என்­ப­தற்­காவே மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு அமை­வாக சர்­வ­தேச நீதி­ப­தி­களை நாம் பரிந்­துரை செய்தோம். எமது பரிந்­துரை அறிக்­கை­யா­னது பொது­வான அறிக்­கை­யென்­பதால் அதனை வைத்து அர­சாங்­கத்­திற்கு அனைத்­துத்­த­ரப்­பி­னரும் அழுத்தம் பிர­யோ­கிக்­கலாம். 

மேலும் விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்டும் என்­பதை வடக்கு, கிழக்கு மக்கள் மட்டும் கோர­வில்லை. மாறாக தென்­னி­லங்கை மக்­களும் இந்தக் கோரிக்­கையை முன்­வைத்­தனர். காணாமல் போனோர் தொடர்பில் சர்­வ­தேச மட்ட தட­வி­ய­லா­ளர்­களே கட­மை­யாற்­ற­வேண்டும் என மக்கள் விரும்­பு­கின்­றனர். அந்த வகையில் சிவில் சமூகம் தனது கடமையை செய்திருக்கிறது. 

கடந்தகால சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கும் சிவில் சமூகம் பாரிய பங்களிப்பை செய்தது என்பதை மறந்துவிடவேண்டாம். நம்பகத்தன்மை மற்றும் அனுபவ இயலுமை ஆகிய இரண்டு விடயங்களுக்காகவே மக்கள் சர்வதேச நீதிபதிகளை கோருகின்றனர். மேலும் நாங்கள் சுயாதீனமாக இதனை செய்தோம். அறிக்கை எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கத்துடன் நாம் கலந்துரையாடவில்லை.

கேள்வி:- வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றவேண்டும் என்பது தொடர்பில் தென்னிலங்கை மக்களும் கருத்து தெரிவித்தனரா?

பதில்:- இராணுவத்தை அகற்றுவது தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் வடக்கு, கிழக்கில் சிங்கள மக்களும் உள்ளனர். மேலும் தெற்கிலும் இந்த பிரதிபலிப்பு காணப்பட்டது. வடக்கு, கிழக்கில் குறிப்பாக இராணுவம் காணிகளை விடுவிக்கவேண்டுமெனவும் பொருளாதார செயற்பாடுகளிலிருந்து இராணுவம் விலகவேண்டுமெனவும், அதிக இராணுவப் பிரசன்னம் இருக்கக்கூடாது என்றும் மக்கள் கூறிகின்றனர். 

கேள்வி:- இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் ?

பதில்:- நாம் இதுதொடர்பில் இராணுவத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தாங்கள் இராணுவ வகிபாகத்தை மேற்கொண்டதாக இராணுவ அதிகாரிகள் கூறினர். நல்லிணக்கம் என்று வரும்போத அதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக கூறினர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.