Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறப்பில் இருந்து விடுதலை பெறுவதே, சந்தோஷம்! - இதுவரை வெளிவராத ஜெயலலிதா பேட்டி

Featured Replies

பிறப்பில் இருந்து விடுதலை பெறுவதே, சந்தோஷம்! - இதுவரை வெளிவராத ஜெயலலிதா பேட்டி

ஜெயலிலதா

சிமி கேர்வல், 'ரான்டவுஸ் (Rendevous)' என்ற தன் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 1999-ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த நேர்காணலின் எடிட் செய்யப்படாத தொகுதியை நேற்று இரவு வெளியிட்டுள்ளார்.

''ஜெயா ஜி உடனான எனது நேர்காணல், ஒரு மணி நேரத்துக்கும் மேல் சென்றது. ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நேரச் சுருக்கம் காரணமாக, அதை 46 நிமிடங்களுக்குள் எடிட் செய்ய வேண்டியதாயிற்று. மிக அழகான அவரின் பல வார்த்தைகளை, நிகழ்சியில் இருந்து வெளியே எடுத்ததில் எனக்கு மிகவும் வருத்தம். ஆனால், மக்கள் அதை முழுமையாகக் காண விரும்புகிறேன்.

ஜெயா ஜி அவர் எண்ணங்களையும் வாழ்க்கையையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்தார். அவருக்கான நினைவஞ்சலியாக என் நேர்காணலின் முழு பகுதியையும் நான் மக்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்" என்ற குறிப்புடன், சிமி வெளியிட்டுள்ள வீடியோவில், பார்க்கப்படாத அந்த 24 நிமிட ஃபுட்டேஜ் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வைரலாகி கொண்டிருக்கிறது இந்த வீடியோ.

ஜெயலலிதாஜெயலலிதாவின் கேட்கப்படாத அந்த வார்த்தைகளின் ஹைலட் தொகுப்பு இங்கே படிக்கலாம்.

"மகிழ்சியின் அளவுகோல் இங்கு யாரிடமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.''

''நான் கர்மாவை நம்புகிறேன்.''

''ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமை என்று ஒன்று இருக்கும்.''

''சிறு வயதில் நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ள பெண். மேடை வெளிச்சத்தை எப்போதும் நான் சௌகர்யமாக உணர்ந்ததில்லை. மேடையில் ஏறுவதையும், ஒரு கூட்டத்தின் முன் நடனமாடுவதையும் நான் வெறுத்திருக்கிறேன்.

''என் அம்மா மட்டுமே என் உலகமாக இருந்தார். அம்மாவின் இறப்புக்குப் பின், அந்த இழப்பை எம்.ஜி.ஆர். என் வாழ்க்கையில் ஈடுசெய்தார். அவர் எனக்கு அனைத்துமாக இருந்தார். அவர் ஒரு வகையில், என் வாழ்க்கையின் பொறுப்பை எடுத்துக்கொண்டார்."

 

 

''என் சினிமா வாழ்க்கை...  வெல்... என் காலகட்டத்தின் நம்பர் 1 நடிகையாக நான் இருந்தேன்.''

''ஆரம்பகாலத்தில், அனுமதி மறுக்கப்பட்ட, வாழவே பாதுகாப்பில்லாத ஓர் அரசியல் தளத்தில் நான் வைக்கப்பட்டேன். பழைய ஆங்கிலத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்... பழிவாங்கப்பட வேண்டியவர்கள் பகைமை சூழ்ந்த பாழ் கட்டடங்களில் வைக்கப்பட்டிருப்பார்கள். அப்படியான ஒரு மிடீவல் கால சிறைச்சாலை போலதான் என்  சூழலும் இருந்தது."

''கட்டுப்பாடுகள் களையப்பட்ட, சுதந்திரம் மிகுந்த நாடாகச் சொல்லப்படும் அமெரிக்காவில்கூட, கண்ணுக்கு முன் தெரியக்கூடிய எதிர்காலத்தில்கூட ஒரு பெண் ஜனாதிபதியாக வரும் சூழலை உங்களால் பார்க்கமுடிகிறதா? குறைந்தபட்சம், துணை ஜனாதிபதியாகக் கூட இன்னும் அங்கு ஒரு பெண்ணால் தலைமையைக் கைப்பற்ற முடியவில்லை. ஆணாதிக்கம் என்பது அமெரிக்க சமூகத்திலும் உள்ளது. எனில், இந்திய அரசியலில் எந்தளவுக்கு ஆணாதிக்கத்தின் வேர்விட்டிருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.''

''சசிகலா கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிறையில் கழிக்க நேர்ந்தது. அவர் மிகவும் சிரமங்கள் அனுபவிக்க நேரிட்டது. என்னுடன் பிறந்த சகோதரி யாரும் இல்லை. அப்படி ஒரு சகோதரியாக சகிகலா எனக்குக் கிடைத்தார்.''

''இப்போது அச்சம் என்பது என் வாழ்க்கையில் இல்லை.''

''ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது, பிறப்பில் இருந்து விடுதலை பெறுவது!"

http://www.vikatan.com/news/womens/77049-unabridged-version-of-jayalalithaa-interview.art

  • தொடங்கியவர்

'இளவயது ஜெயலலிதாவாக ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருப்பார்!' - ஜெயலலிதா பேட்டி #FlashBack

jayayaya_13180.jpg

சிமி கேர்வல், 'ரான்டவு(Rendevous)' என்ற தன் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 1999ம் ஆண்டு ஜெயலலிதாவை எடுத்த நேர்காணல்தான் இன்று வரை அத்தனை பிரபலம். ஜெயலலிதாவின் உண்மை முகம், அவருடைய உள்ளத்தை.. அச்சு அசலாக, அப்படியே அம்சமாக வெளிப்படுத்தியிருக்கும் அந்த நேர்காணல் வீடியோ. 

நேற்று முன் தினம் இரவு எடிட் செய்யப்படாத அந்த வீடியோவை வெளியிட்டார் சிமி. ஜெயலலிதாவின் அசத்தலான பதில்கள் அடங்கிய அந்த வீடியோவின் பல பகுதிகள் நேரமின்மை காரணமாக எடிட் செய்யப்பட்டிருந்தன. சிமி வெளியிட்ட அவற்றின் தொகுப்பு இதோ... 

உங்கள் வாழ்க்கையை திரைப்படமாக்கினால் யார் அதில் நடிக்க வேண்டும்?

''என் வாழ்க்கை திரைப்படமாக்குவதை நான் விரும்பவில்லை''.

இருவர் படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் ஐஸ்வர்யா ராய்

ஒருவேளை... படமாக்கினால்?

''என்னுடைய இளமைக் காலத்தை படமாக்கினால், ஐஸ்வர்யா ராய்தான் என்னுடைய தேர்வு. ஆனால் என்னுடைய தற்போதைய பகுதியை நடிக்க, யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று தெரியவில்லை".

(இந்த பதிலை ஜெயலலிதா சொன்னது 1999ம் ஆண்டு. இருவர் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரம் என்று பேசப்பட்டு அதில் ஐஸ்வர்யாராய் நடித்தது 1997)

எதாவது வருத்தம்?

''என்னுடைய அம்மா வழிப்பாட்டியை கருணையுடன் நடத்த முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துகிறேன். என் அம்மாவின் மறைவுக்குப் பிறகு, சிறு பெண்ணாக நானே தனிக்காட்டில் விட்டதைப் போல அலைக்கழிந்து கொண்டிருந்த நேரத்தில், என் அம்மாவை மட்டுமே நம்பியிருந்த என் பாட்டியை கனிவுடன் நடத்த முடியவில்லை. அதற்காக மிக வருந்துகிறேன்''.

பல போராட்டங்கள், பல தோல்விகள், ஏராளமான வெற்றிகள். உங்களுடைய வாழ்க்கையில் மிக கடினமான போராட்டம் என்றால் அது என்ன?

''அது, எம்ஜிஆரின் மறைவிற்கு பின், அதிமுகவில் என்னுடைய இடத்தை தக்க வைப்பதற்கான போராட்டம்தான் என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த மிக கடினமான போராட்டம். ஏன் என்றால்,  நான் விரும்பாத ஒன்றை, சூழ்நிலைகளின் கட்டாயத்திற்காக நான் செய்ய வேண்டியதாக இருந்தது''.

ஏன் உங்களுக்கு விருப்பமில்லை என்று கூறுகிறீர்கள்??? உங்களின் அரசியல் போராட்டத்தால், நாங்கள் அதாவது பெண்கள் பெருமிதம் அடைந்திருக்கிறோம்.

''உங்களின் பாராட்டுக்கு நன்றி. ஆனால், என் மீது சேறு வாரி இறைக்கப்பட்டது. மிக மிக மோசமாக இழிவுப்படுத்தப்பட்டேன். அது எனக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நான் ஒரு கல்வியாளராவோ, அல்லது வழக்கறிஞராகவோ இருந்திருந்தால் என்னை யாரும் இந்தளவுக்கு எளிதாக அவமானபடுத்தி இருக்க மாட்டார்கள். கேள்விகளை வீசி இருக்க மாட்டார்கள். ஆனால், அரசியலில் இருக்கிறேன் என்பதால் மட்டுமே, யாரும் எதை வேண்டுமானாலும் நம்மை பற்றி பேசலாம் என்பதை என்னை போன்ற மிக நுண்ணுணர்வு கொண்ட பெண்ணால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை".

அணுகுவதற்கு மிகவும் கடினமானவரா நீங்கள்? 

''இல்லை. வாழ்க்கை என்னை அப்படி மாற்றிவிட்டது. இப்போது கூட எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், மற்றவ்ர்களின் கண்களில் இருந்து மறைந்துவிடவே விரும்புகிறேன். ஹைதராபாத்தில் உள்ள என்னுடைய பண்ணைத் தோட்டத்திற்கு சென்று அங்கு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். யாரையும் பார்க்காத, யாருடைய கேள்விகளுக்கும் பதில் அளிக்காத, எந்த கவன சிதறலும் இல்லாத ஒருத்தியாக வாழ விரும்புகிறேன். என்னுடைய புத்தகங்கள், இசை, என்னுடைய நாய் என எனக்காக தனிமையுடன் வாழ விரும்புகிறேன்''.

உங்களின் நம்பிகையைப் பெற என்ன செய்ய வேண்டும்?

''நேர்மையாக இருந்தாலே போதும். ஆனால் என்னிடம் வருகிறவர்கள் எல்லோருமே எதாவது ஒரு தேவையுடன்தான் வருகிறார்கள்''.

வாழ்க்கை தேவையின் அடிப்படையிலானதுதானே?

''இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை போன்ற தேவைகளை யாரும் மறுக்க முடியாத அடிப்படைத் தேவைகள். ஆனால் பேராசை காரணமாக ஏற்படும் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாது''.

http://www.vikatan.com/news/politics/77164-aishwarya-rai-is-perfect-for-my-young-age-role-to-act---says-jayalalithaa.art

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

வாழ்க்கை தேவையின் அடிப்படையிலானதுதானே?

''இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை போன்ற தேவைகளை யாரும் மறுக்க முடியாத அடிப்படைத் தேவைகள். ஆனால் பேராசை காரணமாக ஏற்படும் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாது''.

ஆமாம்.. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த விடயம் மேலுள்ள மூன்றையும் நிவர்த்தி செய்யவே.. :unsure: என்னம்மா இப்பிடி சொல்லிட்டிங்களேம்மா.. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.