Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை சிதறடித்துவிட்டார் ஜனாதிபதி: ரணில்

Featured Replies

நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை சிதறடித்துவிட்டார் ஜனாதிபதி: ரணில்

நாட்டில் நிரந்தரமான ஒரு சமாதானத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கு இடப்பட்ட அத்திபாரத்தை ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடுகள் அடியோடு தகர்த்துவிட்டன. ஜனாதிபதியின் நடவடிக்கை பிரதான இரு கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்ய வைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் நல்ல ஒரு எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சபையில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். அப்போதே அவர் இவ்வாறு கவலை தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது:

தேசத்தின் நலன், அபிவிருத்தி, நாட்டுமக்கள் மத்தியில் நிரந்தரமான சமாதானம், நிலையான நல்லாட்சி என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனேயே ஐக்கிய தேசியக் கட்சி ஆளுங்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. நமது நாடு சுதந்திரம் அடைந்த 59 வருட காலத்தில் இதுவரை என்றுமே இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக இரு பிரதான கட்சிகளுக்கு இடையிலான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்திருந்தது. ஆனால், ஜனாதிபதி அதனை உதாசீனப்படுத்திவிட்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தம்பக்கம் சேர்த்துக்கொண்டதுடன் அவர்களை அமைச்சர்களாகவும் ஆக்கிக்கொண்டார். ஜனாதிபதியின் இச்செயல் இரு கட்சிகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் ஒரு நடவடிக்கையாகும். இரு பெரிய கட்சிகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சாதாரண பொது மக்கள் மட்டுமல்லர், புத்தி ஜீவிகளும், வர்த்தக சமூகத்தினரும் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை கொண்ட அனைவருமே மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நமது நாட்டில் மக்களே மக்களுக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தாலேயே இனப்பிரச்சினையும் நாட்டில் பிரிவினைக் கோரிக்கையும் பிறப்பெடுத்தன.

இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்தப்படாவிட்டால் நாட்டில் அமைதியையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியாது. எனவேதான், நாட்டின் நலன் கருதி ஜனாதிபதியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க முன்வந்தோம். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது அதனைத் தோற்கடிக்கும் சக்தி எம்மிடம் இருந்தபோதும், நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கினோம்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான செயற்பாடுகளை செயல்படுத்துவதற்கும், அவ்வப்போது ஆலோசனைகளை வழங்குவதற்கும் என ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் இரு தரப்பு உறுப்பினர்களையும் உள்ளடக்கிய உயர்மட்டக்குழு ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைக்கவும் இணக்கம் காணப்பட்டது.

சர்வகட்சி மாநாட்டின் பிரமுகர்கள் குழுவினால் இனப்பிரச்சினை தொடர்பாக முன் வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக ஆராய்ந்து நாமும் பல ஆலோசனைகளை உள்ளடக்கிய அறிக்கையையும் சமர்ப்பித்தோம்.

இவை தொடர்பாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடன் நான் தனிப்பட்ட முறையில் பலமுறை பேச்சுகளை நடத்தியுள்ளேன்.

எமது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினோம்.

மக்களுக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டில் ஏற்பட்ட உயிர் இழப்புகளும், சேதமாக்கப்பட்ட உடைமைகளும், இவற்றை எல்லாம்விட பெறுமதியான அமைதியும் கணக்கிட முடியாதவை. எதிர்காலத்தில் இப்படியான துர்ச்சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்ற உயர்ந்த நோக்குடனேயே ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டோம்.

ஜனாதிபதியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுகளை நடத்தி தீர்வுக்கு அடித்தளம் இட்டோம்.

நான் அண்மையில் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் சென்றிருந்தபோது அந்நாட்டுத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுப் பாராட்டினர்.

இன்று நாட்டில் ஊழல்களும் அடிப்படை மனித உரிமை மீறல்களும் மலிந்துவிட்டன. வாழ்க்கைச்செலவு உச்சத்தை எட்டிவிட்டது.

நாட்டில் நிரந்தரமான அமைதியையும் உறுதியான நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட பொன்னான ஒரு சந்தர்ப்பத்தை இப்பொழுது இழந்துவிட்டோம். ஜனாதிபதியின் தன்னிச்சையான இச் செயல் ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளையுமே சங்கட நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது. அமைச்சரவை விஸ்தரிப்பும் அமைச்சுப் பதவிகளும் கேலிகூத்தாகிவிட்டன. நாடாளுமன்றத்தின் கௌரவம் சீரழிக்கப்பட்டுவிட்டது.

அர்த்தபுஷ்டியான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜனாதிபதி உறுதிப்படுத்திவிட்ட நிலையில் தொடர்ந்தும் எம்மால் அரசுக்கு ஆதரவு வழங்க முடியாது. அதேவேளை, நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும், ஐக்கிய சமூகம் ஒன்றைக் கட்டி எழுப்பவும் ஐக்கிய தேசியக் கட்சி திடசங்கற்பம் கொண்டுள்ளது. எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

-Sudaroli-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.