Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது

Featured Replies

தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது

 

பல்­வேறு வாக்­கு­று­தி­களை வாரி வழங்கி மாறி மாறிப் பத­விக்கு வரும் அர­சாங்­கங்கள் தமிழ் பேசும் சிறு­பான்மை மக்­களை ஏமாற்றும் வித­மா­கவும் அவர்கள் மீது சவாரி செய்யும் வகை­யி­லுமே தொடர்ந்து ஈடு­பட்டு வரு­வ­தாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரி­விக்­கின்­றனர். அந்த வகையில் நல்­லாட்சி அரசின் போக்கும், முன்­னைய அரசின் போக்கை ஒத்­த­தா­கவே இருந்து வரு­வ­தா­கவும் அதனால் நம்­பிக்­கை­யீ­னங்­களே மேலோங்­கு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது.

நல்­லி­ணக்கப் பொறி­முறை குறித்த செய­ல­ணியின் பரிந்­து­ரை­யினை அர­சாங்கம் தற்­பொ­ழுது நிரா­க­ரித்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் மனோரி முத்­தெட்­டுவே­கம தலை­மையில் அமைக்­கப்­பட்­டதே குறித்த நல்­லி­ணக்­கப் ­பொறிமுறை தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் செய­ல­ணி­யாகும். இதில் 12 புத்­தி­ஜீ­விகள் அடங்­கி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் அவர்­களால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கை­யா­னது கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அந்த அறிக்­கையில், சர்­வ­தேச நீதி­ப­தி­களின் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. இதுவே குறித்த அறிக்கை நிரா­க­ரிக்­கப்­படக் கார­ண­மாகும்.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள அமைச்­சரும் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன, ''பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி வழங்கும் பொறி­மு­றையில் எக்­கா­ரணம் கொண்டும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்ளும் சாத்­தி­ய­மில்லை. நாங்கள் நிய­மித்த செய­ல­ணியின் சகல பரிந்­து­ரை­க­ளையும் ஏற்­றுக்­கொள்ளும் அவ­சி­ய­மில்லை. சர்­வ­தேச நீதி­ப­தி­களை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்­பதை ஐ.நாவிடம் தெளி­வுப்­ப­டுத்­தி­விட்டோம்'' என்று கூறி­யுள்ளார்.

அத்­தோடு மாத்­திரம் அமைச்சர் நின்­று­வி­ட­வில்லை. ''செய­ல­ணி­யி­லுள்­ள­வர்கள் பெரும் புத்­தி­ஜீ­வி­க­ளல்ல. எமது நாட்டைச் சேர்ந்­த­வர்­களே. எனவே இவர்­களின் பரிந்­து­ரை­களை கட்­டாயம் ஏற்க வேண்­டு­மென்ற எந்த நிய­தியும் கிடை­யாது'' என்றும் கூறி­யுள்ளார்.

இந்த செய­ல­ணி­யா­னது நாடு முழு­வதும் 1306 கலந்­து­ரை­யா­டல்கள் , 4872 பொதுக் கூட்­டங்கள் ,1048 எழுத்­துரு சமர்ப்­பிப்­புக்கள் மூலம் பெறப்­பட்ட தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த அறிக்கை தயா­ரிக்கப்பட்டுள்ளது. இதனை நேர­டி­யாக ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்க இரு தட­வைகள் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும் அது சாத்­தி­ய­மா­காத நிலை­யி­லேயே இறு­தியில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச நீதி­ப­தி­களை ஒரு­போதும் உள்­வாங்க முடி­யாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பகி­ரங்­க­மா­கவே கூறி­வ­ரு­கிறார்.

இந்­நி­லையில் நல்­லி­ணக்கப் பொறி­முறை குறித்த செய­லணி, சர்­வ­தேச நீதி­ப­தி­களின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வது அவ­ருக்கு தர்­ம­சங்­க­ட­மான நிலையைத் தோற்­று­வித்­தி­ருக்­கலாம். அதுவே அறிக்­கையை அவர் நேர­டி­யாகக் கையேற்­கா­மைக்­கான காரணம் என்றும் கூறப்­ப­டு­கின்­றது. மறு­புறம், தென்­னி­லங்கை சக்­திகள் போர்க்­கொடி தூக்க இது வாய்ப்­பாகி விடும் என்றும் அவர் கரு­தி­யி­ருக்­கலாம்.

எவ்­வா­றெ­னினும், குறித்த செய­ல­ணியின் பரிந்­து­ரைகள் அர­சாங்­கத்­துக்கு சவால்­மிக்­க­தாக மாறி­வி­டுமோ என்ற அச்சம் அரச தரப்­பினர் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளதை அவர்­களின் திடீர் நிரா­க­ரிப்பு எடுத்துக் காட்­டு­வ­தா­கவே கொள்­ள­வேண்டும். குறித்த செய­ல­ணியின் பரிந்­து­ரையில் போர்க்­குற்­றங்கள், மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான குற்­றங்கள், ஆட்­க­டத்தல், சித்­தி­ர­வதை, பாலியல் வன்­பு­ணர்வு போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்­ற­மி­ழைத்­த­வர்­களால் உண்­மையை ஒப்­புக்­கொள்­வதன் வாயி­லாக மன்­னிப்புக் கோரு­வதை ஏற்க முடி­யாது. அது சட்டவிரோ­த­மா­னது என பரிந்­து­ரைக்­கின்­றது.

இந்த செய­ல­ணியின் பரிந்­து­ரைகள் அரசின் மீதுள்ள பொறுப்­பையும் அர­சாங்கம் அதனை நிறை­வேற்ற வேண்­டிய கடப்­பாட்­டையும் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. அந்த வகையில் செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை அரசு செயற்­ப­டுத்த முனைந்தால் மறு­புறம், எதிர்த்­த­ரப்பின் அர­சுக்கு எதி­ரான பிர­சா­ரத்­துக்கு வாய்ப்­பாகப் போய்­விடும் என்ற அச்­சமும், அர­சாங்கம் விழுந்­த­டித்துக் கொண்டு அதனை நிரா­க­ரித்­த­மைக்­கான கார­ணங்­களில் முக்­கி­ய­மா­ன­தாக அமை­யலாம்.

இதே­வேளை, ''பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் பொறி­முறை நம்­ப­க­ர­மா­கவும் இய­லுமை கொண்­ட­தா­கவும் அமைய வேண்டும் என்­ப­தற்­கா­கவே மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு அமை­வாக சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெற வேண்­டு­மென்ற கோரிக்­கையை நாம் பரிந்­துரை செய்தோம். வடக்கு, கிழக்கு மக்கள் மாத்­தி­ர­மன்றி, தென்­னி­லங்கை மக்­களும் இந்தக் கோரிக்­கையை முன்­வைத்­தனர்" என நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான செய­லணி விளக்­க­ம­ளித்­துள்­ளது.

இது தொடர்பில் கருத்து வெளி­யி­ட்­டுள்ள செய­ல­ணியின் பொதுச் செய­லாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து, ''நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பதே மக்­களின் எதிர்­பார்ப்பு. நாங்கள் கலப்பு நீதி­மன்ற பொறி­மு­றையை முன்­வைத்­துள்ளோம். ஜெனீவா பிரே­ர­ணை­யிலும் இவ்­வி­டயம் உள்­ள­டங்­கி­யுள்­ளது. நம்­ப­கத்­தன்மை மற்றும் அனு­பவம் ஆகிய இரு விட­யங்­க­ளுக்­கா­கவே சர்­வ­தேச நீதி­ப­தி­களை மக்கள் கோரு­கின்­றனர்'' என்று கூறி­யுள்ளார்.

செய­ல­ணியின் உறுப்­பி­ன­ரான சித்­தி­ர­லேகா மௌன­குரு இது தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கையில், "உண்மை, நீதி ஆகிய இரண்­டுமே தமக்குத் தேவை என மக்கள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­து­கின்­றனர். அந்த வகையில் மக்­களின் கருத்­துக்­களே பரிந்­து­ரை­க­ளாக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. போரினால் ஏற்­பட்­டுள்ள வடுக்­களை நீக்­கு­வ­தற்கு நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். இதனை மக்கள் வலி­யு­றுத்தி கூறி­யுள்­ளனர்" என்று தெரி­வித்­துள்ளார்.

செய­ல­ணியின் இதர உறுப்­பி­னர்­களும் தாங்கள் மக்­களின் கருத்­துக்­களைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கவே கூறி­யுள்­ளனர். செய­ல­ணியின் தலைவர் மனோரி முத்­தெட்­டு­வேகம, 92 உறுப்­பி­னர்கள், வலய ரீதியில் 15 செய­ல­ணி­களை நிய­மித்து மக்­களின் கருத்­துக்­களை நாடு தழு­விய ரீதியில் சுயா­தீ­ன­மாகப் பெற்­ற­தா­கவும் அந்த வகையில் அவர்­களின் பரிந்­து­ரை­க­ளையே அறிக்­கை­யாக முன்­வைத்­த­தா­கவும் கூறி­யுள்ளார்.

நல்­லி­ணக்கப் பொறி­முறை தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் செய­ல­ணியின் முன் பிர­சன்­ன­மான வடக்கு, கிழக்கு மாத்­தி­ர­மன்றி தென்­னி­லங்கை மக்­களும் விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெற வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்­ளமை புல­னா­கின்­றது. அத்­துடன் வடக்கு, கிழக்கு மக்கள் காணாமல் போனோர் தொடர்பில் சர்­வ­தேச மட்ட தட­ய­வி­ய­லா­ளர்­களின் பிர­சன்­னத்தின் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் கடந்த காலத்தில் அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்கை எவ்­வாறு குப்பைத் தொட்­டியில் போடப்­பட்­டதோ அவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையே இதற்கும் ஏற்­ப­டுமோ என்ற ஐயம் தமிழ் மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது. சிறு­பான்மை தமிழ் மக்கள் விவ­கா­ரத்தில் முன்­னைய அர­சுகள் மேற்­கொண்ட அனைத்து விடயங்களும் வெறும் கண்துடைப்பென்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து வைத்துள்ளனர்.

மீண்டும் அதேவகையான சூழல் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வது அரசின் கடப்பாடாகும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது உள்நாட்டு விசாரணை பொறிமுறைகளால் ஒரு போதும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை நன்குணர்ந்த நிலையிலேயே சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்துள்ளதாகக் கருதவேண்டியுள்ளது.

மக்களின் கருத்துக்களை நிராகரிப்பதானால் அத்தகைய செயலணியை அமைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் காலத்தை வெறுமனே வீணடித்த முயற்சியாகவே அது அமையும். அரசாங்கங்கள் தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும். மாறாக அதனை மேலும் மேலும் குழி தோண்டிப் புதைக்கக் கூடாது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-08#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.