Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையிலிருந்து படைகளை அரசு விலக்கினால்தான் பேச்சுக்கு வாய்ப்பு: ஸ்ரீகாந்தா எம்.பி.

Featured Replies

வாகரையிலிருந்து படைகளை அரசு விலக்கினால்தான் பேச்சுக்கு வாய்ப்பு: ஸ்ரீகாந்தா எம்.பி.

கிழக்கில் அண்மையில் கைப்பற்றிய வாகரை, கதிரவெளி பிரதேசங்களில் இருந்து அரசுப் படைகள் வாபஸ்பெறப்பட்டு, 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது இருந்த களநிலைமை மீண்டும் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே இனி சமாதானத்துக்கு வாய்ப்புக் கிட்டும். அவ்வாறானதொரு சூழ்நிலையை அரசு உருவாக்குமானால் மீண்டும் பேச்சுக்குத் திரும்புமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளை வற்புறுத்தும். இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் ஸ்ரீகாந்தா எம்.பி.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி, 2002ஆம் ஆண்டில் இருந்த நிலை மீண்டும் ஏற்படுத்தப் பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் வாகரை மற்றும் கதிரவெளிப் பிரதேசங்களில் இருந்து இராணுவம் வாபஸ்பெறப் பட்டு தினசரி இடம்பெறும் கொலைகளும் கடத்தல்களும் நிறுத்தப்படுமானால் அரசுடன் பேச்சுகளை நடத்த புலிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஓரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத் தில் உரையாற்றும்போதே அவர் இப்படிக் கூறினார். ஸ்ரீகாந்தா தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது:

இலங்கை அரசு 59ஆவது சுதந்திர தினத் தைக் கொண்டாடியபோது தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 2000 பேரை விடுதலை செய்து சிறைக்கு வெளியே அனுப்பியது. ஆனால், அதே தினத்தில் கொழும்பில் 600 தமிழர்களை காரணமின்றி கைது செய்து சிறைக்குள் தள்ளியது. கைது செய்யப்பட்டவர்கள் அனை வரும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத் தைக் சேர்ந்த தமிழர்கள்.

இவர்களிடம் ஆள் அடையாள அட்டை கள் இருந்தன. கொழும்பு வந்தமைக்கான ஆவணங்களும் அத்தாட்சிகளும் இருந்தன. ஆனால் இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் கைது செய் யப்பட்டு பூஸா சிறையில் அடைக்கப்பட்ட னர்.

பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தில் பொதுமக்கள் கொன்று குவிப்பு இது அடிப்படை உரிமை மீறலாகும். இப்போது வடக்கு, கிழக்கில் பிரகட னப்படுத்தப்படாத யுத்தம் நடைபெறு கின்றது. அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த சபையில் பேசிய பிரதமர் தாக்கு தல் சம்பவங்களின்போது கொல்லப்பட்ட வர்களின் விவரத்தை இங்கே குறிப்பிட் டார். அதில் வடக்கு, கிழக்கில் கொல்லப் பட்டவர்களின் விவரத்தை வெளியிடாதது ஏன்? கொழும்பில் சுதந்திரதினத்தை அரசு கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் போது திருகோணமலை கிரீன் வீதியில் அப்பாவித்தமிழர்கள் மீது படையினர் வேட்டையாடி உடல்கள் வீதியில் சிதறடிக்கப்பட்டன. அங்கு தினசரி இரண்டு பேர் கடத்தப் பட்டுகின்றனர். இரண்டு பேர் கொல்லப்படுகின்றனர். வெள்ளை வான்களில் ஆயுதங்களுடன் திரிபவர்கள் அப்பட்டமாகவே கொலை மற்றும் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர்.

கொலைகாரக் கும்பல்களுக்கும் உங்களுடைய அரசு அவசரகாலச் சட் டத்தின் மூலம் அங்கீகாரம் அளித்துள்ளதா?

மட்டக்களப்பு மற்றும் வாகரைப் பிரதேசங்களில் கருணாகுழு என்றும் துணைப் படைகள் என்றும் திரியும் தமிழ் துரோகக் கும்பல்கள் நேரடியாகவே அடாவடித்தனங் களில் ஈடுபடுகின்றன. இவர்களுக்கு அரச படையினரின் ஆதரவும் கிடைக்கின்றது. அண்மையில் மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்டவர்களை இவர்கள் எவ்வாறு சித்திரவதை செய்து கொன்றனர் என்பதை யும், அவர்களில் ஒருவரான பிரேமினி என்ற இளம் பெண் எவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதையும் சிரேஷ்ட பத்திரிகையாளர் டி.பி. ஜெயராஜ் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் விவரமாக எழுதியுள்ளார். இவ்வாறான காட்டுமிராண்டிச் செயல் களை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் இன்று மரண பீதியுடன் வாழ்கின்றனர். உயிருக்குப் பயந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சரணடைகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பதிகாரியும், உறுப்பினர்களும் சாதாரண படைச்சிப்பாய்களினால் தாக்கப்படுகின்றனர். இப்படியான நிலையில் உங்களுடைய அரசில் எப்படி மனித உரிமைகள் பாதுகாக்கப்படும்? வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களும் இந்த நாட்டுப் பிரஜைகள்தான் என்பதை உணரவேண்டும். சுதந்திரமாக வாழும் நிலைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

நாம் யுத்தத்தை விரும்புபவர்கள் அல்லர். சமாதானப் பிரியர்கள் தான் தமிழர்கள். இந்த நிலையிலும் கூட அரச படைகள் வாகரை மற்றும் கதிரவெளிப் பிரதேசங் களில் இருந்து வெளியேற வேண்டும். கடத்தல்களும் கொலைகளும் நிறுத்தப்பட வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்பட் டால் பேச்சுகளில் கலந்து கொள்வதற்காக புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க நாம் தயார் என்றும் ஸ்ரீகாந்தா கூறினார்.

-Sudaroli-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.