Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோரிக்கையின் நியாயம் குறித்து சிந்தியுங்கள்

Featured Replies

கோரிக்­கையின் நியாயம் குறித்து சிந்­தி­யுங்கள்

 

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்க்­க­வேண்டும் என்ற நல்­லி­ணக்க செய­ல­ணியின் பரிந்­து­ரை­யா­னது தொடர்ச்­சி­யாக சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளது. உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த செய­ல­ணியின் இந்த பரிந்­துரை தொடர்­பா­கவே பேசப்­பட்­டு­வ­ரு­கின்­றது.   

சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் சிவில் நிறு­வ­னங்­களும் நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த செய­ல­ணியின் பரிந்­து­ரை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்பட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. இந்­நி­லையில் உள்­நாட்­டிலும் இந்த விடயம் சர்ச்­சைக்­கு­ரிய ஒன்­றாக மாறி­யுள்­ளது.

குறிப்­பாக அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்­கின்ற அமைச்­சர்­களே இந்த சர்­வ­தேச நீதிப­திகள் என்ற பரிந்­து­ரையை கடு­மை­யாக விமர்­சித்­து­வ­ரு­கின்­றனர். இந்­நி­லையில் பிரிட்­ட­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்த சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­காரம், ஜெனிவா பிரே­ரணை, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் விசா­ரணை பொறி­முறை என்­பன தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

அதா­வது ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது. அதன்­படி கடந்த கால விட­யங்­களை நேர்­மை­யா­கவும் உண்­மை­யா­கவும் ஆராய்ந்து அவற்றை ஏற்­றுக்­கொள்­வ­தற்கும் புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் இலங்கை அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது என்று தெரிவித்த வெளி ­விவ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்புத் தொடர்பில் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே வித்­தி­யா­ச­மான கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்த முரண்­பா­டான கருத்­துக்­க­ளுக்கு அப்பால் மிகவும் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையை அமைக்க வேண்­டிய தேவை அர­சாங்­கத்­துக்கு காணப்­ப­டு­கி­றது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கை அர­சாங்­க­மா­னது கடந்த காலங்கள் குறித்து ஆராய்­வ­தற்­காக பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கவ­லைகள் குறித்து கவனம் செலுத்­து­கி­றது. அத்­துடன் உண்­மையைக் கண்­ட­றிதல், நீதி வழங்­குதல், நட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகிய நான்கு விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அர­சாங்கம் கடந்த கால நிகழ்­வு­களை ஆராய்ந்து வரு­கி­றது.இதன் முத­லா­வது கட்­ட­மாக இலங்கை அர­சாங்­க­மா­னது காணா­மற்­போனோர் குறித்து ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­யது என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அறிக்­கையை அர­சாங்­கத்தின் நிபு­ணர்கள் மிக விரி­வாக ஆராய்ந்து வரு­கின்­றனர். இதனை முழு­மை­யாக ஆராய்ந்து விட்டு உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவும் நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­ல­கமும் எவ்­வாறு அமைக்­கப்­படும் என்ற வடி­வ­மைப்புத் தயா­ரிக்­கப்­படும். இறை­மை­யுள்ள ஜன­நா­யக நாடு என்­ற­வ­கையில் இலங்­கை­யா­னது இவ்­வ­கை­யான பொறி­முறை ஒன்றை தயா­ரிக்கும் நோக்கில் அனைத்து தரப்­பி­ன­ரி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்தும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இவ்­வா­றான நிலையில் இந்த சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­காரம் ஏன் களத்­துக்கு வந்­தது என்­பது குறித்து நாங்கள் ஆரா­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதா­வது 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்­ததும் ஐக்­கிய நாடு­களின் அப்­போ­தைய செய­லாளர் நாயகம் பான் கி மூன் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். அதன்­போது பான் கீ மூனுக்கும் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தைக்குப் பின்னர் கூட்­ட­றிக்­கை­யொன்று விடுக்­கப்­பட்­டது. அதில் யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தாபிமான மீறல்கள், சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக நம்­ப­க­ர­மான உள்ளக விசா­ரணை நடத்­தப்­ப­டு­மென தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அவ்­வாறு எந்­த­வி­மான உள்­ளக விசா­ர­ணையும் முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலையில் 2009 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கமே ஜெனி­வாவில் ஒரு பிரே­ரணையைக் கொண்­டு­வந்­தது. அந்தப் பிரே­ர­ணை­யிலும் உள்­ளக ரீதியில் விசா­ரணை நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டு­மென உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

எனினும் அவ்­வாறு எவ்­வி­த­மான உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு பல்­வேறு தரப்­புக்­க­ளி­ட­மி­ருந்தும் சாட்­சி­யங்கள் பெறப்­பட்­டன. அதன் அறிக்கை முன்­வைக்­கப்­பட்ட நிலையில் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­திலும் தாமதம் காணப்­பட்­டது. இவ்­வா­றான சூழ்­நி­லை­யி­லேயே 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக உறுப்பு நாடுகள் சில­வற்­றினால் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மீறல்கள் தொடர்­பாக நம்­ப­க­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது. எனினும் அந்த பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தது. அத­னை­ய­டுத்து 2013 ஆம் ஆண்டும் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­ட­துடன் நம்­ப­க­ர­மான விசா­ர­ணை­ கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் அந்தப் பிரே­ர­ணை­யையும் இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரித்­தது.

இந்­நி­லையில் 2014 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் மூன்­றா­வது தட­வை­யா­கவும் உறுப்பு நாடு­க­ளினால் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்த பிரே­ர­ணையில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்­த­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. அந்தப் பிரே­ர­ணை­யையும் அப்­போ­தைய இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்த நிலை­யிலும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வா­னது இலங்­கைக்கு வருகை தரா­ம­லேயே விசா­ர­ணையை முன்­னெ­டுத்­தது. அந்த விசா­ரணை அறிக்கை 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் வெளி­யி­டப்­பட்­டது. அதில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுடன் கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட்டு விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி­வ­ழங்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது. அந்த கட்­டத்தில் இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டி­ருந்த சூழலில் ஐ.நா. வின் விசா­ரணை அறிக்­கையை அடி­யொற்றி மற்­று­மொரு பிரே­ரணை ஜெனி­வாவில் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­கேற்­புடன் விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன் அதற்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது.

இந்தப் பின்­ன­ணியே இலங்­கையின் மனித உரிமை விவ­கா­ரத்தில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்­டு­மென்ற கோரிக்கை முன்­வ­ரு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கி­யது. எனினும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கோரிக்­கையை முன்­வைத்த பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய இலங்கை அர­சாங்கம் தற்­போது அந்தப் பரிந்­து­ரையை எதிர்க்­கி­றது. அர­சாங்கம் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­போது பாதிக்­கப்­பட்ட மக்கள் அர­சாங்­கத்தின் மீது பாரிய நம்­பிக்கை வைத்­தனர். தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்­பிக்கை மக்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

 ஆனால், தற்­போது அர­சாங்கம் செயற்­படும் வித­மா­னது மக்­களின் நம்­பிக்­கையை சீர்­கு­லைப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. கடந்த காலங்­களில் உள்­ளக ரீதியில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி உறு­திப்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே பாதிக்­கப்­பட்ட மக்கள் சர்­வ­தேச பங்­க­ளிப்பை நாடி நிற்­கின்­றனர். அந்த அடிப்­ப­டை­யி­லேயே மக்­க­ளிடம் ஆலோ­சனை நடத்­திய நல்­லி­ணக்க செய­ல­ணி­யிடம் மக்கள் இந்தக் கோரிக்­கையை பெரு­வா­ரி­யாக முன்­வைத்­தனர். வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் மட்­டு­மன்றி தென்­ப­கு­தி­யி­லி­ருந்தும் இந்த சர்­வ­தேச நீதி­ப­திகள் தொடர்­பான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­ட­தாக நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த செயலணியின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.

எனவே, அரசாங்கமானது பாதிக்கப்பட்ட மக்களும் சர்வதேச சமூகமும் ஏன் இந்த சர்வதேச தலையீட்டை கோரி நிற்கின்றன என்பதை சிந்திக்கவேண்டியது அவசியமாகும். மாறாக இந்தக் கோரிக்கையை முழுமையாக நிராகரிப்பதானது பாதிக்கப்பட்ட மக்களைப் புண்படுத்துவதாகவே அமையும். அமைச்சர் மங்கள சமரவீரவும் சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இந்த விசாரணைப் பொறிமுறை விடயத்தில் அரசாங்கத் தரப்பிற்கு பொதுவான இணக்கப்பாடு இல்லாமை தெளிவாகிறது. எனவே முதலில் அரசாங்கம் இந்த சர்வதேச நீதிபதி குறித்த கோரிக்கையை நிதானமாக ஆராயவேண்டியது அவசியமாகின்றது. எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்தியற்ற மற்றும் நம்பிக்கையளிக்காத விசாரணைப் பொறிமுறையை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை. இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் சிந்தித்து அரசாங்கம் விரைவில் ஆக்கபூர்வமான தீர்மானத்தை இந்த விடயத்தில் எடுக்கவேண்டுமென சுட்டிக்காட்டுகிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-14#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.