Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் அசாதாரண சூழல் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

Featured Replies

தமிழகத்தில் அசாதாரண சூழல்
நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
 
 
 

சென்னை:''தமிழகத்தில் இப்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், சோ கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்,'' என்று சென்னையில் நேற்று நடந்த 'துக்ளக்' ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

 

Tamil_News_large_169064520170114232039_318_219.jpg

'துக்ளக்' வார இதழின், 47வது ஆண்டுவிழா, சென்னையில் நேற்று நடந்தது. பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது;சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

அவர் மருத்துவமனையில் இருந்த பொழுது சென்று பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சோவை மருத்துவ மனையில் சென்று பார்த்தார். அப்பொழுது அவர் கூறியது மாதிரியே ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அவரும் உயிரோடு இருந்தார்.

எனக்கு அவர் மிகவும் சிறந்த நண்பனாக, ஆலோசகராக இருந்தார். ஐ.பி,எல் போட்டிகள் துவங்கிய பொழுது இது கண்டிப்பாக பெரிய அளவில் வளர்ச்சியடையும். எனவே சென்னை அணியை வாங்கலாம் என்று அறிவுரை கூறி னார். அப்போது வெறும் லட்சங்களில் அணி களின் விலை இருந்தது. ஆனால் நான்

வாங்கவில்லை. ஆனால் இப்போது அணிகளின் விலை ஆயிரம் கோடிகளில் உள்ளது.

சோவிடம் வந்து ஆலோசனை கேட்காத தமிழக அரசியல்வாதிகளே இல்லையென்று கூறிவிடலாம். மாநில அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; பிரதமர் மோடி உள்ளிட்ட தேசியத்தலைவர்களும் சிக்கலான விஷயங்களில் அவரது ஆலோசனை கேட்டு வருவார்கள்.

தமிழகத்தில்இப்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் சோ கண்டிப்பாக இங்கே இருந்திருக்க வேண்டும். சோவின் பலம் என்பது அவரது உண்மை மட்டும் தான். அதையே நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும்.இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
 

சோவுக்கு பிரதமர் மோடி புகழாரம்


விழாவில் பிரதமர் மோடி, டில்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுப் பேசினார். 'வணக்கம், எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என, தமிழில், தனது பேச்சை துவங்கிய மோடி, தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார்.அவர் பேசியதாவது:

பொங்கல் பண்டிகை வெவ்வேறு பெயர்களில், தமிழகம், பஞ்சாப், குஜராத், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இயற்கை மற்றும் விலங்குகளை நேசிக்கும் விதத்திலும், சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலும், பொங்கல் கொண்டாடுகிறோம்.
சமூக நல்லிணக்கம் தான் நமது பண்பாட்டின் வலிமை. 'மகர சங்கராந்தி' எனஅழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, அறுவடை திருநாள்; செழிப்பையும், மகிழ்ச்சியையும் குறிக்கிறது.

எனது அருமை நண்பர் சோவின் மறைவு, எனக்கும் தனிப்பட்ட இழப்பு தான். அவர் ஓர் பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர், நடிகர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர் என, பன்முகத் தன்மை கொண்டவர்.

 

அவரை நேசிப்பதும், புரிந்து கொள்வதும் சிரமம். அவரைப் போல் ஓர் சிறந்த மனிதரை காண முடியாது. அவரது துணிச்சல் பாராட்டுக்குரியது.

சோவின் பெயரை தவிர்த்துவிட்டு, இந்திய வரலாற்றை எழுத முடியாது. அவர் நேர்மை யான, ஊழலற்ற அரசியல் கொள்கைக் காக போராடினார்.பல துறைகளில் அவர் சிறந்து விளங்கினாலும், 'துக்ளக்' ஆசிரியர் என்ற பணி தான், அவரது மணி மகுடம். அவர் தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; தேசிய சிந்தனை கொண்டவர்.

பல புத்தக தொகுப்புகளில் விவரிக்க முடியாத வற்றை அவர், ஒரு கார்ட்டூன் வாயிலாக விளக்கக் கூடியவர். அதனால் தான், விமர்சித்த வர்களாலும் அவர் விரும்பப்பட்டார். சோவால் விமர்சிக்கப்படாத அரசியல்வாதிகளே இல்லை.

நையாண்டி மற்றும் சிரிப்பு கலையில் வித்தகர் சோ. நகைச்சுவை என்பது சிறந்த நிவாரணி. பல ஆயுதங்களின் வலிமையை விட, சிரிப்புக்கு வலிமை அதிகம். அவரது தீர்க்க தரிசனம் மற்றும் வழிகாட்டுதல், 'துக்ளக்' பத்திரிகையின் எதிர்கால வளர்ச்சிக்கு துணை நிற்கும்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1690645

தமிழ் என்றால் சீறும் நாகபாம்பை விட கொடியது செத்தது நல்லது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.