Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க தூதரகத்துக்கு கீழ் காணப்படும் காணியை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் முடிவு

Featured Replies

அமெரிக்க தூதரக அலுவலகத்தின் கீழ் காணப்படுகின்ற இரணவில பூமியை மீண்டும் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில், இரணவில பிரதேசத்தில் அமைந்துள்ள 166.038 ஹெக்டேயர் இடப்பகுதியை, Voice of America thndhyp வானொலி ஒலிபரப்பு நிலையத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்காக வேண்டி 1991ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதரக அலுவலகத்திற்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

அந்த குத்தகை ஒப்பந்தத்தின் காலம் முடிவடைவதற்கு முன்னர் குறித்த ஒலிபரப்பு நிலையத்தை மூடிவிட்டு குறித்த இடம் மற்றும் சொத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதரக அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்து குறித்த இடத்தை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/132271?ref=home

இந்தக் காணிகள் இனி சீனாவுக்கு போகப் போகிறது!

  • தொடங்கியவர்

அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட இரணவில காணியை மீண்டும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

இர­ணவில பகுதியில் அமெ­ரிக்­காவுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த காணியை மீளப் பெற்றுக் கொள்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­கான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­திற்கு அங்­கீகாரம் கிடைத்­துள்­ள­தாக அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

புத்­தளம் மாவட்­டத்தில், இர­ண­வில பிர­தே­சத்தில் அமைந்­துள்ள 166.038 ஹெக்­டேயர் நிலப்­ப­கு­தியை, அமெ­ரிக்க வானொலி ஒலி­ப­ரப்பு நிலை­யத்தை இலங்­கையில் நிர்­மா­ணிப்­ப­தற்­காக வேண்டி 1991 ஆம் ஆண்டு ஐக்­கிய அமெ­ரிக்க குடி­ய­ரசின் தூத­ரக அலு­வ­ல­கத்­துக்கு குத்­தகை அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டது.

அக்­குத்­தகை ஒப்­பந்­தத்தின் காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்னர் குறித்த ஒலி­ப­ரப்பு நிலை­யத்தை மூடி­விட்டு காணியை மற்றும் சொத்­துக்­களை இலங்கை அர­சாங்­கத்­திடம் வழங்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக ஐக்­கிய அமெ­ரிக்க குடி­ய­ரசின் தூத­ரக அலு­வ­லகம் இலங்கை அர­சாங்­கத்­திடம் தெரி­வித்­துள்­ளது.

அத­ன­டிப்­ப­டையில் குத்­தகை ஒப்­பந்­தத்தை இரத்துச் செய்து குறித்த இடத்தை மீளப் பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார விவ­கா­ரங்கள் தொடர்­பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட் டுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-19#page-2

  • தொடங்கியவர்

மிகுந்த நன்­றி­யுடன் இர­ண­வில 400 ஏக்கர் காணியை இலங்­கை­யிடம் மீள அளிக்­கின்றோம் - அமெ­ரிக்க தூத­ரகம் அறிக்கை

இலங்கை அர­சாங்­கத்­திடம் இருந்து குத்­த­கையின் அடிப்­ப­டையில் பெறப்­பட்ட 400 ஏக்­கர்­க­ளுக்கு அதி­க­மான இர­ண­வில பகு­தியில் அமைந்­துள்ள காணியை மிகுந்த நன்­றி­யுடன் அமெ­ரிக்க அர­சாங்கம் இலங்­கை­யிடம் மீள அளிக்­கின்­றது. இலங்­கை­யு­ட­னான நெருக்­க­மான உற­வையும், 60 ஆண்டு கால எமது இரு தரப்பு பங்­கா­ளித்­து­வத்­தையும் அமெ­ரிக்கா மதிக்­கின்­றது என்று கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.

இர­ண­வில நிலையம் மூடப்­பட்­டமை தொடர்பில் கொழும்பில் அமைந்­துள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கை­யு­ட­னான நெருக்­க­மான உற­வையும், 60 ஆண்டு கால எமது இரு தரப்பு பங்­கா­ளித்­து­வத்­தையும் அமெ­ரிக்கா மதிக்­கின்­றது. அந்­த­வ­கையில் சுயா­தீன அமெ­ரிக்க நிறு­வ­னத்­தினால் நிர்­வ­கிக்­கப்­பட்ட, இர­ண­வில சிற்­றலை வானொலி நிலையம் இந்த பங்­கா­ளித்­து­வத்­திற்­கான ஒரு சிறந்த உதா­ர­ண­மாகும்.  

வாஷிங்டன் நக­ரி­லி­ருந்து வொய்ஸ் ஒப் அமெ­ரிக்கா நிகழ்ச்­சி­களை சிற்­றலை வானொலி அலை­களின் ஊடாக உல­கெங்­கிலும் உள்ள ரசி­கர்­க­ளுக்கு இந்த சிற்­றலை நிலையம் கொண்டு சேர்த்­தது. செய்­திகள், இசை மற்றும் அமெ­ரிக்கா குறித்த விசேட நிகழ்ச்­சிகள் இதில் உள்­ள­டங்­கின. உல­கிற்கு அமெ­ரிக்­காவின் கதை­களை கொண்டு செல்லும் பணி­நோக்­கத்­தினை பல வருட கால­மாக இலங்கை அர­சாங்­கங்­களின் ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கா­விடின் வொய்ஸ் ஒப் அமெ­ரிக்­கா­வினால் நிறை­வேற்­றி­யி­ருக்க முடி­யாது.

கடந்த காலங்­களில், எவ்­வா­றா­யினும் சிற்­றலை ஒலி­ப­ரப்­பு­க­ளுக்­கான ரசி­கர்கள் குறைந்து வரு­கின்­றனர். செய்­திகள் மற்றும் தக­வ­லுக்­காக எப்.எம். வானொ­லிகள் மாத்­தி­ர­மின்றி, செய்­மதி தொலைக்­காட்சி சேவை, இணை­யத்­த­ளங்கள், மற்றும் சமூக ஊடகம் என, கைபே­சி­களின் ஊடாக வழங்­கப்­படும் வேறு மூலங்­களை நோக்கி மக்கள் திரும்பி வரு­கின்­றனர்.

தமக்கு விருப்­ப­மான ஊட­கத்தின் வழி­யாக இரசி­கர்­களை அடை­வதில் சுயா­தீன அமெ­ரிக்க நிறு­வனம் என்றும் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளது. ரசி­கர்­களின் மாறும் பழக்­கங்கள் மற்றும் சிற்­றலை ஒலி­ப­ரப்பு நிலை­யத்தைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­க­ரித்த செலவு என்­ப­வற்றின் கார­ண­மாக இர­ண­வி­லவில் அமைந்­துள்ள நிலை­யத்தை மூடு­வ­தற்கு சுயா­தீன அமெ­ரிக்க நிறு­வனம் தீர்­மா­னித்­தது.

இலங்கை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நீண்ட கால குத்­த­கையில் பெறப்­பட்ட நிலையம் அமைந்­துள்ள காணி­யா­னது, மீண்டும் இலங்­கை­யி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. வீதி­களை அமைத்தல், காணி­களை துப்­பு­ரவு செய்தல் மற்றும் சரி செய்தல், கழிவு வடிகால், வேலிகள் அமைத்தல், மற்றும் நவீன அலு­வ­லகக் கட்­ட­டங்கள் என தமது செயற்­பாட்டு காலப்­ப­கு­தியில், இர­ண­வி­லவை அமெ­ரிக்க அர­சாங்கம் மேம்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

பொது வச­தி­க­ளுக்­கான சேவை மையங்­க­ளையும், 4.2 மெகா வோட் சுய மின்­னுற்­பத்தி நிலை­யத்­தையும் அமெ­ரிக்க அர­சாங்கம் அமைத்­துள்­ளது. எதிர்­கா­லத்தில் பல வகி­பா­கங்­களை ஆற்­று­வ­தற்­கான உடை­மையின் பெறு­மதி மற்றும் தளத்தின் நெகிழ்வு திறனை இந்த மேம்­ப­டுத்தல் வச­திகள் அனைத்தும் அதி­க­ரித்­துள்­ளன. அனைத்து முன்­னேற்­றங்­களும் உள்ளடங்கலாக, முழுமையாக இலங்கை அரசாங்கத்திடம் 400 ஏக்கர்களுக்கு அதிக மான இரணவில உடைமைக்கான குத்த கையை மிகுந்த நன்றியுடன் அமெரிக்க அரசாங்கம் மீள அளிக்கின்றது.

வாராந்தம் உலகெங்கிலும் 236.6 மில் லியனுக்கும் அதிகமான மக்களுக்கு, 47 மொழிகளில் நம்பகமான, குறிக்கோள்சார் செய்திகளையும், தகவல்களையும் வொய்ஸ் ஒப் அமெரிக்கா வழங்குகின்றது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-20#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.