Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு படையினரால் வீடுகள் நிர்மாணம்!

Featured Replies

முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு படையினரால் வீடுகள் நிர்மாணம்!

IMG7345-copy-16e237c8ed9e5140c6aa0310c0a481f08fb356e4.jpg

 

100 பேருக்கு வீடுகள் கையளிப்பு; புதிதாக 224 வீடுகள் அமைப்பு
எஸ்.கணேசன், ரி.விருஷன்

இரா­ணுவ வீட்டுத் திட்­டத்தை கீரி­ மலை வடக்­கி­லி­ருந்து நாம் ஆரம்­பித்து நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறோம். இது நிறைவு பெற்ற பின்னர் மாவை கலட்­டி யில் 224வீடு­களை நிர்­மா­ணிக்கும் பணி­ களை நாம் ஆரம்­பிக்­க­வுள்ளோம்.  

ஏலவே, நாம் கீரி­மலை வடக்கில் நிர்­மா­ணித்த 100 வீடுகள் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், 33 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன என்று யாழ். மாவட்ட கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்க தெரி­வித்தார்.

நாம் நிர்­மா­ணித்த வீடுகள் யாழ். மக்­களின் கலா­சா­ரத்தை கருத்­தில்­கொண்டு கட்­டப்­பட்­ட­வை­யாகும். ஆகவே, குறித்த வீடு­களில் மக்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வரு­கின்­றனர் என்றும் அவர் கூறினார்.    

யாழ். கீரி­மலை வடக்கில் இரா­ணு­வத்­தி­னரால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் வீடு­களை நேரில் சென்று பார்­வை­யிடும் பொருட்டு வீர­கே­சரி வார வெளி­யீட்டு ஊட­க­வி­ய­லாளர் குழு கடந்த வௌ்ளிக்­கி­ழமை அங்கு சென்­றி­ருந்­தது. அதனை தொடர்ந்து பலாலி இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் யாழ். மாவட்ட கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்­கவை சந்­தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்­து­ரை­யா­டி­யது. இந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் மேலும் கூறு­கையில்,

இரா­ணுவம் நிர்­மா­ணிக்கும் விடு­க­ளுக்கு பய­னா­ளி­களைத் தெரிவு செய்­வது நாங்­க­ளல்ல. அதை தெரி­வு­செய்­வது அர­சாங்க அதி­பரும் மாவட்ட செய­லா­ள­ருமே. சகல இடம்­பெ­யர்ந்த மக்­களும் பதி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற கார­ணத்­தினால் அர­சாங்க அதி­ப­ருக்கும், மாவட்ட செய­லா­ள­ருக்கும் யாருக்கு வீடு வேண்டும், யாருக்கு தேவை­யில்லை என்­பது தெரியும். மேலும், இதில் நாங்கள் தலை­யி­டு­வ­தில்லை. அத்­துடன் சொந்தக் காணி இல்­லா­த­வர்­க­ளுக்கே இவ்­வீ­டுகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

தற்­போது வடக்கில் இரு பொருத்து வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு மக்கள் பார்­வைக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், அந்த வீடுகள் யாழ்ப்­பா­ணத்தில் வசிக்கும் மக்­களின் கலா­சா­ரத்­திற்கு முற்­றிலும் மாறு­பட்­ட­வை­யாகக் காணப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

 பிரான்ஸ் அர­சாங்­கத்தின் நிதி­யு­த­வி­யுடன் இந்த வீட்டுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த குறித்த அமைச்சு முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது.

 இந்த வீட்­டத்­திட்டம் ஏற்­பு­டை­யதா? இல்­லையா? என்­பது குறித்து ஆய்­வு­செய்­வ­தற்­கு­ரிய திறன் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் இருக்­கின்­றது. நானும் ஒரு சிவில் பொறி­யி­ய­லாளர்.

ஆகவே, நாங்கள் இது பற்­றிய ஆய்­வொன்றை மேற்­கொண்டோம். அதா­வது நாங்கள் யாழி­லுள்ள சகல மக்­க­ளி­டமும் சென்றோம். அங்­குள்ள குருக்­க­ளி­டமும் பாட­சாலை அதி­பர்­க­ளி­டமும் சென்று இது பற்றி கேட்­ட­றிந்தோம். அங்­குள்ள மக்­க­ளுக்கு என்ன தேவை என்­பது பற்­றியும் யாழ். கலா­சாரம் பற்­றியும் எங்­க­ளுக்கும் நிறை­யவே தெரியும். ஏனென்றால், நாங்­களும் இங்கு 36 வரு­டங்­க­ளாக நிலை­கொண்­டுள்­ளோ­மல்­லவா?

 உதா­ர­ண­மாக யாழ்ப்­பாண பெண்கள் சில சந்­தர்ப்­பங்­களில் வீட்டின் முன்­வாசல் வழி­யாக பய­ணிப்­ப­தில்லை. ஆனால், பொருத்து வீட்­டுத்­திட்­டத்தில் வீடு­க­ளுக்கு முன் கதவு மாத்­திரம் இருப்­பதால் இவ்­வீடு அவர்­க­ளுக்கு சற்றும் பொருந்­தாது என்றே நினைக்­கின்றேன்.

மேலும், நாங்கள் ஐந்து வகை­யான வீடு­களின் வரை­ப­டங்­களை எடுத்துக் கொண்டு அர­சாங்க அதி­ப­ரிடம் சென்றோம். அங்கு அவ­ரிடம் இந்த வீடு­களில் எவை சிறந்­தவை என்று கேட்டு தெரிந்­து­கொண்டோம். எங்­க­ளு­டைய கட்­டட வடி­வ­மைப்­பா­ளரே பொறி­யி­லா­ளார்­க­ளுடன் இணைந்து வீடு­களின் வரை­ப­டங்­களைத் தயா­ரித்­தனர்.

அந்த பொருத்து வீடு ஒன்­றுக்கு 2.1 மில்­லியன் அதா­வது 21 லட்சம் ரூபாய்கள் செலா­வாகும். ஆனால், நாங்கள் நிர்­மா­ணிக்கும் வீடு­களின் மொத்தப் பெறு­மதி ஒரு மில்­லியன் ரூபாய்­க­ளாகும். ஏனென்றால், நிர்­மா­ணப்­ப­ணி­களை இரா­ணுவம் மேற்­கொள்­வதால் கூலிச்­செ­ல­வுகள் ஏதும் ஏற்­ப­டு­வ­தில்லை.

அத்­துடன், இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சகல வளங்­களும் இருக்­கின்­றன. ஆகவே, நான் அர­சாங்க அதி­ப­ரிடம், வீடுகள் நிர்­மா­ணிப்­ப­தற்கு தேவை­யான சகல கட்­டப்­பொ­ருட்­க­ளையும் இங்­கி­ருந்­தே­கொள்­வ­னவு செய்ய வேண்டும் என்றும் கொழும்­பி­லி­ருந்து எதையும் கொண்­டு­வ­ரத்­தே­வை­யில்லை எனவும் கேட்டுக் கொண்டேன்.

இவ்­வாறு உள்ளூர் வளங்­களை பயன்­ப­டுத்தி வீடு­களைக் கட்­டினால் வளங்­க­ளுக்­கான நிதி வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­லாது. பணச்­சுற்­றோ­டட்டம் எங்கள் மக்­க­ளுக்­கி­டையே பகி­ரப்­படும். நான் ஒன்றும் நிதி­ய­மைச்­ச­ரல்ல. ஆனால், பொரு­ளியல் பற்­றிய அறிவு எனக்கும் இருக்­கின்­றது. ஆகவே தான் நாங்கள் எங்­க­ளது வீட்­டுத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

இதற்குத் தேவை­யான பணம் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சி­ட­மி­ருந்­துதான் கிடைக்­கின்­றது. நாங்கள் தற்­போது 100 வீடு­களை முழு­மை­யாக நிர்­மா­ணித்­துள்ளோம். மேலும் 33 வீடு­களை இப்­போது நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். இந்த வீடு­களை எதிர்­வரும் மாதம் 28 ஆம் திக­திக்கு முன்னர் மக்­க­ளிடம் கைய­ளிப்போம்.

சில தாம­தங்­க­ளுக்கு காரணம் எல்லா கட்­ட­டப்­பொ­ருட்­களும் இங்கு கிடைப்­ப­தில்லை. சில­வற்றை வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்தே பெற்றுக் கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கின்­றது. எது எப்­ப­டியோ சிறந்த வீடு­களை நிர்­மா­ணித்துக் கொடுப்­ப­தற்கு இரா­ணுவம் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றது. 44 நாட்­களில் ஒரு வீட்டைக் கட்டும் அள­விற்கு எங்­க­ளிடம் ஆளணி இருக்­கின்­றது. ஆகவே, 44 நாட்­க­ளுக்குள் ஒரு வீட்டைக் கட்டி முடிப்­பதே எங்கள் இலக்கு. ஆனால் சகல மூலப் பொருட்­க­ளையும் இங்கு பெற்றுக் கொள்ள முடி­யா­ம­லி­ருப்­பதே தாம­தத்­திற்குக் கார­ண­மாகும்.

 2016 ஜன­வரி 26ஆம் திகதி முதல் யாழ். கட்­டளைத் தள­ப­தி­யாக பொறுப்­பேற்றேன். எதிர்­வரும் வார­ம­ள­வில்தான் எனது முத­லா­வது வருடம் பூர்த்­தி­யா­க­வுள்­ளது.. ஆரம்­பத்தில் யுத்­தத்­திற்கு பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரி­களில் நானும் ஒருவன். கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­பின்னர் நான் ஒப்­பந்த அடிப்­ப­டையில் அமெ­ரிக்க இரா­ணு­வத்­திற்கு பணி­யாற்­றிய பின்னர் இலங்­கைக்கு வந்தேன்.

இங்கு வந்­த­பின்னர் போருக்கு பின்­ன­ரான சூழலில் காணப்­படும் உண்­மைத்­தன்மை மற்றும் இச்­சூ­ழலில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இருக்­க­வேண்­டிய வகி­பா­கங்கள் மற்றும் ஆற்­ற­வேண்­டிய பணிகள், தற்­போது எதிர்­நோக்கும் முக்­கிய பிரச்­சி­னைகள் பற்­றிய ஆய்­வொன்றை மேற்­கொண்டோம். இங்கு முக்­கி­ய­மான மூன்று பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அதில் முத­லா­வது காணிப்­பி­ரச்­சி­னை­யாகும். இதற்குள் பல பிரி­வுகள் காணப்­ப­டு­கின்­றன. இரண்­டா­வது புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் மற்றும் அவர்­க­ளது பிரச்­சி­னை­யாகும். மூன்­றா­வது பிரச்­சினை அனைத்து மக்­களும் தமது சொந்த மதத்தை பின்­பற்­ற­வது சம்­மந்­த­மாக எழுந்­துள்ள பிரச்­சி­னை­யாகும்.

நான் யாழில் கட்­ட­ளைத்­த­ள­ப­தி­யாக பொறுப்­பேற்­ற­பின்னர் இரா­ணுவ தலை­மை­ய­கத்தில், காணி­களை விடு­விப்­ப­தற்­கு­ரிய ஒரு தனிப் பிரிவு ஒன்றை நிறு­வினேன். இங்கு இரா­ணுவம் 1963 இலி­ருந்து நிலை­கொண்­டி­ருக்­கின்­றது. நாங்கள் ஆரம்­பத்தில் இந்­தி­யா­வி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­படும் கடத்­தலை நிறுத்­து­வ­தற்­கா­கவே யாழிற்கு வர­வ­ழைக்­கப்­பட்டோம்..

யாழ்ப்­பா­ணத்தில் மூன்று இரா­ணுவ டிவி­சன்கள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு மீண்டும் எந்த யுத்­தமும் இடம்­பெ­றப்­போ­வ­தில்லை என்­பதை நான் உறு­தி­யாகத் தெரி­விக்­கின்றேன். ஆனால், வழ­மை­யாக தெற்­கில்­போன்று சில குற்­றச்­செயல் நட­வ­டிக்­கைகள் இங்கும் தொடர்ந்த வண்­ணமே இருக்­கின்­றன.

நான் யாழ் குடா­நாட்டில் பத­வியை பொறுப்­ப­பேற்­ற­போது யாழ் குடா­நாட்­டில்­இ­டம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்­கான 31 முகாம்கள் இருந்­தன. இதில் 971 குடும்­பங்கள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த குடும்­பங்­களைப் பற்­றிய பதி­வு­களை ஆய்­வு­செய்­த­போது இங்­குள்ள குடும்­பங்­களில் 200 குடும்பங்களுக்கு சொந்தமான காணி இருப்பதை அறிந்துகொண்டோம். எஞ்சிய குடும்பங்களுக்கு காணி இருக்கவில்லை. 26 வருடங்களாக முகாம்களில் வாழும் இக்குடும்பங்கள் இன்று பல குடும்பங்களாக பெருகியுள்ளன. எனவே காணி இல்லாத குடும்பங்களுக்கு காணியும் வீடும் வழங்கவேண்டும் என அரசு தீர்மானித்தது.

தேசிய பாதுகாப்பிற்காக மாத்திரமே நாங்கள் இந்தக் காணிகளில் நிலைகொண்டுள்ளோம். மேலும், புலிகள் மீண்டும் உருவாகாமல் இருப்பதை கண்காணித்துக் கொள்வது மாத்திரமல்ல தேசிய பாதுகாப்பு. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக காணப்படும் குற்றங்கள், ஆட்கடத்தல்கள் போன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இராணுவப் பிரசன்னம் இங்கு அத்தியாவசியமாகும். நாட்டில் சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்ட பொலிஸார் இருந்தாலும் யுத்தம் இடம்பெற்ற இடத்தில் இராணுவம் இருப்பது அவசியமாகும் என்றார்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-01-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.