Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சி என்று கூறிக் கொண்டு அராஜகப் பாதையில் அரசாங்கம்

Featured Replies

நல்­லாட்சி என்று கூறிக் கொண்டு அரா­ஜகப் பாதையில் அர­சாங்கம்

22-838454173a4177b79de52bad6ae77a75e692c429.jpg

 

ஜே.வி.பி. தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க குற்­றச்­சாட்டு
(ஆர்.யசி )

நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு அர­சாங்கம் அரா­ஜகப் பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. கொலை, கொள்ளை , அடக்­கு­முறை மூல­மாக தமது அர­சியல் நகர்­வு­களை கையாண்டு ஆட்­சியை தக்­க­வைக்­கவே ரணில் – -மைத்­திரி அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க குற்றம் சாட்­டினார்.

அடுத்த தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­ன­னியின் ஆட்­சியை உரு­வாக்க சகல நட­வ­டிக்­கையும் எடுக்கும். தேர்­த­லுக்கு முன்னர் ஆட்­சியை கைப்­பற்ற முடியும் என்றால் அதையும் செய்ய முயற்­சிப்போம். ஆனால் அதற்­கான சட்ட நகர்­வுகள் இல்­லாத நிலையில் 2020 இல் நடை­பெறும் பொதுத் தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­னணி பல­மான அர­சியல் பய­ணத்தை உரு­வாக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மாநாடு நேற்று நுகே­கொ­டையில் நடை­பெற்­றது. இதில் உரை­யாற்றும் போதே மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­குமார் திசா­நா­யக மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அவர் மேலும் கூறு­கையில்,

இலங்கை வர­லாற்றில் மக்கள் எப்­போதும் அடி­மை­க­ளா­கவே வாழ்ந்து வந்­துள்­ளனர். அரசர் காலத்தில்,வெள்­ளையர் ஆட்­சியில் மட்டும் அல்­லாது எமக்­கென்று ஒரு அர­சியல் பாதையை நாம் அமைத்­துக்­கொண்ட போதும் பிர­தான இரண்டு கட்­சி­களும் அடி­மை­க­ளா­கவே மக்­களை நடத்தி வந்­துள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்­சி­யாக இருந்­தாலும் சரி அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக இருந்­தாலும் சரி அவர்­களின் சர்­வா­தி­கா­ரத்தை தக்க வைக்க மக்­களை அடி­மை­க­ளாக நடத்­தி­யுள்­ளனர். இன்று இரண்டு தரப்பும் ஒன்­றி­ணைந்து கூட்­டாட்சி அமைத்த போதிலும் மக்­களின் நிலை­மைகள் மாற­வில்லை. இந்த நிலைமை இனியும் அவ­சி­ய­மா­னதா? என்­பதே எமது கேள்­வி­யாகும். இனியும் மக்கள் அடி­மை­க­ளாக வாழ­வேண்­டுமா? என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும்.

இன்று நாட்டின் நிலை­மையை மக்கள் நன்கு உணர வேண்டும். அபி­வி­ருத்தி நகர்­வுகள் இல்லை, சுகா­தாரம் நல்ல நிலையில் இல்லை, கல்வி நல்ல நிலை­மையில் இல்லை. விவ­சாயம் தொழில் வாய்ப்­புகள் தொடர்பில் சந்­தே­கத்­துடன் வாழ­வேண்­டி­யுள்­ளது. எதிர்­காலம் தொடர்பில் அச்­சத்­துடன் சிந்­தித்து ஒவ்­வொரு நாளையும் கடத்த வேண்­டிய நிலைமை மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் நடத்தும் இந்த மோச­மான நிலை­மைக்கு மக்கள் பொறுப்பு கூற வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் எந்த வகை­யிலும் இதற்கு மக்கள் பொறுப்பு கூறு­வேண்­டிய அவ­சியம் இல்லை.ஆனால் எந்த சந்­தர்­பத்­திலும் பொறுப்பு கூற வேண்­டிய ஒரு விட­யத்­திற்கு கட்­டா­யத்தின் பெயரில் எமது மக்கள் பொறுப்பு கூற­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

நாட்டின் கடன்­களை காட்டி வற்­வரி அதி­க­ரிக்­கின்­றனர், கடன்­களை காட்டி நாட்டின் நிலங்­க­ளையும் துறை­மு­கங்­க­ளையும் விற்­கின்­றனர், கடன்­களை காட்டி கல்­விக்­கான நிவா­ர­ணத்­தையும்,சுகா­தார நிவா­ர­ணங்­க­ளையும் கொள்­ளை­ய­டிக்­கின்­றனர். இந்த நாட்டின் கடன்­தொகை 1946 ஆம் ஆண்டு 57கோடி யாக இருந்­தது. ஆனால் இன்று இலங்­கையின் கடன் தொகை 10 இலட்­சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்­க­ளாக காணப்­ப­டு­கின்­றது. ஆனால் எந்­த­ளவு கடன் தொகை உள்­ளது என்று இன்று பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும் கூட தெரி­வி­ய­வில்லை. இன்று ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு வாங்­கிய கடன்­களை கூட நினைவில் வைத்­து­கொள்ள முடி­ய­வில்லை. இந்த நாட்­டையும், நாட்டு மக்­க­ளையும் அடகு வைத்து வாங்­கிய கடன்­களின் தொகை என்­ன­வென்­பது தெரி­ய­வில்லை. ஆனால் மக்கள் அதற்­கான வரி­யையும் கடன்­க­ளையும் செலுத்தி வரு­கின்­றனர்.

குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­க­வில்லை

மறு­புறம் கடந்த ஆட்­சியில் கொள்­ளைகள் நடை­பெற்ற நிலையில் குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­ப­தாக கூறினார். ஆனால் இது­வ­ரையில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கவோ சட்ட நட­வ­டிக்கை எடுக்­கவோ அர­சாங்கம் முயற்­சிக்­க­வில்லை. ரணில், மைத்­திரி இணைந்து குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­று­வது மட்டும் அல்­லாது இந்த ஆட்­சி­யிலும் மத்­தி­ய­வங்கி பணத்தை கொள்­ளை­ய­டித்­துள்­ளனர். கடந்த ஆட்­சியின் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­று­வது மட்­டு­மல்­லாது இருக்கும் கள்­ளர்­க­ளையும் காப்­பாற்று கின்­றனர். ஜனா­தி­ப­திக்கு இன்று கள்­ளர்­க­ளுக்கு தண்­டனை வழங்க முடி­யாமல் உள்­ளது. காரணம் இந்த ஆட்­சியில் கள்­ளர்­களை காப்­பற்­றுவோர் எவ்­வாறு பழைய கள்­ளர்­களை தண்­டிக்க முடியும். இன்று குற்­ற­வா­ளி­களை விசா­ரிக்கும் ஆணைக்­குழு முன்­னி­லையில் கள்­ளர்கள் வீரர்கள் போல செயற்­ப­டு­கின்­றனர். ஊட­கங்­களும் கள்­ளர்­களைக் பிர­பல்­யப்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றன. இன்று தம்மை விசா­ரிக்­கப்­போ­கின்­றனர் என்­பது கள்­ளர்­க­ளுக்கே முதலில் தெரி­கின்­றது. விசா­ரணை ஆணைக்­கு­ழுவை விடவும் கள்­ளர்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்­துள்ள அர­சாங்கம் இது­வா­கவே இருக்கும்.

இன்று நாட்­டுக்கு உண்­மை­யான தலை­மைத்­துவம் அவ­சியம். நியா­ய­மான சட்டம் நீதி வேண்டும். நிலை­யான பொரு­ளாதாம் வேண்டும். சுயா­தி­ன­மாக இயங்­க­கூ­டிய ஆணைக்­கு­ழுக்கள் வேண்டும். மக்­களின் நம்­பிக்­கையை வென்ற அரச சேவைகள் வேண்டும்.அதை உரு­வாக்க மக்கள் பல­மாக செயற்­பட வேண்டும். நாட்டின் வளங்­கைளை விற்கும் இந்த அர­சாங்­கத்தின் நகர்­வு­க­ளுக்கு இட­ம­ளிக்க கூடாது. இந்த நகர்­வுகள் நடை­பெற்றால் அது இலங்­கையின் எதிர்­கா­லத்தை மோச­மாக பாதிக்கும். இயற்கை வளங்கள், அரச சொத்­துகள், நிலங்கள் விற்­கப்­ப­டு­வது நாட்டின் திசையை மாற்­றி­விடும். அவ்­வா­றான மோச­மான பாதையில் இன்று அர­சாங்கம் பய­ணித்­துக்­கொண்­டுள்­ளது.

இந்­தியா, சீனா­வுக்கு நாடு­பாங்­கிப்­ப­டு­கின்­றது

ஜன­நா­யகம் என்று கூறிக்­கொண்டு மேலும் மேலும் நாட்டின் அரா­ஜக ஆட்­சியை நடத்­தவே அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. தொடர்ந்தும் கொலை , கொள்ளை , அடக்­கு­முறை என்­ப­வற்றை கையாண்டு தமது அர­சியல் நகர்­வு­களை கையாள முயற்­சிக்­கின்­றனர். சமா­தா­ன­மாக பேச்­சு­வா­ரத்தை மூலம் எந்த பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்க ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு முடி­ய­வில்லை. அதனால் தான் இவர்கள் தாக்­கு­தலை நடத்தி மக்­களை அடக்கி தமது காரி­யங்­களை சாதித்­துக்­கொள்­கின்­றது. தெற்கு சீனா­வுக்கும், வடக்கு இந்­தி­யா­வுக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஹம்­பாந்­தோட்டை துறை­முகம், தெற்கு அபி­வி­ருத்தி வளை­யங்கள் சீனா­வுக்கு வழங்­கி­ய­வுடன் திரு­கோ­ண­மலை துறை­முகம்,பலாலி விமான நிலையம் இந்­தி­யா­வுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது. தெற்கு ரயில் பாதைகள் சீனா­வுக்கு வழங்கும் நிலையில் வடக்கு ரயில் அபி­வி­ருத்தி இந்­தி­யா­வுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு நாட்டை இரண்­டாக பிரித்து இந்­தி­யாவும் சீனாவும் பங்­கு­போடும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே நாட்டை விற்கும் நகர்­வு­களை இனியும் மக்கள் இட­ம­ளிக்கக் கூடாது. ஆகவே இந்த அநி­யா­யங்­க­ளுக்கு எதி­ராக போரா­ட­வேண்டும்.

இந்த நாட்டில் மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் ஏற்­படும் நிலையில் அது தெற்­காக இருக்­கட்டும் அல்­லது வடக்­காக இருக்­கட்டும் முதலில் அநி­யா­யங்­க­ளுக்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன்­னனி வரு­கின்­றது.

மக்கள் பிரச்­சி­னைகள் என்­ற­வுடன் எம்மை நாடும் நிலை­மைக்கு இன்று நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். மக்­களின் மனங்­களை வென்ற கட்­சி­யாக ஜே.வி.பி. உள்­ளது. ஆனால் இது மட்டும் போதாது. ஆட்­சியை அமைக்கும் பல­மான கட்­சி­யாக மாற்­றி­ய­மைக்க வேண்டும். நிலை­யான கொள்கை கொண்ட அர­சாங்கம் செயற்­படும் போதே பல­மான எதிர்க்­கட்சி அவ­சி­ய­மா­னது. நல்ல ஆட்­சிக்கு மட்­டுமே பல­மான எதிர்க்­கட்சி அவ­சியம். இன்று அதற்­கான அவ­சியம் இல்லை. எதிர்க்­கட்சி பொறுப்பை செய்ய நல்ல அரசாங்கம் இல்லை. ஆகவே இனி மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியாக செயற்படுவதை விடவும் பலமான அரசாங்கத்தை அமைக்கவே வேண்டும்.

மக்கள் ஆளும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். அதற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும். அடுத்த ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னனி தனது ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுக்கும். தேர்தலுக்கு முன்னர் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்றால் அதையும் செய்ய முயற்சிப்போம். ஆனால் அதற்கான சட்ட நகர்வுகள் இல்லாத நிலையில் 2020இல் நடைபெறும் பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னனி பலமான அரசியல் பயணத்தை உருவாக்கும். அதற்கான சகல மக்களின் ஒத்துழைப்புகளையும் பெற்று இலங்கையில் பிரபல்யமான மக்கள் இயக்கமான நாம் உருவாக வேண்டும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.