Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பிரதமரின் செயற்பாடுகளுக்குதமிழ் அரசியல்வாதி ஒத்து ஊதுகிறார்’

Featured Replies

‘பிரதமரின் செயற்பாடுகளுக்குதமிழ் அரசியல்வாதி ஒத்து ஊதுகிறார்’
 
 

article_1485230552-aa.jpgவி.நிரோஷினி  

நாட்டில் மீண்டும் பயங்கரவாதச் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டுக்கு, பிரபல தமிழ் அரசியல்வாதியொருவர் ஆதரவளித்து செயற்பட்டு வருவதாக, பிவிதுறு ஹெல உறுமய தெரிவித்தது.  

பிவிதுறு ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சுகீஸ்வர பண்டார இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“வெளிநாடொன்றில் இருந்து, இலங்கைக்கு அதி சக்திவாய்ந்த உபகரணம் ஒன்றை இறக்குமதி செய்ய, முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில், பிரபல தமிழ் அரசியல்வாதி ஒருவரும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறார். அவர் தொடர்பில் இந்த அரசாங்கம் எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை. அந்த உபகரணம் எதற்காக கொண்டுவரப்படவுள்ளது என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்படவில்லை. இச்செயற்பாடு, நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கிவிடப்பட்டுள்ளதா என்றச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்தார். 

“2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், இது போன்று அதி சக்தி வாய்ந்த உபகரணமொன்று, நோர்வே நாட்டிலிருந்து சிறிய ரக விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களிலேயே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இதுபோன்ற செயற்பாடுகள் இடம்பெறவில்லை. 2005ஆம் ஆண்டு, இந்நாட்டை மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்பதற்கு முன்னர் இருந்த நிலைமையே தற்போது உருவாகியுள்ளது.  

ஒரு பக்கத்தில், இந்நாட்டை பிளவுபடுத்தவும் அந்நிய நாட்டுக்கு தாரைவார்த்துக்கொடுக்கவும், இந்ந அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அந்த முயற்சி கைகூடாவிடின், மறுபுறத்தில் மீண்டும் நாட்டில் பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. அதன் முதற்கட்ட நடவடிக்கையே, வெளிநாடொன்றில் இருந்து அதி சக்தி வாய்ந்த உபகரணமொன்றை இலங்கைக்கு கொண்டு வருவதாகும்.  

எனவே, இந்த உபகரணம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ெதளிவுபடுத்த வேண்டும். அதேபோல், இதற்கு பின்னால் இருக்கும் பிரபல தமிழ் அரசியல்வாதி குறித்தும் கூறவேண்டும்” என்றும் அவர் கூறினார்.  

- See more at: http://www.tamilmirror.lk/190233/-ப-ரதமர-ன-ச-யற-ப-ட-கள-க-க-தம-ழ-அரச-யல-வ-த-ஒத-த-ஊத-க-ற-ர-#sthash.Y29icrxE.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.