Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்சீ கப்பல் விவகாரம் மூவருக்கு விடுதலை

Featured Replies

சண்சீ கப்பல் விவகாரம் மூவருக்கு விடுதலை
 
 
சண்சீ கப்பல் விவகாரம் மூவருக்கு விடுதலை
சட்டவிரோதமாக தமிழர்கள் 500 பேரை கனடாவுக்கு அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேரில் மூவர் குற்ற மற்றவர்கள் என உச்ச நீதிமன்றத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.
 
குணா ரொபின்சன் கிறிஸ்துராஜா, லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் மீது கனடா குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
 
2010ஆம் ஆண்டு, 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்கலாக 492 பயணிகள் Sun Sea கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், குறித்த நால்வருக்கும் எதிராக B.C. உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
ஒரு ஆண்டுக்குள் இரண்டு முறை அந்த பகுதிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பலாக Sun Sea கப்பல் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என ஜுரி, நீதவானுக்கு அறிவித்துள்ள நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது.
 
எப்படியிருப்பினும் குனாரொபின்சன் கிறிஸ்துராஜா தொடர்பில் தகவல் அறியமுடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கிறிஸ்துராஜா என்பவர் குறித்த கப்பலுக்கு சொந்தக்காரராக செயற்பட்டுள்ளதுடன், இம்மானுவேல் குறித்த கப்பலின் தலைவராக செயற்பட்டுள்ளார்.
 
தனது தரப்பினரான கிறிஸ்துராஜா குறித்த பயணிகளிடம் இருந்து பணம் பறித்துக் கொண்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை, உள்நாட்டு யுத்தத்தின் போது அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் தப்பிப்பதற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி யுள்ளார் என கிறிஸ்துராஜாவின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.எனினும் அவர் நிரபராதி என நீதி மன்றம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/news/23185

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழரை கனடாவிற்குள் கொண்டுவந்த சன் சீ கப்பல் விசாரணையில் அதிரடி தீர்ப்பு!

 

Image

எம். வீ. சன் சீ கப்பலில் 2010ஆண்டு 380 ஆண்களையும், 63 பெண்களையும், 49 குழந்தைகளையும் கனடாவிற்குள் கொண்டு வந்தமை தொடர்பாக

எம். வீ. சன் சீ கப்பலில் 2010ஆண்டு 380 ஆண்களையும், 63 பெண்களையும், 49 குழந்தைகளையும் கனடாவிற்குள் கொண்டு வந்தமை தொடர்பாக பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றம் இமானுவேல், மகேந்திரன், ராஜரட்ணம்  ஆகிய மூவரையும் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை கப்பல் உரிமையாளர், கப்பல் மாலுமி ஆகியோரது விசாரணை இன்னும் முடிவு பெறவில்லை.

இதேவேளை இக் கப்பலில் வந்த சுமார் 200 பேருக்கு மேல் விசாரணையின் பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

san1%282%29.jpg

san2%282%29.jpg

san3%281%29.jpg

san4%281%29.jpg

san5%281%29.jpg

http://tamilsguide.com/blog/canada-news/5350

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.