Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னங்க சார் உங்க சட்டம்? - ட்ரம்பை எதிர்க்கும் மார்க் சக்கர்பெர்க்!

Featured Replies

என்னங்க சார் உங்க சட்டம்? - ட்ரம்பை எதிர்க்கும் மார்க் சக்கர்பெர்க்!

மார்க்

மார்க் சக்கர்பெர்க் vs பொனால்ட் டரம்ப்!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் வெளினாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதும் டெக் சிஇஓக்கள் அதிர்ச்சியில் ஸ்டேட்டஸ் தட்டியது அனைவரும் அறிந்ததே. அனைவரும் மறைமுகமாக ட்ரம்ப்பை தாக்கி பேசி வந்த நிலையில் முதல் முறையாக ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தனது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

இன்று அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மார்க் கூறியிருப்பதாவது ''எனது மூதாதையர்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் போலந்திலிருந்து வந்தவர்கள். பிரிசில்லாவின் பெற்றோர் சீனா மற்றும் வியட்நாமிலிருந்து வந்த அகதிகள். அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் உருவான நாடு. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

என்னை போல பலரும் அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு பற்றி எண்ணி கொண்டிருப்பீர்கள். இந்த நாட்டை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களையும் அடையாளம் காண வேண்டும். அதற்காக மில்லியன் கணக்கில் உள்ள பதிவுசெய்யப்படாத புலம்பெயர்ந்த மக்களை பயத்தில் ஆழ்த்துவது நியாமல்ல

 

 

My great grandparents came from Germany, Austria and Poland. Priscilla's parents were refugees from China and Vietnam. The United States is a nation of immigrants, and we should be proud of that.

Like many of you, I'm concerned about the impact of the recent executive orders signed by President Trump.

We need to keep this country safe, but we should do that by focusing on people who actually pose a threat. Expanding the focus of law enforcement beyond people who are real threats would make all Americans less safe by diverting resources, while millions of undocumented folks who don't pose a threat will live in fear of deportation.

We should also keep our doors open to refugees and those who need help. That's who we are. Had we turned away refugees a few decades ago, Priscilla's family wouldn't be here today.

That said, I was glad to hear President Trump say he's going to "work something out" for Dreamers -- immigrants who were brought to this country at a young age by their parents. Right now, 750,000 Dreamers benefit from the Deferred Action for Childhood Arrivals (DACA) program that allows them to live and work legally in the US. I hope the President and his team keep these protections in place, and over the next few weeks I'll be working with our team at FWD.us to find ways we can help.

I'm also glad the President believes our country should continue to benefit from "people of great talent coming into the country."

These issues are personal for me even beyond my family. A few years ago, I taught a class at a local middle school where some of my best students were undocumented. They are our future too. We are a nation of immigrants, and we all benefit when the best and brightest from around the world can live, work and contribute here. I hope we find the courage and compassion to bring people together and make this world a better place for everyone.

நாம் அகதிகளுக்கு உதவுவதற்காக நம் நாட்டின் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும். அப்படியில்லை என்று முன்பு யாராவது கூறியிருந்தால் இன்று பிரிசில்லாவின் குடும்பம் இங்கு இருந்திருக்காது. அதனால் இந்த நாட்டில் சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் குடியேறியவர்களை கவனத்தில் கொண்டு, அதுபோல் உள்ள 7.5 லட்சம் பேரை இந்த நாட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பை அதிகரிக்க ட்ரம்ப் மற்றும் அவரது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்களும் உதவ தயாரக இருக்கிறோம்.

மார்க் சக்கர்பெர்க்

இந்த நாட்டில் உள்ள திறமையான மக்களால் அரசுக்கு நன்மை அதிகம் என்பதை அதிபர் ட்ரம்ப் நம்ப வேண்டும். இந்த விஷயங்கள் எனது குடும்பம் என்பதை தாண்டி என்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்தன. சில காலங்களுக்கு முன்னால் ஒரு பள்ளியில் பாடம் எடுக்க சென்றிருந்தேன். அங்கு மிக திறமையுள்ள மாணவர்கள் பதிவு செய்யப்படாத புலம் பெயர்ந்த மக்கள். அவர்கள் தான் அமெரிக்காவின் எதிர்காலம். மீண்டும் கூறி கொள்கிறேன் அமெரிக்கா புலம்பெயந்தவர்களால் ஆன நாடு. உலகின் திறமையானவர்கள் வாழ விரும்பும் நாடு. அவர்களது வேலை மற்றும் பங்களிப்பை இந்த நாட்டுக்காக அளிக்கின்றனர். அமெரிக்காவை உலகில் வாழ மிகவும் தகுதியான இடமாக மாற்றுவோம்’’ என்று கூறியுள்ளார்.

இதற்கு முன் ட்ரம்ப்பை நேரடியாக குறிப்பிட்டு பேசாத மார்க் இப்போது பேசியதற்கு இன்னோரு காரணம் ஃபேஸ்புக்கின் பல ஊழியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து இங்கு வேலை செய்பவர்கள். வர்த்தக ரீதியாகவும் ஃபேஸ்புக் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதும் மார்க்கின் இந்த அறிக்கைக்கு மறைமுக காரணமாக கூறப்படுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப்பை விமர்சிக்க தயங்கும் வேளையில் மார்க்கின் முதல் குரல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

http://www.vikatan.com/news/information-technology/79004-mark-zuckerberg-raises-his-voice-against-donald-trump.art

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அகதிகளுக்கான குடியுரிமைக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ட்ரம்ப் முடிவு மீது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் விமர்சனம்

 

 
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (இடது) ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்க்கர்பர்க் (வலது).
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (இடது) ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்க்கர்பர்க் (வலது).
 
 

அகதிகளுக்கான குடியுரிமைக் கொள்கையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொண்டுவந்துள்ள மாற்றங்களை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் அகதிகளுக்கான குடியுரிமைக் கொள்கையில் பல்வேறு அதிரடி மாற்றங்களைப் புகுத்திய அதிபர் ட்ரம்ப் அதற்கான செயலாக்க உத்தரவை வெள்ளிக்கிழமையன்று பிறப்பித்தார்.

அவரது இந்தக் கொள்கையை உலகம் முழுவதும் பலரும் பரவலாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு நிலைத்தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது தாத்தா, பாட்டி ஜெர்மனி, ஆஸ்த்ரியா, போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். பிரிஸில்லாவின் (மார்க்கின் மனைவி) பெற்றோர் சீனா, வியட்நாமைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் ஆன நாடு. அதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் கவலை என்னையும் ஆட்கொண்டிருக்கிறது. அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள அகதிகள் தொடர்பான புதிய குடியுரிமைக் கொள்கை செயலாக்க உத்தரவு வேதனை அளிக்கிறது.

இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், அதற்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களையே குறிவைக்க வேண்டும். அதைவிடுத்து அமெரிக்காவில் வசிக்கும் எல்லா மக்கள் மீதும் சட்ட கண்காணிப்புகளை நீட்டிப்பது அமெரிக்கர்களின் பாதுகாப்பை எந்தவகையிலும் உறுதிப்படுத்தாது. இதனால், நம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அறிவுசார் வளம் கிடைக்காமல் போகும். அமெரிக்க குடியுரிமைக்காக இன்னும் சரியான ஆவணங்களைப் பெற முடியாமல் அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கானோர் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படக்கூடும் என்ற அச்சத்திலேயே வாழ்வர்.

உதவி தேவைப்படுபவர்களுக்கும் அகதிகளுக்கும் நமது நாட்டின் கதவுகளை எப்போதுமே திறந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் நமது அடையாளம்.

அகதிகளை புறக்கணித்து இப்படி ஒரு கொள்கையை நாம் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவேற்றியிருப்போம் என்றால் இன்று பிரிஸில்லா இங்கு இருந்திருக்க மாட்டார்.

மிகச் சிறிய வயதிலேயே பெற்றோருடன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சிறார்களுக்காக தன்னிடம் திட்டம் இருப்பதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

இப்போதைக்கு அமெரிக்காவில் 7 லட்சத்து 50,000 குழந்தைகள் அத்தகைய அந்தஸ்தில் இருக்கின்றனர். மேலும், நம் நாட்டுக்கு வரும் நல்ல அறிவுஜீவிகளை வரவேற்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியிருப்பதும் மகிழ்ச்சியே. அதே வேளையில் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சிறார்களுக்கு அவர்கள் அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியமர்த்தப்பட்டு வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

என் குடும்பத்தில் பலர் புலம்பெயர்ந்து அமெரிக்கா வந்தவர்கள் என்பதால் மட்டுமல்ல எனக்கு இப்பிரச்சினையில் உண்மையிலேயே கூடுதல் அக்கறை இருக்கிறது.

நான் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். அங்கேயிருந்த எனது மாணவர்களில் சிலருக்கு குடியேற்றத்துக்கான உரிய ஆதார ஆவணங்கள் இல்லை. அவர்களும் நம் எதிர்காலம்தானே.

நம் நாடு புலம்பெயர்ந்தவர்களால் ஆனது. அவ்வாறு குடியேறியவர்களின் மதுநுட்பத்தால் நாம் பயனடைந்திருக்கிறோம். எனவே, அகதிகளை ஏற்றுக் கொள்ளும் மன தைரியத்தையும் இரக்க குணத்தையும் பெற்று இந்த உலகை எல்லோரும் வாழக் கூடிய இடமாக மாற்றுவோம் என நான் நம்புகிறேன்"

இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ள அகதிகள் கொள்கை என்ன?

ட்ரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, சிரிய அகதிகளுக்கு விசா வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படுகிறது. ட்ரம்ப்பிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை சிரியர்களுக்கு அமெரிக்க விசா கிடையாது. தற்போது, பரிசீலனையில் இருக்கும் விசா படிவங்கள்கூட கருத்தில் கொள்ளப்படாது.

மேலும், பார்டர் ரெஃப்யூஜி புரோகிராம் எனப்படும் எல்லையில் காத்திருக்கும் அகதிகள் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கான திட்டத்தை 4 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

இது முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் ட்ரம்ப் நிகழ்த்தும் கெடுபிடி என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேவேளையில், ட்ரம்பின் புதிய கொள்கையால் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்தவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/அகதிகளுக்கான-குடியுரிமைக்-கொள்கையில்-அதிரடி-மாற்றம்-ட்ரம்ப்-முடிவு-மீது-பேஸ்புக்-நிறுவனர்-மார்க்-விமர்சனம்/article9507148.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.