Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடி படுகொலை நியாயமானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 
இன்று காத்தான்குடி பள்ளிவாசலில் அப்போதைய முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா, கரிகாலன் தலைமையிலான விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை வெட்டி கொலைசெய்தனர். ஆனால் அது ஜீரணிக்க முடியாத, மனிதநேயத்தை நேசிப்போர் ஏற்றுகொள்ள கூடியதல்ல. காலங்கள் கடந்தாலும் அதற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பு கோரினர். ஆனால் கருணா, கரிகாலன் அவர்கள் அத்தகைய கொலைகளை செய்ய முடிவெடுத்தது ஏன் என இந்த கட்டுரையை #வாசியுங்கள். 
 
திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraayk-kea'ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
 
சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.
 
இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
 
2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
 
1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.
 
கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.
 
இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது.காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.
 
இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.
சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.
 
அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.
 
20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை 05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை 10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை . 16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்கள்.
 
கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.
 
பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.
 
தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம்.
 
இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.
 
1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில்முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப்புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்ததமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக்குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார்கோயிலில் 85 இளைஞர்களையும் டுகொலைசெய்தனர்.

மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம்உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக மைந்தபோதிலும் எவராலும் தடுத்துநிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ்,முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றிஅழித்தொழிக்கப்பட்டன.

சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனைகரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப்பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக்கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக்கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன./"இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை விசாரணையும்இல்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.

இந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போதுபேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

மறுபடியும் மறுபடியும் அவர்கள் அப்படி செய்தார்கள் அதற்கு பதிலாக நாங்கள் இப்படி பண்ணினோம் என்ற வாதத்துக்குள்ளேயே உழறாமல் - இப்ப என்ன செய்யலாம் என்று எழுதினால் எமது அடுத்த சந்ததியாவது நல்லா இருக்கும். 
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழராவது அவர்கள் அப்படி செய்தார்கள் அதனால் இப்படி நடந்தது என்கிறார்கள் ஆனால் அவர்களோ தமிழர் இப்படி செய்தார்கள் என்றதோடு சரி. தாம் என்ன செய்தோம் என்பதை பற்றி மூச். எந்தவெரு சோனகனும் வாயை திறக்கவில்லை. ஆனால் தமிழர் தரப்பில் சில செம்புகள் மட்டும் தூக்கியபடி.

6 hours ago, ஜீவன் சிவா said:

மறுபடியும் மறுபடியும் அவர்கள் அப்படி செய்தார்கள் அதற்கு பதிலாக நாங்கள் இப்படி பண்ணினோம் என்ற வாதத்துக்குள்ளேயே உழறாமல் - இப்ப என்ன செய்யலாம் என்று எழுதினால் எமது அடுத்த சந்ததியாவது நல்லா இருக்கும். 
 

துரையப்பா விளையாட்டரங்கிலோ முற்றவெளியிலோ அட்லீஸ் வல்லை வெளியிலோ காத்தான்குடி நினைவுநாளை கொண்டாடுங்கள்.

18 hours ago, ஜீவன் சிவா said:

மறுபடியும் மறுபடியும் அவர்கள் அப்படி செய்தார்கள் அதற்கு பதிலாக நாங்கள் இப்படி பண்ணினோம் என்ற வாதத்துக்குள்ளேயே உழறாமல் - இப்ப என்ன செய்யலாம் என்று எழுதினால் எமது அடுத்த சந்ததியாவது நல்லா இருக்கும். 
 

இதைப் பற்றி கதைப்பதெண்டால் கனக்க கதைக்கலாம். ஆனால் இதுக்கை நிண்டு மினக்கெட  நேரம் இல்லை அத்துடன் இதைப்பற்றி கதைப்பதால் ஒருவருக்கும் ஒரு பிரயோசனமும் இல்லை, ஒரு சில செம்பு தூக்கிகளைவிட.

முஸ்லீம்களைப்பற்றி கவலைப்பட அவர்களுக்கென்று கனக்க அரசியல்வாதிகள் இருக்கினம். இந்த ஒரு சில சம்பவங்களை வைத்துக்கொண்டு, அனுதாப முறையில், அவர்கள் கனக்க உதவிகள் பெற்றுக்கொண்டு இலங்கை முழுக்க வசதியாக  இருக்கின்றார்கள். 

ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எந்த ஒரு உதவியியும் சொல்லிக்கொள்ளும்படி பெறவில்லை. கஷ்டப்பட்டு முன்னேற விளைபவர்களையும், சில பல பொய் காரணங்களை கூறி கைது செய்கிறார்கள். கேட்டால் சுமந்திரனை கொல்ல முயற்சி எண்டு பேய்ப்பட்டம் காட்டுகின்றார்கள். 

அரச புலனாய்வுதுறையில் முக்கியமாக செயற்படுபவர்கள் நீங்கள் தூக்கிப்பிடிக்கும் முஸ்லீம்களும் கருணா போன்ற ஒரு சில தமிழ் துரோகிக்குள்ளும் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபை தேர்த்தலின் பின் சம்பந்தர் ஐயா ஹக்கீமுடன் சேர்ந்து ஒரு கூட்டாட்சி அமைக்கலாம் என காத்து கிடந்தது மட்டுமில்லாமல் தொலை பேசி மூலம் எத்தனை தடவை ஹக்கீமுடன் பேச முனைந்து இறுதியில் ஹக்கீம் அரசுடன் ஒப்பந்தம் செய்து சிங்களவருடன் கூட்டாட்சி செய்து கொண்டு கூட்டமைப்பின் காலை வாரிவிட்டார்.

நாம்(தமிழர்கள்) அரசபடைகள் . சிங்கள காடையர்களின் வன்முறைகளால்  காலம் காலமாக பாதிக்கப்பட்டதால் எம்மை நாம் ஆள நினைக்கிறோம்.கடைசி சில முக்கியமான அதிகாரங்களை பெற்று சுயாட்சியாக வாழ நினைக்கிறோம் ஆனால் முஸ்லிம் தலைமைகள் அரசுடன் சேர்ந்து பெறக்கூடியதை பெற்று வாழலாம் என நினைக்கிறார்கள். யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களின் கட்சியில் தாவி அமைச்சர் பதவிகளை பெற்று தமது மக்களுக்கு உதவுகிறார்கள்.

4 hours ago, Surveyor said:

முஸ்லீம்களைப்பற்றி கவலைப்பட அவர்களுக்கென்று கனக்க அரசியல்வாதிகள் இருக்கினம்.

உண்மை இதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.