Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கைபற்றிய சான்றுப் பொருட்கள் எம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல” தம்மீது சுமத்தப்பாட்ட குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள் மறுப்பு:-

Featured Replies

“கைபற்றிய சான்றுப் பொருட்கள் எம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல” தம்மீது சுமத்தப்பாட்ட குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள் மறுப்பு:-

 couts1.jpg

 

அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில்  வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்   கைது செய்யப்பட்ட   சந்தேக நபர்களான       முன்னாள் போராளிகள்   ஐந்து போரையும் இன்று கிளிநொச்சி  நீதவான் நீதிமன்றில்  ஆயர்ப்படுத்திய பொழுது  சந்தேக நபர்கள்   தங்கள் மேல்  சுமத்தப்பட்ட  குற்றங்களை  தாம் செய்யவில்லை  எனவும் கைபற்றிய  சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து  எடுக்கப்பட்டவை அல்ல  எனவும் தாம்  அக்குற்றங்களை  புரியவில்லை  எனவும்    சட்டத்தரணிகளுக்கு    அறிவுறுத்தல் வழங்கப்பட்டதிருந்த போதும்  அதனை மன்றில்  சமர்ப்பிக்க  முடியவில்லை என       அவர்கள் சார்பில் தோற்றிய    சட்டத்தரணிகளில்  ஒருவரான  தில்லையம்பலம் அர்ச்சுனா  தெரிவித்தார்

 

இன்றைய தினம்  குறித்த  வழக்கில் ஆயரான சட்டத்தரணிகளில் ஒருவரான தில்லையம்பலம் அர்ச்சுனாவிடம்  வழக்குத் தொடர்பில் எழுப்பிய  கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் குறித்த  வழக்குத்தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்

 

 couts2.jpg

 கைது செய்யப்பட்ட      B4717 சந்தேக  நபர்களாக  முருகையா தபேந்திரன் ,லூவிஸ்மரியநாயகம்  அயந்தன்  ஆகியோரையும் B4317 சந்தேக நபர்களாக காராளசிங்கம் குலேந்திரன் ,வேலாயுதம்  விஜயகுமார்  ஆகியோரையும் மற்றும் B4917 சந்தேகநபரான ஞானசேகரம்  ராஜ்மதன்  ஆகியோரை  வெவ்வேறு  வழக்கு   இலக்கத்தில் வழக்கு   தாக்கல் செய்தாலும்  இவர்கள் மீது   ஒரே சட்டத்தின் கீழ்  பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் B அறிக்கை மூலம்  நஞ்சுகள் மற்றும் அபின் அபாயகர ஔடதங்கள் சட்டப் பிரிவின் கீழும்  அபாயகரமான ஆயுதங்களின் சடப்பிரிவின்  கீழுமே  வழக்குத் தாக்கல் செய்யப்படுள்ளது

 

மேற்குறித்த  சட்டங்களான நஞ்சுகள் மற்றும் அபின் அபாயகர ஔடதங்கள் சட்டப் பிரிவு 54  அ ,ஆ ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையாலும்  அபாயகரமான ஆயுதங்களின் சடப்பிரிவின்  கீழும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையால் கௌரவ  நீதவான் நீதிமன்றிற்கு பிணை  வழங்குவதற்கான அதிகாரம் இல்லை அதனால்  கௌரவ  நீதவான் நீதிமன்றில் பிணை விண்ணப்பத்தினை  செய்யமுடியாத நிலை காணப்படுகிறது அத்துடன்  பிணை விண்ணப்பமானது  கௌரவ  யாழ்  மேல் நீதிமன்றில்தான்   செய்யமுடியும்

 couts3.jpg

  குறித்த குற்றச்சாட்டிற்கு சந்தேக நபர்கள்   தங்கள் மேல்  சுமத்தப்பட்ட  குற்றங்களை  தாம் செய்யவில்லை  எனவும் கைபற்றிய  சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து  எடுக்கப்பட்டவை அல்ல  எனவும் தாம்  அக்குற்றங்களை  புரியவில்லை  எனவும் எமக்கு தெரிவித்திருந்த போதும் இது தொடர்பான  விண்ணப்பங்கள் வழக்கு விளக்கத்திற்கு  நியமிக்கப்படுகின்ற தினங்களிலையே செய்துகொள்ள  முடியும்  தற்பொழுது வழக்கானது புலன்விசாரணைக்குரிய காலமாக  வழக்கை  தொடுத்த தரப்பான  பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விண்ணப்பம்  செய்துள்ளனர் புலன்விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் B அறிக்கையில் காணப்படுகின்ற சட்டப்பிரிவுகளை மையமாக வைத்தே கௌரவ  நீதவான் நீதிமன்றில்  நடவடிக்கைகள்  எடுக்க முடியும் அதனால் குறித்த சந்தேக நபர்களுக்கான பிணை  விண்ணப்பமானது கௌரவ  நீதவான் நீதிமன்றில்   செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது தாம்  அக்குற்றங்களை  புரியவில்லை  எனவும் எமக்கு தெரிவித்திருந்த போதும் பிணை விண்ணப்பமானது  யாழ்  மேல் நீதிமன்றில்தான் கோர செய்யமுடியும் என்பதே காரணமாகும்  எனவும் தெரிவித்தார்

 couts4.jpg

 

அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் ஐந்து  பேரையும்  எதிர்வரும்  இரண்டாம்மாதம் பதின்மூன்றாம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்க  கிளிநொச்சி நாதவான் நீதிமன்று  உத்தரவிட்டுள்ளதுடன்  B4717, B4917 ஆகிய  சந்தேக நபர்களிடம் இருந்து கைபெர்ரப்பட்டதாக கூறப்படும்  சான்றுப் பொருட்களை  அரச பகுப்பாய்வுத்  திணைக்களத்திற்கு  அனுப்பிவைக்குமாறும் மன்று  பணித்துள்ளது

couts5.jpg

http://globaltamilnews.net/archives/15707

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.