Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவான மங்களாவின் வாக்கே மகிந்தவின் சீற்றத்திற்கான காரணம்.

Featured Replies

ஐ.நாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவான மங்களாவின் வாக்கே மகிந்தவின் சீற்றத்திற்கான காரணம்.

அண்மையில் பதவியில் இருந்து நீக்கபட்ட மூன்று அமைச்சர்களிலும், துறைமுகங்கள் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் மங்களா சமரவீரா வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் ஐ.நா சபையில் நடைபெற்ற தீர்மானம் ஒன்றின் மீதான வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்ததும் மகிந்தாவின் கோபத்திற்கான ஒரு காரணம் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:

மங்களா பலஸ்த்தீனத்தை ஆதரித்தது தான் ஐ.நாவின் சிறுவர்களும் ஆயுத மோதல்களும் என்னும் பிரிவிக்கான விசேட பிரதிநிதியான அலன் றொக்கினால் சமர்ப்பிக்கப்பட்ட சிறீலங்கா அரசு மீது குற்றம் சுமத்தும் அறிக்கைக்கான காரணம் எனவும் மகிந்த எண்ணியுள்ளார். மங்களாவின் இந்த செயற்பாடு அமெரிக்காவிற்கும் சிறீலங்காவிற்குமான உறவுகளை பாதித்துள்ளது.

மேலும் பலவிடயங்கள் தொடர்பாக மங்களாவுடன் பேசுவதற்கு மகிந்த பலதடவைகள் முயன்றுள்ளார் ஆனால் பல சந்தர்ப்பங்களில் மங்களா மகிந்தாவை சந்திப்பதை தவிர்த்ததுடன் மகிந்தாவின் தொலைபேசி அழைப்புக்களையும் உதாசீனம் செய்துள்ளார். இறுதியில் மகிந்தவால் ஒரு உதவி காவல்த்துறை சுப்பிரிண்டன் தூதரக அனுப்பப்பட்டார் ஆனால் வீட்டில் இருந்தபடியே மங்களா தான் இல்லை என்ற பதிலை தனது உதவியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறீலங்காவில் ஒவ்வொரு ஐந்து மணிநேரத்திற்கும் ஒருவர் காணாமல் போகின்றனர் என்ற மங்களாவின் கடிதமும், சிறீலங்காவில் நடைபெறும் ஆட்கடத்தல்கள், கொலைகள், மனிதஅவலங்கள் தொடர்பான கடிதங்களும் மகிந்தாவை சினம் கொள்ள வைத்துள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அதேசமயம் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட மூன்று அமைச்சர்களினதும் உத்தியோகபூர்வ இல்லங்களும் அரசினால் கையகப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மங்களாவின் நெருங்கிய நண்பரும் விமானநிலையம் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து சபைத் தலைவருமான ரிரான் அலஸ் என்பவரை பதவியில் இருந்து விலகுமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள மற்றும் ஆங்கில வாரப்பத்திகைகளின் வெளியீட்டாளராக ரிரான் அலஸ் பணியாற்றுவதுடன், இந்த பத்திரிகைகள் மகிந்தவின் இரு சகோதரர்களான பசில் ராஜபக்சா, கோத்தபாய ராஜபக்சா ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மங்கள சமரவீராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து மாத்தறையின் சில பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கின்றன.

சிறீலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சா துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சரும் மாத்தறை பகுதி சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான மங்களா சமரவீராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து மாத்தறையின் சில பகுதிகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன், மங்கள நாங்கள் உங்களுடன் நிற்போம் என்பது போன்ற சுலோகங்களும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

மேலும் மூன்று நாள் தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள மங்களா அங்கிருந்து தொலைபேசி ஊடாக கொழும்பு வாரப்பத்திரிகை ஒன்றிற்கு தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்துக்களை வழங்கியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

மகிந்த என்னையும் ஏனைய இருவரையும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கியது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. இப்படி நடைபெறும் என்று எனக்கு முன்பே தெரியும். கோழைகள் தங்களால் முடிந்த அழிவுகளை தான் செய்வார்கள்.

அரச அதிபர் மகிந்த நாட்டை மிகவும் ஆபத்தான பாதைக்கு கொண்டு செல்கிறார். அவர் என்னை பதவியில் இருந்து நீக்கியது சுதந்திரமாக பேசும் உரிமையை எனக்கு தந்துள்ளது. நாட்டில் நடைபெறும் படுகொலைகள், கடத்தல்கள், மனிதஅவலங்கள் தொடர்பாக என்னால் சுதந்திரமாக பேசமுடியும். நானும் பதவிநீக்கப்பட்ட ஏனைய இரு அமைச்சர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஊடகத்துறையினருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட மூன்று அமைச்சர்களும் தமது தவறுகளை உணர்ந்து தன்னிடம் மன்னிப்புக் கேட்டால் அவர்களை மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களில் நியமிப்பதுடன் அவர்களுக்கு உயர் பாதுகாப்பும் மீள வழங்கப்படும் என மகிந்த தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீக்கப்பட்ட அமைச்சர்களின் பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சாவினால் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களின் உயர் பாதுகாப்புக்களும் அரசினால் விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தமது பாதுகாப்பை அதிகரிக்கும் படியும் அனுரா பண்டாரநாயக்கா, மங்களா சமரவீரா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் அரசிடம் வேண்டுகோள் விடுத்த 48 மணிநேரத்தில் அவர்களின் பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவுடன் இந்த மூன்று மூத்த அமைச்சர்களினதும் பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டதுடன் அவர்களின் பாதுகாப்பிற்கு இரு காவல்துறை உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று அமைச்சர்களின் பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினரும், மேலதிகமாக பின்தொடர்ந்து செல்லும் வாகனங்களும் முன்னர் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவினால் தான் மேற்படி அமைச்சர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் மீளப்பெறப்பட்டதாகவும். தமது அறிவித்தல்கள் இல்லாது இந்த அமைச்சர்களின் பாதுகாப்பில் தலையிட வேண்டாம் என்று இராணுவத்தினரும் பணிக்கப்பட்டுள்ளனர்.

எனது பிரச்சாரங்களால் தான் விடுதலைப்புலிகளின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தது, எனவே எனக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து ஏற்படலாம். எனது பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என மங்களா பெப்ரவரி 7 ஆம் நாள் சிறீலங்கா காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேரா மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்த மங்களாவின் பாதுகாப்பு உறுப்பினர்களை நீக்கிவிட்டார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் தனது உயிருக்கு வேறு அரசியல் கட்சிகளாலும் ஆபத்து நேர்ந்துள்ளதாகவும், அரச அதிபர் தேர்தலின் போது மகிந்தவின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தான் பிரதான இணைப்பாளராக இருந்ததாலும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அதனால் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் அனுரா பண்டாரநாயக்கா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அவரது பாதுகாப்பை அதிகரிக்கும்படி கடந்த வாரம் உத்தரவிட்ட மகிந்த தற்போது பாதுகாப்பை விலக்கிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு உள்வாங்கியதற்கு எதிர்ப்புக்களை தெரிவித்தால் தான் இந்த மூன்று அமைச்சர்களும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவர்களது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது

-Puthinam-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.