Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா அவசரம்: எம்.எல்.ஏ.,க்கள் கோபம்

Featured Replies

சசிகலா அவசரம்: எம்.எல்.ஏ.,க்கள் கோபம்
 
 
 

முதல்வர் பதவியை பிடிக்க, சசிகலா மேற்கொண்ட அவசர நடவடிக்கை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_170641120170207235719_318_219.jpg

ஜெ., மறைந்ததும், அ.தி.மு.க., பொதுச் செயலர் மற்றும் முதல்வர் பதவிக்கு, கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டது. ஜெ., இருந்த போதே, இரு முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார்.

பொதுச் செயலர் பதவியில், சசிகலாவை அமர வைக்க, அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். அதற்காக, கட்சி நிர்வாகிகளை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எதிர்த்தவர்களுக்கு, முக்கிய பதவி வழங்கப்படும் என, வாக்குறுதி வழங்கப்பட்டது. பலர் கவனிக்கப்பட்டனர்; சிலர் மிரட்டப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அப்போதே, அவர் எப்போது வேண்டுமானாலும், முதல்வர் பதவிக்கு வரலாம் என்ற பேச்சு நிலவியது. அதன்படி, 5ம் தேதி, முதல்வர் பன்னீர்செல்வத்தை, ராஜினாமா செய்ய வைத்தார். உடனடியாக, சட்டசபை கட்சி தலைவராக தேர்வானார்.


இப்படி, முதல்வர் பதவியில் அமர்வதற்காக, அவர் மேற்கொண்ட அவசர நடவடிக்கைகள், அவரின் ஆதரவு வட்டத்திலேயே அதிருப்தியைஏற்படுத்தி உள்ளது.

போராட்டம்

இது குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமனம் செய்யப்பட்டதை, கட்சி யின் கீழ்மட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்பதவியை குறிவைத்து, சசிகலா செயல்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
அவரை ஆதரித்து, கட்சி நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டர்களை, தொண்டர்களே கிழித்தெறிந்தனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. தடையை நீக்க, முதல்வர் பன்னீர் சட்டம் கொண்டு வந்தார். இதன் காரணமாக, சசி எதிர்ப்பு குறைந்திருந்தது.

இன்னும் சில மாதங்களுக்கு, குறைந்தது பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை, சசிகலா அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், முதல்வர் பதவி, தன்கையை விட்டு போய் விடுமோ என்ற அச்சத்தில், அவசர அவசரமாக, பன்னீர் செல்வத்தை, ராஜினாமா செய்ய வைத்தார்.
மறு நாளே முதல்வராகி விடலாம் என, கனவு கண்டார்.
ஆனால், கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர முடியவில்லை. கட்சி

 

தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம், கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், அவசரமாக முதல்வராக அவர் முயற்சித்தது, எதிர்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

ஆலோசனை

கட்சியின் ஓட்டு வங்கியே பெண்கள் தான். அவர்கள் அனைவரும் திட்டி தீர்க்கின்றனர். ஓட்டு கேட்டு, தொகுதிக்கு செல்ல முடியுமா என்றே தெரியவில்லை. திடீர் பதவியேற்பு ஏற்பாடு, கவர்னர் மூக்கறுப்பு, அதனால், ஒத்திவைப்பு என, அனைத்தும் கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கி உள்ளன.

சசிகலாவிற்கு, யாரோ தவறான ஆலோசனைகள் தெரிவித்து உள்ளனர். சற்று தாமதமாக, எதிர்ப்புகள் அடங்கிய பின், முதல்வர் பதவிக்கு வந்தால், பிரச்னை இருந்திருக்காது. தற்போது, அவரது அவசரத்தால், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706411

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.