Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டுகள்

Featured Replies

சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டுகள்

தமிழ்நாடே தற்போது ஒரு அரசியல் பிரளயத்தை கண்டு வரும் நேரத்தில், நடிகர் கமலஹாசன் சர்ச்சையான இரண்டு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

 
 
 
 
சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டுகள்
 
தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
 
முதல் டுவீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வரூபம் படம் கடந்த சிக்கல்களுடன் வெளியாகியது, அந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள அவர், மக்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று தனக்கு ஆதரவாக நின்றதாக குறிப்பிட்டுள்ளார். 
 
மற்றொரு டுவீட்டில், தமிழகமே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்னதாக அவர்கள் எழுந்து விடுவார்கள் என பதிவு செய்துள்ளார்.
 
தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு இரண்டு கருத்துக்களும்
பொருந்துவதால்,  கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார் என அனைவரும் வழக்கம் போல குழம்பி வருகின்றனர்.
 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/08014818/1066947/kamalhassan-tweets.vpf

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டைத் தனிநாடாக மாற்றிவிடாதீர்கள்' - கமல் வேதனை

kamal hassan

பரபரப்பான தமிழக அரசியல் சூழல் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், 'தமிழ்நாட்டைத் தனிநாடாக மாற்றி விடாதீர்கள். சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடுத்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? சத்யராஜ், பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா?. நாம் முதலில் மனிதர் then only actors' என தனது கருத்துகளை வெளிப்படையாகக் கூறி வருகிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80162-dont-break-tamilnadu-in-to-a-country-says-kamal-hassan-in-twitter.art

  • தொடங்கியவர்

பெரியாரைப் பற்றி சும்மா பேசினால் போதுமா? சத்யராஜுக்கு கமல்ஹாசன் கேள்வி!

 

 
kamal_tweet

 

சென்னை: தந்தை பெரியார் பற்றி சும்மா பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? செயலில் எதுவும் காட்ட வேண்டாமா என்று சத்யராஜூக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது தமிழக அரசியலில் நடந்து வரும் விவகாரங்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் அவ்வப்பொழுது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக வெளியிட்டு வருகிறார்.  

அந்த வரிசையில் தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வம் நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து பேட்டியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.

இது தொடர்பாக கருத்துக்களை நேற்றிரவே டிவிட்டரில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதே போல  இது தொடர்பான கருத்துக்கள்  இருந்தால் மற்றவர்களும் அதனை தயங்காமல் வெளியிட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதில் அவர் நடிகர் சத்தியராஜை நோக்கி அவர், "சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம,இந்த நேரத்துல ஒரு dubsmash ஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் then only actors" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நடிகர் மாதவனை நோக்கி அவர் தமிழகத்தில் நிலவும் சிக்கலைப் பற்றி பேசுங்கள்.  உங்கள் கருத்து மாறுபட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. பேசுங்கள் என்று கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.