Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்கு சென்ற 5 இளைஞர்கள் மாயம்

Featured Replies

புதுக்கோட்டை அருகே இலங்கையிலிருந்து வந்த இலங்கைத் தமிழர்களில் ஐந்து வாலிபர்கள் திடீரென்று மாயமான சம்பவம் பொலிஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. தப்பிச் சென்ற இலங்கை வாலிபர்கள் ஐந்து பேரும் அழியாநிலை முகாமில் இருந்து பொலிஸார் மீட்டனர்.

இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உயிருக்குப் பயந்து ஏராளமான தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதுபோன்று இலங்கை யாழ்ப்பாணம் பஜார் பகுதியில் வசித்துவந்த சிவலிங்கம் மனைவி சுப்புத்தாய் (62) இவரது மகன் ஐங்கர ரூபன் (31) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் ரமேஷ் என்ற பிரசன்னா (23), நாகராஜ் மகன் நவனீதன் (22), கந்தையா மகன் மோகனலெட்சுமணன் (27), கொண்டுசாமி மகன் நாகராஜ் (24), யோகனாதன் மகன் நடேசன் (32) ஆகிய ஏழு பேரும் புதன்கிழமை இரவு ஒன்பது மணிக்கு அப்பகுதியிலிருந்து புறப்பட்டு படகு மூலம் நள்ளிரவு நெடுந்தீவு பகுதிக்கு வந்துள்ளனர்.

இதற்குக் கட்டணமாக சுப்புத்தாய் மற்றும் ஐங்கர ரூபன் ஆகியோர் 30 ஆயிரம் பணம் மற்றும் ஒன்றரை பவுன் சங்கிலி ஆகியவற்றைக் கொடுத்துள்ளனர். இவர்களுடன் வந்த மற்ற ஐந்து வாலிபர்களும் படகுக் கட்டணமாக தலா இரண்டாயிரம் ரூபாவும் இரண்டரை பவுன் சங்கிலியையும் கொடுத்துள்ளனர்.

பின்னர் இவர்கள் ஏழு பேரும் வியாழன் அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் கோபாலப்பட்டினம் கடற்கரை கிராமத்துக்கு வந்துள்ளனர்.

இவர்களை அரவணைத்த கோபாலப்பட்டினம் கிராம மக்கள் பின்னர் இது குறித்து உடனடியாக மீமிசல் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டு மணி நேரத்துக்குப் பின் அப்பகுதிக்குப் பொலிஸார் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு இலங்கைத் தமிழர்கள் ஏழு பேரில் சுப்புத்தாய் மற்றும் இவரது மகன் ஐங்கர ரூபன் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.

இவர்களுடன் வந்த ரமேஷ் என்ற பிரசன்னா, நவனீதன், மோகன லெட்சுமணன், நாகராஜன், நடேசன் ஆகிய ஐந்து பேரும் திடீரென்று மாயமாகினர்.

இதனால், நிலைகுலைந்த பொலிஸார் தப்பிச் சென்ற இலங்கை வாலிபர்கள் ஐந்து பேரும் தமிழர்கள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளாக இருக்குமோ என்று சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் இது குறித்து க்யூ பிராஞ்ச் பொலிஸார் பிரிவு மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து காணாமல் போன இலங்கை வாலிபர்கள் ஐந்து பேரையும் தேடிக் கண்டு பிடிக்கும் விதமாக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களை சோதனையிடுமாறு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனடிப்படையில் அழியா நிலை இலங்கைத் தமிழர் முகாமை சோதனையிட சென்ற போது தப்பிச் சென்ற இலங்கை வாலிபர்கள் ஐந்து பேரும் அந்த முகாமில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களுடன் பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

மூன்று மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் தப்பிச் சென்ற இலங்கைத் தமிழர் ஐந்து பேர் சிக்கியது பொலிஸாரை நிம்மதியடையச் செய்தது. பின்னர் அவர்களை பொலிஸார் மீமிசல் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இவர்களிடம் க்யூ பிராஞ்ச் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் பொன்னப்பன், கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி. மகேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தேநீர் குடிப்பதற்குக் கூட கடையில் காசு இல்லாததால் உதவி கேட்டு அழியாநிலை இலங்கைத் தமிழர் முகாமுக்கு சென்றதாக அவர்கள் ஐந்து பேரும் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஏழு பேரையும் பொலிஸார் மண்டபம் முகாமுக்கு அழைத்துச் சென்றனர்

http://www.thinakkural.com/news/2007/2/11/...s_page21127.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.