Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டைக்கு ‘செக்’ வைக்கும் கோர்ட்! - சுப்ரீம் ஷாக்

Featured Replies

கோட்டைக்கு ‘செக்’ வைக்கும் கோர்ட்! - சுப்ரீம் ஷாக்

 

அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்வான மறுநாளே, ‘சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகச் சொல்லியிருப்பது அ.தி.மு.க தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

p40b.jpg

ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு  நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 2014 செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது. நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு, அக்டோபர் 17-ம் தேதி, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

 குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து, இவர்கள் நால்வரும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நால்வரையும் விடுதலை செய்தார். அதற்கு எதிராக கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்தவா ராய் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. 2016 ஜூன் மாதத்தில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது இந்த பெஞ்ச்.

 இதற்கிடையில், கர்நாடக அரசு சார்பில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, தன் சுயசரிதையை வெளியிட்டார். அந்த நூலில், ‘ஜெ.வுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து எனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன’ என்று ஆச்சார்யா குறிப்பிட்டு இருந்தார். அது, சர்ச்சையைக் கிளப்பியது. ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரானபோது, தமக்குப் பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் வந்ததாக ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி அவரை விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில், நேர்மையான முறையில் ஆச்சார்யா செயல்பட்டாரா என்பதையும் விசாரிக்க வேண்டும். தன் புத்தகத்தில் அவர் கூறியுள்ள புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும்’’ என தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம், உச்ச நீதிமன்றத்தில் 2016 செப்டம்பர் 8-ம் தேதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

 இந்த மனு, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் அதே நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்தவா ராய் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆனால், நான்கு வாரங்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பினாகி சந்திர கோஷ், வரும் மே 27-ம் தேதி ஓய்வுபெற இருப்பதால், அதற்குள் எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் எனக் கருதப்பட்டது.

p40.jpg

இதற்கிடையில், உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். இதனால், இந்த வழக்கின் நிலை என்ன ஆகும் என்று கேள்வி எழுந்திருந்த நிலையில், அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராக பிப்ரவரி 5-ம் தேதி சசிகலா தேர்வுசெய்யப்பட்டார்.

 சசிகலா முதல்வராகிறார் என்ற செய்தி வெளியானதும், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்குமாறு’ உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து, சசிகலா முதல்வராகும் முயற்சிக்கு சட்ட ரீதியாக செக் வைக்க, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோவும், பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகமும் முடிவுசெய்தனர். அதற்காக, பிப்ரவரி 6-ம் தேதி அதிகாலை விமானத்தில் டெல்லி சென்றனர். உச்ச நீதிமன்றத்தில் இருந்த செந்தில் ஆறுமுகம்,
சிவ.இளங்கோ ஆகியோரிடம் பேசினோம்.

 “ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவதற்கு சசிகலா துடித்தார். இந்த நிலையில், ‘ஒருவேளை சசிகலா முதல்வர் ஆகி, அதன் பிறகு குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால், அவர் பதவி விலக வேண்டியிருக்கும். தமிழகத்தில் அசாதாரண சூழல் உருவாகும். ஜெ. கைது செய்யப்பட்டபோது தமிழகத்தில் அ.தி.மு.க-வினரால் அரங்கேற்றப்பட்ட வன்முறை சம்பவங்களைப்போல, மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று கடந்த டிசம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தோம். அதற்கு, இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், அ.தி.மு.க. சட்டமன்றக் குழுவின் தலைவராக கடந்த 5-ம் தேதி தேர்வுசெய்யப்பட்ட சசிகலா, பிப்ரவரி 9-ம் தேதி முதல்வராகப் பதவியேற்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில்தான், உடனடியாகத் தீர்ப்பு வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதற்காக டெல்லிக்கு விரைந்து வந்தோம்” என்றனர்.

அதே பிப்ரவரி 6-ம் தேதி காலை உச்ச நீதிமன்றத்தில் இன்னொரு திருப்பம் நடந்தது. கர்நாடக அரசுத் தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் சென்றார். ‘‘இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது என்பதை நினைவுபடுத்த வேண்டியது என்னுடைய மகிழ்ச்சியற்ற பணி’’ என்று அவர் சொல்ல, ‘‘இன்னும் ஒரு வாரம் பொறுத்திருங்கள்” என்றனர் நீதிபதிகள்.

சசிகலா பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பு என்னவிதமான திருப்பத்தை ஏற்படுத்தும்? ‘‘ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில் இந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போய்விடும் என நினைக்கிறார்கள். ஆனால், அப்படி ஆகாது’’ என்கிறார், வழக்கறிஞர் ஆச்சார்யா. ‘‘வாதங்கள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், இப்போது நீதிமன்றம் தீர்ப்பு மட்டுமே வழங்க வேண்டும். ஒருவேளை ஜெயலலிதாவுக்கு எதிரான அப்பீல் மட்டும் நீக்கப்படலாம். ஆனால், மற்றவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கும்’’ என்கிறார் அவர்.

p40a.jpg

இந்த வழக்கின் இறுதி வாதத்தின்போது, ‘தீர்ப்பு எப்படி இருக்கும்’ என்பதை கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிபதிகளிடம் லேசாகச் சுட்டிக்காட்டி உள்ளார். ‘‘இந்த வழக்கில் மூன்று வழிகளில் தீர்ப்புச் சொல்லலாம். அவை 1. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்யலாம். 2. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, விசாரணை நீதிமன்றத் தின்(குன்ஹா வழங்கிய தீர்ப்பை) தீர்ப்பை உறுதி செய்யலாம் 3. மீண்டும் இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி, விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சிகளை மறுவிசாரணைக்கு உட்படுத்தலாம்’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விசாரிக்கச் சொல்லி அனுப்புவது, குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் இழைக்கும் அநீதி அல்லவா?” என்று கேட்டனர்.

உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ கொலை வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டில் வந்தபோது, ‘குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ன்படி முழுமையான, நியாயமான நீதி வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் கீழ் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையை மீண்டும் நடந்தலாம். இந்த நியாயத்தின் அடிப்படையில் எந்த உத்தரவையும் நீதிமன்றம் போட முடியும். மறு விசாரணை, புலன் விசாரணை, மீண்டும் புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணை, மீண்டும் நீதிமன்ற மறு விசாரணை என எது செய்வதாக இருந்தாலும் நியாயத்தின் அடிப்படையில் செய்ய எங்களுக்கு அதிகாரம் உண்டு’ என கடந்த ஜனவரி 22-ம் தேதி தீர்ப்பு எழுதப்பட்டது. இந்தத் தீர்ப்பை எழுதியவர் உச்ச நீதிமன்ற நீதிபதி அமித்தவா ராய். சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகளில் இவரும் ஒருவர்.

துஷ்யந்த் தவே சொன்னவற்றில், எந்த வழியில் தீர்ப்பு வெளியாகும் என்பது விரைவில் தெரியவரும்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.