Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உச்சகட்ட அரசியல் குழப்பத்தில் தமிழகம்... ஆளுநர் மவுனம் சாதிப்பது சரிதானா?

Featured Replies

உச்சகட்ட அரசியல் குழப்பத்தில் தமிழகம்... ஆளுநர் மவுனம் சாதிப்பது சரிதானா?

ஓ.பி.எஸ். ஆளுநர் சசிகலா

ளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆளும் கட்சியில் முதல்வர் யார் என்ற அதிகாரப்போட்டி இப்போது தான் ஏற்படுகிறது.

யார் முதல்வர் என்பதில் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்குமிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 5ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டிய அ.தி.மு.க., கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை தேர்வு செய்தது. இதையடுத்து அவரை முதல்வராக பதவியேற்க அழைக்குமாறு சசிகலா ஆளுநரைக் கேட்டுக்கொண்டார். தனக்கு 135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஆளுநருக்கு கடிதம் சமர்பித்தார்.  

சசிகலா

இதையடுத்து, 6, 7ம் தேதிகளில் ஆளுநர் தமிழகத்தில் இருப்பதால், அந்த நாட்களில் சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லி புறப்பட்டார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். அடுத்த இரு தினங்கள் தமிழகம் வருவதை தவிர்த்த அவர், எம்.எல்.ஏ.க்கள் டெல்லி செல்ல புறப்பட்டதையடுத்தே தமிழகம் வந்தார்.

அதன் பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். சசிகலா தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகச் சொல்லி அதற்கான கடிதங்களை கொடுத்து ஆட்சியமைக்க அனுமதி கோரினார். ஆனால் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர், ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்பது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசியலில் பெரும் குழப்பம் நீடித்து வரும் நிலையில், இது குறித்து ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதோடு, இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநருடன் ஓ.பன்னீர்செல்வம்

ஆளுநர் பொறுப்பாகவும், சிந்தித்து செயல்படுவதாக பி.ஜே.பி. கட்சியின் மத்திய அமைச்சர்களும், தலைவர்களும் சொல்லி வரும் நிலையில் உண்மையில் ஆளுநர் என்ன நினைக்கிறார் என்பது தெரியாத நிலையே இருக்கிறது.

ஆளுங்கட்சிக்குள் நடந்து வரும் அடுத்தடுத்த நிகழ்வுகளால், பரபரக்கிறது தமிழக அரசியல் களம். அரசு நிர்வாகம் முற்றிலுமாக ஸ்தம்பித்துக் கிடக்கிறது. சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தினந்தோரும் அணி மாறும் நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. அரசியலில் பெரும் குழப்பம் நீடித்துவரும் நிலையில், சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இது தொடர்பாகவும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஆளுநர் மாளிகை

தமிழகத்தின் நிலை குறித்து, மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியதாகச் சொல்லி அறிக்கை நகல் ஒன்று வெளியானது. ஆனால் அதை ஆளுநர் மாளிகை மறுத்தது. தமிழகத்தில் மிகப்பெரிய குழப்பம் நீடித்து வரும் நிலையில், எந்த முடிவும் எடுக்காமல், தாமதத்துக்கு எந்த காரணமும் சொல்லாமல் ஆளுநர் மெளனமாய் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  தமிழகம் அசாதாரண சூழலை நோக்கி பயணித்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க பி.ஜே.பி. திட்டமிட்டு வருவதாகவும், அதற்காக திட்டமிட்டே இது போன்ற குழப்பத்தை ஆளுநர் மூலம் மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்காகவே ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும், இது ஜனநாயக விரோதம் என்றும் சசிகலா, கி.வீரமணி உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சசிகலா ஓ.பி.எஸ்.

ஆனால் இந்த குற்றச்சாட்டு தொடர்பாகவோ, தமிழக அரசியல் சூழல் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார் ஆளுநர். இதற்கிடையே ஆளுநர் இப்படி காலதாமதிப்பது குதிரைபேரத்தை ஊக்குவிப்பதாகவும், உடனடியாக இது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்காவிட்டால் ஆளுநர் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

'ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது, அதிமுகவை பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கையாகவே கருதுகிறேன்' என சசிகலாவும், 'சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஜனநாயக விரோதம்'  என அரசியல் கட்சித்தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஆளுநர் காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் காலதாமதம் ஏன் என்பதற்கான காரணத்தையாவது சொல்ல வேண்டும்.

அசாதாரண சூழலில் அரசு இயந்திரம் முடங்கி... மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிற இந்த சூழலில் ஆளுநர் மவுனம் சாதிப்பது என்பது நிச்சயம் சரியல்ல.

http://www.vikatan.com/news/coverstory/80538-huge-political-crisis-is-engulfing-in-tamil-nadu-is-the-silence-of-governor-correct.html

  • தொடங்கியவர்
 

பிறந்தநாள் நாயகர் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் எப்படி...?

ஆளுநர்

டந்த ஏழாம் தேதி இரவிலிருந்து தமிழகத்தில் அடித்துவரும் அரசியல் புயலுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். இன்று பிறந்த நாள் காணும் அவரை நாம் வாழ்த்தி மகிழும் வேளையில், அவர் தமிழகத்துக்கு ஆற்றிய செயல்பாடுகள் என்னவென்பதை இங்கே காண்போம்...
  
தமிழகத்தில் ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம், கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்ததையடுத்து... 'அடுத்த தமிழக ஆளுநராக யாரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கப் போகிறார்' என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி, பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், 'மகாராஷ்டிர மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்' என்று அறிவிக்கப்பட்டது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்... 1985 முதல் 1998 வரை பி.ஜே.பி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் பின்னர், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தார். பிறகு, 2014-ல் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு... தற்போது கூடுதலாக, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற வித்யாசாகர் ராவுக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சை செய்ய வெளிநாட்டு மருத்துவர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழகம் வரவழைக்கப்பட்டனர். அவருடைய நிலை என்ன என்பதை தமிழகமே கேட்டுக்கேட்டு களைத்துப்போனது. அப்போலோ நிர்வாகமோ, யாரையும் உள்ளே அனுமதிக்கவிலை. நாட்கள் நகர நகர ஜெ-வைப் பற்றி பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின. இதனையறிந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகம் விரைந்து முதல்வர் உடல்நலம் குறித்த அறிக்கைகளை வெளியிட்டார். அத்துடன், ஜெயலலிதா வகித்துவந்த துறையையும் கூடுதலாக ஓ.பி.எஸ் கவனித்துக்கொள்வார் என்று அறிவித்தார்.

முதல்வர் பன்னீர்செல்வம்

அதன்பிறகு, ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக சென்னை வந்த ஆளுநர், ஓ.பி.எஸ்ஸை... தமிழக முதல்வராக நள்ளிரவில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதன்பின், ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வராகத் தன் பணியைச் செய்து ஒப்புதல் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்பிவைத்தார் ஓ.பி.எஸ். அதன்பின் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றினார். அதுவே, தமிழக சட்டசபையில் அவர் முதலில் ஆற்றிய உரை. தமிழகத்துக்கு முறைப்படி ஆளுநர் இல்லாததால், குடியரசுத் தினத்தன்று முதல்வர் பன்னீர்செல்வம் தேசியக் கொடி ஏற்றிவைத்தார். குடியரசுத் தினத்தன்று ஆளுநர் இல்லாமல் முதல்வர், தேசியக் கொடி ஏற்றியது இதுவே முதல்முறை. 

பிறகு, டெல்லி பயணம் மேற்கொண்ட ஆளுநர், மும்பையிலேயே தங்கியிருந்தார். அந்தச் சமயத்தில் அ.தி.மு.க பொதுக்குழு அவசரமாகக் கூடி... கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டு சசிகலா பொதுச் செயலாளாராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பின் தம் ஆளுகையால், தன்னை முதல்வராய் தேர்வு செய்யப்படுவதற்கான காய்களை கட்சி நிர்வாகிகள் மூலம் நகர்த்தினார். இதனையடுத்து, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் வித்யாசாகர் ராவும் அதை ஏற்றுக்கொண்டார். ஒரு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு வந்த ஆளுநர், சசிகலா முதல்வராக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்... அதைக் கண்டும் காணாததுமாய் வந்தவேகத்திலேயே மீண்டும், டெல்லிக்கு பறந்துவிட்டார். சசிகலாவை முதல்வராகத் தேர்வு செய்வதற்கான தமிழக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்கள் ஆளுநரைச் சென்றடையவில்லை என்று அதற்குக் காரணமும் சொல்லப்பட்டது. அதன் பின்னர், மும்பைக்குத் திரும்பி தன் அலுவலக வேலைகளை பார்க்கத் தொடங்கினார் வித்யாசாகர் ராவ்.

சசிகலா

இந்தநிலையில் கடந்தவாரம் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியால் தமிழகமே தலைகீழாக மாறியிருக்கிறது. இதனால் தமிழகத்தில் பலவித மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனையடுத்து, தமிழகம் வந்த ஆளுநரை ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்து மனுக் கொடுத்தனர். ஓ.பி.எஸ், ``என்னை மிரட்டி ராஜினாமா செய்யவைத்தனர். என் ராஜினாமாவை ரத்து செய்யுங்கள்`` என்று தன் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். சசிகலா, ``பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஆகவே, தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்'' என்று ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகக் களமிறங்கினார். இதுதவிர, ''நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும்'' என்று எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். 
    
இவ்வாறு பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வருவதால் என்ன செய்வதென்று அறியாமல் மிகுந்த குழப்பத்தில் உள்ளார் வித்யாசாகர் ராவ். தமிழக அரசியலின் நிலைமையும் தமிழ்நாட்டின் தலைமையும் இவர் எடுக்கும் முடிவில்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழகமே இன்றைய பர்த்டே பேபியின் பதிலுக்குதான் காத்துக்கிடக்கிறது என்றே சொல்லலாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/80553-on-his-birthday-here-is-a-look-on-the-performance-chart-of-vidhyasagar-rao-the-governor-in-charge-of-tn.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.