Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா, தினகரன் மீதான 'பெரா' வழக்குகள் துரிதப்படுத்த அமலாக்கத்துறை மனு தாக்கல்

Featured Replies

 

 

 

 
Tamil_News_large_170956220170212233348_318_219.jpg
 
சசிகலா, தினகரன் மீதான 'பெரா' வழக்குகள் துரிதப்படுத்த அமலாக்கத்துறை மனு தாக்கல்

 

 

ஆட்சி அமைக்க உரிமை கோரும் சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்த, மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் மீதான வழக்குகளை, தினசரி அடிப்படையில் விசாரிக்கக் கோரி, எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றங்களில், சசிகலா மீது நான்கு வழக்குகள்; டி.டி.வி.தினகரன் மீது, இரண்டு வழக்குகள்; பாஸ்கரன், சுதாகரன், நடராஜன் மீது, தலா ஒன்று, என, மொத்தம் ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், சென்னையை சேர்ந்த பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, 3 கோடி ரூபாய் கடன் பெற்றது.

இதில், 2.20 கோடி ரூபாயை எடுத்து, கொடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா பயன்படுத்தியதாகவும், இதில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாகவும், அமலாக்கத் துறை வழக்கு தொடுத்தது. அத்துடன், 'ஜெஜெ டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதிகளை ஏற்படுத்தவும், கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும், அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வெளிநாட்டு நிறுவனங்களான, ரிம்சாட் மற்றும் சுபிக்பேக்கு, 5 லட்சம் அமெரிக்க டாலர்களை மாற்றியதாகவும், அப்பூப்ஸ் என்ற நிறுவனத்துக்கு, 10.45 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை மாற்றியதாகவும், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

பரணி ரிசார்ட்ஸ் வழக்கில் இருந்து, சசிகலாவை, எழும்பூர் பொருளாதார நீதிமன்றம் விடுவித்தது. தினகரன் மீதான இரண்டு வழக்குகளிலும், அவர் விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுக்கள் தாக்கல் செய்தன. மூன்று வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, சசிகலா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து சசிகலா, தினகரன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, வழக்கை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டது. சசிகலாவின் மனுக்களையும், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிப்., 1ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை, விரைந்து விசாரிக்கும் வகையில், தினசரி அடிப்படையில் வழக்குகளை விசாரிக்க கோரி, அமலாக்கத்துறை சார்பில், கடந்த வாரம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் எல்லாம், 1996ல் இருந்து, 2002 வரை தாக்கல் செய்யப்பட்டதாகவும், பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால், விரைந்து விசாரிக்கவும், அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இரண்டு வழக்குகளை, வாரம் தோறும் வியாழன்று விசாரிப்பதாக, எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆறு வழக்குகளின் ஆவணங்கள், உயர் நீதிமன்றத்தில் இருந்து வந்த பின், அடுத்தகட்ட விசாரணை பற்றி தெரிய வரும் என, எழும்பூர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விரைந்து முடிக்கும்படி, மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தி வருவதன் அடிப்படையில், மத்திய அமலாக்கத்துறை, இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1709562

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.