Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ., குடியிருந்த வீட்டில் கும்மாளமிடும் சசி சொந்தங்கள் * அமைச்சர் பாண்டியராஜன் ஆவேசம்

Featured Replies

ஜெ., குடியிருந்த வீட்டில் கும்மாளமிடும் சசி சொந்தங்கள் * அமைச்சர் பாண்டியராஜன் ஆவேசம்

 

 

 

''சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், அவரை முன்னி றுத்தி, ஓட்டு கேட்பது தற்கொலைக்கு சமமானது,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

 

Tamil_News_large_170972620170213002659_318_219.jpg

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:

* முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம், திடீரென தோன்றியது ஏன்?

** கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும், என்னை தொடர்பு கொண்டனர். முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என, அறிவுரை கூறினர். வேண்டுமென்றே செய்கின்றனரோ என்ற எண்ணம், ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. ஆனால், அவர்கள், தங்கள் முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து, ஆதாரப்பூர்வமாக பேசினர். அதனால் தான், மக்கள் மனநிலையை அறிந்து, என் ஆதரவை, முதல்வருக்கு வழங்கினேன்.

* சசிகலாவுடன் சென்று, கவர்னரை சந்தித்த போது, என்ன நடந்தது?

** நான் உட்பட, 10 பேருடன் சசிகலா, கவர்னரை சந்தித்தார். தனக்கு, 134 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாகவும், ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும், கவர்னரிடம் ஆங்கிலத்தில் கூறினர். இரண்டு நிமிடம், இதை தான் அவர் பேசினார். அதன்பின், அடுத்த இரண்டு நிமிடங்கள், யாரும் எதுவும் பேசவில்லை.

உடனே, கட்சியின் செய்தி தொடர்பாளர் என்ற முறையில், நான், 20 நிமிடங்கள், கவர்னரிடம் நிலைமையை விளக்கினேன். ஆதரவு கடிதத்தில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்து உண்மை தானா என்ற கேள்வியை, கவர்னர் எழுப்பினார். அது உண்மை தான் என்பதை, எடப்பாடி பழனிச்சாமி விளக்க முயற்சித்தார்.

அதன்பின், ஐந்து நிமிடம், சசிகலாவுடன், கவர்னர் தனியாக பேசினார். அப்போது, சசிகலாவுடன், தினகரன் மட்டுமே இருந்தார்; என்ன பேசப்பட்டது என்பது, எனக்கு தெரியவில்லை.

* இப்பிரச்னையில், கவர்னர் என்ன நடவடிக்கை எடுப்பார் என, எதிர்பார்க்கிறீர்கள்?

** ஒருவேளை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு சசிகலாவிற்கு கிடைத்தாலும், அவருக்கு ஆட்சி அமைக்க, அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டப் படி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஒருவர், முதல்வராக பொறுப்பேற்க முடியாது. இதை சசிகலாவிடம், கவர்னர் விவரித்திருக்க வாய்ப்புள்ளது. சட்ட நிபுணர்களை ஆலோசித்து, முடிவெடுப்பதாக கூறியிருக்கலாம். சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை, கவர்னர் உற்றுநோக்குவதும் தெரிகிறது.

* சென்னை, போயஸ் கார்டனில், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

ஜெயலலிதாவின் வீடான அங்கு, சசிகலா சொந்தங்களின் கூட்டம் தான் முகாமிட்டிருக்கிறது. சசி உறவினர்கள் தினகரன், திவாகரன், பாஸ்கரன் உள்ளிட்ட எல்லாரும் கார்டனில் தான் உள்ளனர். இவர்கள், தனித்தனி கிளைகளாக பிரிந்து, அங்கு செயல்படுகின்றனர். இந்த கிளைகளுக்கு, பல துணை கிளைகளும் உள்ளன.

இதில், ஒருவர் போடும் உத்தரவை, மற்றவர்கள் பின்பற்றாமல், வேறு உத்தரவு போடுகின்றனர். இதுமட்டுமின்றி, நடராஜனும், தன் பங்கிற்கு சில உத்தரவுகளை போடுகிறார். இது, மற்றவர்கள் மூலமாக, அங்கு வந்து சேர்கிறது.

சசிகலாவை, மூத்த நிர்வாகிகள் சந்திக்க முடியவில்லை. கார்டன் வளாகத்திற்குள் அழைக்கப்பட்டாலும், 'காரிடாரில்' காத்திருக்க

வேண்டியுள்ளது. மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர் வாகிகளிடம், 'இன்டர்காமில்' தான் சசிகலா பேசுகி றார். இளைய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி
களுக்கு, மன்னார்குடி கும்பல் தான் உத்தரவு கொடுத்து, அனுப்பி வைக்கிறது.

மன்னார்குடி ஆட்கள் அதிகம் இருப்பதால், பாது காப்பு கருதி, அந்த உத்தரவை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம், கட்சியினருக்கு ஏற்படுகிறது.

* விடுதியில் அடைத்துள்ள எம்.எல்.ஏ.,க்களுடன் பேசினீர்களா?

** முதல் நாள், அவர்களுக்கு மொபைல் போனில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின், மொபைல் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 'டிவி' பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதியிலேயே அடைந்து கிடப்பதால், வெளி உல கில் நடப்பது, எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது.அங்கிருந்து வெளியேறி னால், உண்மை நிலையை உணர்ந்து, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும், முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போராடி வளர்த்த கட்சியும்,இரட்டை இலை சின்னமும், முழு பலத்துடன் இருக்க வேண்டும் என்பதே, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணம்.

* தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுடன், முதல்வர் பன்னீர்செல்வம் சிரித்து பேசியது தான் பிரச்னைக்கு காரணம் என்பது போல, சசிகலா சொல்கிறாரே?

** ஜெயலலிதா நடத்திய, கடைசி சட்டசபை கூட்டத் தொடர் கலகலப்பாகவே இருந்தது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான டி.ஆர்.பி.ராஜா பேசியபோது, குறுக் கிட்ட ஜெயலலிதா, 'மை டியர் எங் மேன்' என்று கூறி பதில் அளித்தார். தங்கம் தென்னரசுக்கும் பல ஆலோசனைகளை வழங்கினார். எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்களுடன் இணைந்து, சந்தோஷமாக சபை நடவடிக்கைகளை, ஜெயலலிதா மேற்கொண்டார்.

அவரது பாணியில் தான், சட்டசபை கூட்டதொடரை, முதல்வர் பன்னீர்செல்வம் நடத்த முயற்சித்தார். 'பணிவுக்கே பணிவு காட்டும் எனக்கே பணிவா' என, கலகலப்பாக பேசினார். தேவையான நேரத்தில், எதிர்க்கட்சியினருக்கு பதிலடியும் கொடுத்தார். முதல்வரின் இந்த ஆளுமை, செயல்பாடு, சசிகலா விற்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம்.

* சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்க, எம்.எல்.ஏ.,க் களுக்கு, மன்னார்குடி கும்பல் தரப்பில் பணம் தரப்படுவதாக கூறப்படுகிறதே?

** நான் இருந்த வரை, அதுபோன்ற எந்த செயல் களும் அங்கு நடக்கவில்லை. அதுபோன்று இனி நடந்தால் தவறு. பணத்தை வாங்கி விட்டால், சுய மரியாதையை இழக்க நேரிடும். இதை, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் உணர்ந்து தான் உள்ளனர். எனவே, அதுபோன்ற தவறை அவர்கள் செய்ய மாட்டார்கள்.

* முதல்வரை சந்தித்து ஆதரவளித்த பின், 'தி.மு.க., எண்ணம் ஈடேறாது' என, நீங்கள் கூறியது ஏன்?

** மிகப்பெரிய ஆளுமையை இழக்கும் போது, ஒரு கட்சியில் பிளவு ஏற்படுவது இயற்கையான ஒன்று. இந்த நேரத்தில், மற்றொரு கட்சிக்கு ஆதரவை கொடுக்கவோ, எடுக்கவோ வேண்டிய அவசியம், அ.தி.மு.க.,விற்கு ஏற்படவில்லை. அதேநேரத்தில், இந்த சந்தர்ப்பத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த, தி.மு.க.,வினர் நினைத்தனர்.

'இந்த ஆட்சி, மூன்று மாதத்தில் கலைந்து விடும்' என்றெல்லாம் கூறினர். ஆனால், இன்றைக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் என்ற தலைமையின் கீழ், அ.தி.மு.க.,வினர் ஒருங்கிணையத் துவங்கியுள் ளனர். எனவே தான், அப்படி கூறினேன்.

* ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில், உங்களுக்கு சந்தேகம் உள்ளதா?

அவருக்கு சிகிச்சை அளித்த, மருத்துவர்கள் அனை வரும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், ஜெயலலிதா சிகிச்சை பெற செல்வதற்கு முன், வீட்டில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது; அந்த மர்மம் விலக வேண்டும். அதேபோன்று, மருத்துவமனையில், சிகிச்சை தொடர்பான வீடியோ பதிவுகள் எடுக்கப் பட்டிருக்க வேண்டும். அது இல்லைஎன சொல்வ தையும், ஏற்க முடியாது. நம்பும்படியான ஆதாரங் கள் இல்லாததால், இந்த பிரச்னை குறித்து, உண்மை அறிவதற்கு, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

* முதல்வராக, பன்னீர்செல்வம் சாதித்தது என்ன?

** கடந்த, 60 நாட்களாக, ஜெயலலிதா வழியில், முதல்வர் பன்னீர்செல்வம், சிறப்பாக ஆட்சி நடத்தினார். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., விற்கு, 40 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. முதல் வரின் நடவடிக்கை காரணமாக, தற்போது, 10 சதவீதம் ஆதரவு அதிகரித்துள்ளது. இதை, புரட்சி

 

என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போதுள்ள சூழலில், தி.மு.க., தேர்தலில் போட்டியிட்டால், கடந்த தேர்தலை விட, 10 சதவீத்திற்கும் குறைவான ஓட்டுகளை மட்டுமே, பெற முடியும். இதை உணர்ந்து தான், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் என, முதல்வர் பன்னீர்செல்வத்தை பின்தொடர்கின்றனர்.

பொதுக்குழு உறுப்பினர்களும், முதல்வருக்கு ஆதரவளிக்கின்றனர். ஆனால், சசிகலா, எம்.எல்.ஏ.,க்களை தக்கவைத்து விட்டால், ஆட்சி அமைக்கலாம் என, தவறான கணக்கு போடுகிறார். அவரது எண்ணம், என்றைக்கும் ஈடேறாது.

* பாடநுால் வாரியத் தலைவர் பதவி, வளர்மதிக்கு கொடுக்கப்பட்டது குறித்து, உங்கள் கருத்து?

** இந்த வாரியம் மூலம், கம்ப்யூட்டர் மட்டு மின்றி, மாணவர்களுக்கு வழங்கும், 'லேப்டாப்' மற்றும் ஆடைகள், பைகள், செருப்பு உள்ளிட்ட, 18 பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின் றன. இது, மிகப்பெரிய பொறுப்பு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இந்த பொறுப்பை கல்வித்துறை அமைச்சர்களிடம் தான் கொடுத்திருந்தார்.

எனக்கு முந்தைய அமைச்சர்கள், இந்த பொறுப்பை வகித்தனர். இப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம், பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. கட்சியின் தற்காலிக பொதுசெயலர் சசிகலா தான், இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளது.

கல்வித்துறைக்கு தனி அமைச்சர் இருக்கும் போது, அவர் தனியாக இயங்குவது, முறையாக இருக்காது. பாடநுால் வாரியம் மட்டுமின்றி, ஆசிரியர் தேர்வு வாரியமும், அமைச்சர் கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும். குறித்த நேரத்தில், 'லேப்டாப், யூனிபார்ம்' கிடைக்காவிட்டால், வாரிய தலைவரை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். கல்வி அமைச் சரை தான் கேட்பர். இந்த பிரச்னையை, முதல்வர் சரி செய்வார் என, நம்புகிறேன்.

* சசி கட்டுப்பாட்டில் உள்ள, எம்.எல்.ஏ.,க் களுக்கு, என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

** சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக, எம்.எல்.ஏ.,க்கள் காத்திருக்க வேண்டாம். ஒரே விஷயத்தை மட்டும், எம்.எல்.ஏ.,க்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இந்த வழக்கில் சசிகலாவிற்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், அவரை முன்னிறுத்தி, ஓட்டு கேட்பது என்பது, தற்கொலைக்கு சமமானது.

இதை எம்.எல்.ஏ.,க்கள் புரிந்துக்கொண்டால், இரட்டை இலையும், அ.தி.மு.க.,வும் முழுமை யாக, முதல்வர் பன்னீர்செல்வத்தின் பின்னால் இருக்கும்; இருக்க வேண்டும் என்பது, என் விருப்பம். அ.தி.மு.க.,வின் முகமாக, பன்னீர் செல்வம் இருந்தால் தான், மக்கள் ஏற்றுக் கொள்வர். மற்றபடி, இரட்டை இலை இருந்தா லும் கூட, வெற்றிப் பெற முடியாது என்பது, என் கருத்து.

* உங்கள் துறையில் சசிகலாவின் தலையீடு இருந்ததா?

** தற்காலிக பொதுச்செயலர் ஆன பிறகும், கட்சியை முழு ஆளுமைக்குள், சசிகலாவால் கொண்டு வர முடியவில்லை. இதை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டேன். என் துறையை பொறுத்தவரை, சசிகலாவின் தலையீடு இல்லை. மற்ற துறைகள் எப்படி இருந்தது என்பது பற்றி, எனக்கு தெரியாது.

அதேநேரத்தில், பன்னீர்செல்வம் ஆட்சியில், அமைச்சர்களுக்கு நல்ல சுதந்திரம் இருந்தது. முதல்வரை எளிதாக அணுகும் தன்மை இருந் தது. ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதை யில், சிறப்பாக ஆட்சியை வழி நடத்தினார். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.