Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவை வீழ்த்த நினைத்த அ.தி.மு.க.வின் ராஜகுரு வீழ்ந்த கதை!

Featured Replies

சசிகலாவை வீழ்த்த நினைத்த அ.தி.மு.க.வின் ராஜகுரு வீழ்ந்த கதை!

தம்பிதுரை

சசிகலாவை வீழ்த்த நினைத்து அதில் அ.தி.மு.க.வின் ராஜகுருவாக இருந்த தம்பிதுரை வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலில் தமிழகம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தலைமையிலும் கட்சியினர் அணிவகுத்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதால் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்று சசிகலா, எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசினார். அடுத்து போயஸ் கார்டனில் இன்று தன்னுடைய 33 ஆண்டுகால வாழ்க்கை வரலாறை தொண்டர்களிடம் விளக்கமாக தெரிவித்தார் சசிகலா. அப்போது 'தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை என்றும், ஆயிரம் பன்னீர்செல்வம் வந்தாலும் சமாளிப்பேன்' என்று ஆவேசமானார் சசிகலா. இந்த பேச்சு சசிகலாவின் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சசிகலாவின் அணியில் கோஷ்டி பூசல் உருவாகி விட்டதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலாவின் முகாமிலிருக்கும் எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் அணிக்கு தாவ தூது விட்டு வருகின்றனர். அத்தகைய மனநிலையில் இருப்பவர்களிடம் சசிகலாவும், மன்னார்குடி குடும்பத்தினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நேற்று வரை 127 எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு ஆதரவு என்று தெரிவித்த சசிகலா தரப்பு, இன்று அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதைக் கண்டு வருத்தம் அடைந்துள்ளது. இதற்காகவே தொண்டர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் ஆதரவை பெறவே சசிகலாவை மனதிறக்க மன்னார்குடி குடும்பம் அறிவுறுத்தி இருக்கிறது. அவரது பேச்சிலிருந்தே அவருக்கு ஏற்பட்டுள்ள சவால்களை அறிய முடிகிறது.

சசிகலாவின் இந்த திடீர் பேச்சுக்கு என்ன காரணம் என்று விளக்கமாக கூறினார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர். "ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு கட்சியை உடைக்க சிலர் முயற்சித்தனர். குறிப்பாக மத்திய அரசிடமிருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதையெல்லாம் சமாளித்து கட்சியினரை அரவணைத்து கொண்டு செல்கிறார் சசிகலா. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், அ.தி.மு.க. சட்ட பேரவைக்குழு தலைவர் என சசிகலாவை தேர்ந்தெடுக்கும் வரை அமைதியாக இருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திடீரென விஸ்வரூபம் எடுத்தார். சசிகலாவுக்கு எதிராக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்ததோடு, 'தனிமனிதனாக போராடுவேன்' என்று ஜெயலலிதா சமாதி முன்பு சபதம் எடுத்தார். அரசியலில் அவர் எடுத்த முடிவு சசிகலாவை திணற வைத்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வின் அதிகார மையம் சசிகலாவையே சுற்றி நகர்ந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும் ஒவ்வொரு முடிவுகளும் போயஸ் கார்டனிலேயே எடுக்கப்பட்டது. டெல்லிக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்தது. இதன்பிறகே அ.தி.மு.க.வின் அதிகாரத்தை வெளிப்படையாக கையில் எடுத்தார் சசிகலா.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வலியுறுத்தி பேசத் தொடங்கினர் சசிகலாவின் ஆசி பெற்ற அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள். தற்போது அவர்களில் சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் ஐக்கியமாகிக் கொண்டனர். ஆரம்பத்திலிருந்தே பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட வியூகங்களை வகுத்தவர்களில் முக்கியமானவர் தம்பிதுரை எம்.பி. கட்சி, ஆட்சி அதிகாரம் என இரண்டுமே ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் தம்பிதுரை. அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் அதே பல்லவியை தொடங்கினர். இந்தக்காலக்கட்டத்தில்தான் அ.தி.மு.க.வின் ராஜகுருவாக தம்பிதுரையை அவரது ஆதரவாளர்கள் கருதினர். டெல்லி லாபியைப் பயன்படுத்தி மன்னார்குடி குடும்பத்தினரைக் கட்டுக்குள் கொண்டு வர அவர் முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதை மன்னார்குடியின் ராஜகுரு உடைத்தெறிந்ததாக சொல்கின்றனர். போயஸ் கார்டனுக்குள் மன்னார்குடியினர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அவசர அவசரமாக சசிகலாவை முதல்வராக்க ஆசைப்பட்டது மன்னார்குடி குடும்பம். இதற்கு கட்சியில் நிலவிய கோஷ்டி பூசல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கே காரணம்.

இதையெல்லாம், ஆரம்பத்திலிருந்தே உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்த பா.ஜ.க.வின் ஆலோசனைப் பேரில் முதல்வர் பன்னீர்செல்வம் அதிரடியாக முடிவு எடுத்தார். இந்த முடிவு தம்பிதுரையின் தரப்பினருக்கு பாதகமாக அமைந்தது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எம்.பி.க்கள் ஆதரவு பெருகுவதற்குப் பிறகும் தம்பிதுரை அமைதியாக இருக்கிறார்.  கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடையே நிகழும் கோஷ்டி பூசலை சரிசெய்ய சசிகலா தரப்பு தீவிரமாக முயற்சி காட்டுவதையும் தம்பிதுரை தரப்பு அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறது. கட்சியினர் சசிகலாவுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவு தெரிவித்த நிலையில் தம்பிதுரையின் ஆதரவாளர்கள் மட்டும் அமைதியாக இருக்கின்றனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் கை ஓங்கியதும் தம்பிதுரை தரப்புக்கு சரிவை ஏற்படுத்தி உள்ளது. இந்தக்கட்டத்தில்தான் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், பன்னீர்செல்வம் அணிக்குத் தாவினார். உடனடியாக சசிகலா, அந்தப்பதவிக்கு செங்கோட்டையனை நியமித்தார். அவைத்தலைவர் பதவி தம்பிதுரைக்கு வழங்கப்படலாம் என்ற நம்பிக்கையில் அவரது  ஆதரவாளர்கள் காத்திருந்தனர். அந்தப்பதவியும் பறிபோனதோடு செங்கோட்டையனுக்கு அடுத்த முக்கியத்துவமாக துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதுவும் தம்பிதுரையின் தரப்புக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.

தம்பிதுரையின் கருத்துக் கேட்க அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், "அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், சட்டப்பேரவை குழு தலைவராகவும் சின்னம்மாவை தேர்ந்தெடுக்க வலியுறுத்தியவர் தம்பிதுரை. சின்னம்மா தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தம்பிதுரை டெல்லியில் பிஸியாக இருக்கிறார். ஆளுநர் காலதாமதப்படுத்தினால் குடியரசுத் தலைவரை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. என்றைக்குமே அண்ணன் (தம்பிதுரை) பதவிக்கு ஆசைப்படவில்லை. தவறான தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பரப்பி வருகின்றனர்'' என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/80643-the-fall-of-thambidurai---the-story-of-how-admks-rajaguru.html

  • தொடங்கியவர்
தலைகீழாக நின்று தனி மரமாகும் தம்பிதுரை
எதை காட்டுகிறது எம்.பி.,க்களின் தாவல்?
 
 
 

பல, எம்.பி.,க்கள் முகாம் மாறிக் கொண்டிருப்பதால், பார்லி மென்டில், அ.தி.முக., இரு அணியாக செயல்படப் போவது உறுதியாகி உள்ளது. இதனால், தம்பி துரையின் பதவிக்கு ஆபத்து
ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.
 

 

Tamil_News_large_1710261_318_219.jpg


சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியுள்ள, முதல்வர் பன்னீர்செல்வத்தை, எத்தனை, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிப்பர் என, பலரும் எதிர்பார்த்திருக்க, எம்.பி.,க் களின் ஆதரவு, கிடுகிடுவென அதிகரித்து, இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.
 

லாபி' செய்தார்



இதன் பின்னணியில், சசிகலா எதிர்ப்பு என்பதுடன் சேர்த்து, தம்பிதுரையின் மீதான அதிருப்தியும் உள்ளதாக தெரிகிறது. தற்போது, அ.தி.மு.க.,வுக்கு, லோக்சபாவில், 37 எம்.பி.,க்கள் இருந்தாலும், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைத்ததால், அ.தி.மு.க.,வின் மத்திய அமைச்சர் கனவு தகர்ந்தது; இதில், பெரிதும் பாதிக்கப்பட்டவர், தம்பிதுரை தான்.
'சிவப்பு விளக்கு கார்' கனவை கலைக்க விரும்பாத தம்பிதுரை, கட்சித் தலைமைக்கு தெரியாமலேயே, துணை சபாநாயகர் பதவிக்காக கடும், 'லாபி' செய்தார். 'பொம்மை போன்ற பதவியால், கட்சிக்கு என்ன பயன்' என, ஜெ., தயங்கினாலும், தம்பிதுரை தளரவில்லை.
 

ஜெயலலிதாவின் அரைகுறை சம்மதத்துடன் பெறப்பட்ட அந்த பதவிக்கு வந்தபின் தான், சக, எம்.பி.,க்களின் அதிருப்தியை சம்பாதிக்க ஆரம்பித்தார் தம்பிதுரை. அ.தி.மு.க.,வின் பார்லி., தலைவர் வேணுகோபால்; அவர், இன்று வரை, 'டம்மி'யாகவே வைக்கப்பட்டு உள்ளார்.
'பெயரளவில் மட்டும் தான், நீங்கள் பார்லி., கட்சி தலைவர்; என்னை கேட்காமல், எதுவும் செய்யக் கூடாது' என, பலரது முன்னிலையிலும் வெளிப்படையாகவே, வேணுகோபாலிடம், தம்பிதுரை கூறியதாக,அப்போதே, எம்.பி.,க்கள் மத்தியில் பேச்சு இருந்தது.
கடந்த லோக்சபா தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட, 37 பேரில், 34 பேர் பார்லிமென்டிற்கு புதியவர்கள். தம்பிதுரை, தங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார் என, இவர்கள் நம்பினர். இவரோ, சக, எம்.பி.,க்களின் வளர்ச்சியை தடுப்பதிலேயே குறியாக இருந்தார்.
பார்லி., நடவடிக்கைகளில் வழிகாட்ட ஆலோசனை கிடைக்காமல், சபைக்குள், எம்.பி.,க்கள் தடுமாறுவது அப்பட்டமாக தெரிந்தது.
 

வாய்ப்புகளையும் கெடுத்தார்


சட்டசபை தேர்தலுக்கு பின், வைத்திலிங்கமும், ராஜ்யசபா எம்.பி., ஆனார். அதுவரை, தம்பிதுரை மீது கடும் அதிருப்தியில் இருந்த, மத்திய மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், அவர் பின் அணி வகுத்தனர்.
'தளபதியாக இருந்து, சபைக்குள் வழிநடத்தி செல்வதை விட்டுவிட்டு, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, சிலருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் கெடுத்தார்' என்ற குமுறலும், எம்.பி.,க்கள் மத்தியில் உள்ளது.
அ.தி.மு.க.,வின் பலத்திற்கேற்ப கிடைத்திருக்கவேண்டிய நிலைக்குழுக்கள் மற்றும் பார்லி., குழுக்களின் தலைவர் பதவிகள் என, பல பதவி களை வாதாடி பெறாமல் கோட்டைவிட்டார் என்ற கோபமும், எம்.பி.,க்களிடம் உள்ளது.இந்நிலையில் தான், தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், தம்பிதுரைக்கு மேலும்

 

ஆசையை துாண்டியது. பன்னீர்செல்வத்தை எதிர்ப்பதன் மூலம், ஏதாவது நடந்து தனக்கு வாய்ப்பு வருமென நம்பி, தலைகீழாக நின்று பார்த்தார்.
தேவையே இல்லாமல், பிரதமரை பகிரங்கமாக எதிர்த்து பேசி, மத்திய அரசை பகைத்து கொண்டதும் தம்பிதுரை மீது, பா.ஜ., மூத்த அமைச்சர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இவை எல்லாம் தான், எம்.பி.,க் கள் மத்தியில் கடும் அதிருப்தியை, தம்பிதுரை மீது ஏற்படுத்தி வைத்திருந்தன. சமயம் கிடைக்காதா என, காத்திருந்த பலரும், தற்போது அணி தாவுகின்றனர்; இது, மேலும் தொடரவே வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

பதவி தேவையா?


'அ.தி.மு.க.,வின் இன்றைய நிலைக்கு, தம்பிதுரையும் ஒரு முக்கிய காரணம்' என, அந்த கட்சியின், எம்.பி.,க்கள் கூறுகின்றனர். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம், மார்ச், 9ல் துவங்கப் போகிறது. அப்போது, எம்.பி.,க்கள் இருவேறு அணியாக பிரிந்து நிற்கப் போகின்றனர்.
இதனால், 'குறைந்த, எம்.பி.,க் களை வைத்திருக்கும் ஒரு சிறு அணிக்கு, துணை சபாநாயகர் பதவி எதற்கு' என்ற கேள்வியை, எதிரணி அ.தி.மு.க., மட்டுமல்ல, பா.ஜ.,விலிருந்தே எழுப்பப்படலாம் என, தெரிகிறது.
நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710261

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.