Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னீருக்கு ஆதரவா?: உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: ஸ்டாலின்

Featured Replies

பன்னீருக்கு ஆதரவா?: உரிய நேரத்தில்
நல்ல முடிவு எடுக்கப்படும்: ஸ்டாலின்
 
 
 

''யாருக்கும் ஆதரவு கொடுக்க போவதில்லை; உரிய நேரத்தில், நல்ல முடிவு எடுக்கப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

 

Tamil_News_large_1710324_318_219.jpg


தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று, அறிவாலயத்தில் நடந்தது.இதில், 'அரசியல் சட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு உட்பட்டு, தமிழகத்தில், நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

வழிகாட்டுதல்படி


கூட்டத்தில், 'முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரினால், அவரை ஆதரிக்க வேண்டும்; பின், தி.மு.க., வழிகாட்டுதல்படி, ஆட்சியை நடத்த வைக்கலாம்' என, ஒரு தரப்பினர்

வலியுறுத்தினர். 'நடுநிலை முடிவை எடுக்க வேண்டும்' என, மற்றொரு தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
 

உரிய நேரத்தில், நல்ல முடிவு



கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின் கூறுகையில்,
''தமிழகத்தில், நிலையான ஆட்சியில்லை. அ.தி.மு.க., எங்களுக்கு எதிரி கட்சி தான். அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என, இரு அணிகள் உருவாகி உள்ளன. யாரையும் நாங்கள் ஆதரிக்கவில்லை; உரிய நேரத்தில், நல்ல முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
 

பன்னீரை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவு



'முதல்வரிடம் கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதம் வாங்கியிருப்பது தெரிய வந்தால், அதை ஏற்க தேவையில்லை' என, அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் தான், பன்னீர்செல்வத்தின் கடிதத்தை, கவர்னர் ஏற்காமல் இருந்திருக்கலாம்என, தெரிகிறது.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக, கவர்னர் அலுவலகம் அறிவித்த பின், அவர் தற்காலிக முதல்வராக செயல்பட்டு வந்தார்.

 

இந்நிலையில், அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலர் சசிகலா, முதல்வராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் துவங்கின.
அப்போது, தன்னை கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டதாக, பன்னீர்செல்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு, 190, உட்பிரிவு, 3ல், 'முதல்வரின் ராஜினாமா கடிதம், அவரது விருப்பத்திற்கு மாறாக பெறப்பட்டிருந்ததாகவோ, உண்மைத் தன்மையற்றதாகவோ இருப்பதாக கருதினால், அதை கவர்னர் ஏற்க தேவையில்லை' என, கூறப்பட்டு உள்ளது.
சசிகலாவிற்கு எதிரான வழக்கு தீர்ப்புக்காக, கவர்னர் காத்திருப்பதாக கூறப்பட்டாலும், இந்த விவகாரத்தில், உடனடியாக முடிவு எடுக்காததற்கு, இதுவும் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710324

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.