Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அநுராவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களில் அவரது நண்பர்களும் அடங்குவரென்கின்றனர் பொலிஸார்

Featured Replies

முன்னாள் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களில் அவரது நண்பர்களும் அடங்குவரென பொலிஸார் கூறுகின்றனர்.

கடந்த புதன்கிழமை காலை இவருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டலில் இரண்டு அழைப்புகள் அவரது நண்பர்களிடமிருந்து விடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்விரு தொலைபேசி அழைப்புக்குரியவர்களை கண்டுபிடித்திருப்பதாகவும் ஏனைய தொலைபேசி அழைப்புகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் லுகொட தெரிவித்துள்ளார்.

ஏனைய அழைப்புகள் எங்கிருந்து வந்தன என்பதை கண்டுபிடிப்பதற்காக தாம் தொலைத் தொடர்பு அதிகாரிகளை அணுகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அநுரா பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுகையில்;

அதற்கு நான் பதிலளிக்கையில் அழைப்பை ஏற்படுத்தியவர், `நீங்களும் மங்கள சமரவீரவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்தால் கடத்தப்பட்டு கொல்லப்படுவதுடன் அத்தனகல மற்றும் மாத்தறையில் மின்கம்பங்களில் தொங்கவிடப்படுவோமென மிரட்டியதாகவும் கூறினார்.

சில நிமிடங்களின் பின்னர் வேறொரு தொலைபேசி அழைப்பில் வித்தியாசமான குரலில் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மறுபடியும் சில நிமிடங்களின் பின்னர் தெளிவான சிங்களத்தில் இதே எச்சரிக்கை தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டது எனவும் கூறினார்.

தொலைபேசியில் பேசியவருக்கு வேறுசிலர் சொல்லிக் கொடுத்தது எனக்கு தெளிவாக விளங்கியது. நான் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் எனது நண்பருக்கும் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக எனது தொலைபேசி இயக்குநர் என்னிடம் தெரிவித்தார்.

நாங்கள் முதலில் இதனை கேலியாக நினைத்தாலும் பின்னர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது இதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறேன்.

ஜனாதிபதியை சுற்றியிருப்பவர்களே இதனைச் செய்திருப்பார்கள். ஆனால், ஜனாதிபதி இதில் ஈடுபட்டிருக்கமாட்டார்.

ஐ.தே.க. வோ, ஜே.வி.பி. யோ, புலிகளோ இதனைச் செய்திருக்க மாட்டார்கள் என நிச்சயமாக கூறுகிறேன்.

அரசாங்கத்தின் சில பிரிவுகளிலுள்ளவர்களே இதற்குப் பொறுப்பு. ஜனாதிபதியை சுற்றியிருக்கும் சிலர் தமது அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றனர். நானும் மங்களவும் எந்த இரகசிய திட்டங்களையும் தீட்டவில்லை. பதவி பறிக்கப்பட்டது எங்களை அமைதிப்படுத்துவதற்கு செய்யப்பட்ட வேலை. ஆனால், இது எங்களை மேலும் உறுதிபெறச் செய்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/2/12/...s_page21226.htm

குரைக்கிற நாய்கள் கடிக்காது.

ஏன் கடிக்கப்போற நாய் குரைக்காது தானே. அப்ப கருனாவினை சிங்கப்பூரிற்கு கூட்டிக்கொண்டு போன இந்த தவக்கைக்கும் காலம் வந்திட்டுதோ தெரியாது. இப்ப மகிந்தா பயங்கரவாதியாக மாறியே வேண்டும் நினைச்சிட்டார் ஏனெண்டா சந்திரிக்காவும் வந்தா பெரிய போராட்டமே தொடங்கப்போகுது. அதற்கு முதல் புலிகளை இழுத்ததாகவும் போகும் இரண்டு பேரை மண்டையில போட்டாதாகவும் போச்சு. நான் எண்டா மகிந்தாவிட சிந்தனையில இதுவும் இருக்கும் எண்டு தான் நினைக்கிறன். மனுசன் ஏற்கனவே சாத்திரம் வேற கேட்டமாதிரியும் மங்களாவுக்கு அமங்களம் இருக்கு எண்ட மாதிரி எல்லோ மனிசன் நம்பிக்கொண்டு இருக்கு.ஓடர் எப்ப கொடுக்கிறது எண்டது தான் இப்ப பிரச்சனையாய் இருக்குது போல.. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.