Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு உளவு சொல்லும் எம்.எல்.ஏ.க்கள்! - அதிர்ச்சியில் மன்னார்குடி தரப்பு #OpsVsSasikala #VikatanExclusive

Featured Replies

சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு உளவு சொல்லும் எம்.எல்.ஏ.க்கள்! - அதிர்ச்சியில் மன்னார்குடி தரப்பு #OpsVsSasikala #VikatanExclusive

ops-_sasikala_long_10232.jpg

சசிகலா முகாமில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவலை சொல்லும்  உளவாளி எம்.எல்.ஏ.க்கள் குறித்த தகவல், மன்னார்குடி குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

 அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் காரணமாக சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள்  கூவத்தூரில் தங்கி உள்ளனர். கடந்த மூன்று தினங்களாக அங்குள்ள எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார். கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் அணித்தாவல் சசிகலாவுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 'பாண்டியராஜன் மீது முழுநம்பிக்கை வைத்திருந்தேன். அவரா...,இப்படி' என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார் சசிகலா.

எம்.எல்.ஏ.க்களை கவனிக்கும் பொறுப்பு மன்னார்குடி குடும்பத்துக்கு வேண்டப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. பாண்டியராஜன் அணித் தாவல் நிகழ்வுக்குப்பிறகுதான் சசிகலா, யாரையும் நம்பாமல் கூவத்தூருக்கு பயணித்தார். அங்குள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் பேசிய எம்.எல்.ஏ.க்களில் சிலரது பேச்சில் சசிகலா தரப்புக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக அந்த எம்.எல்.ஏ.க்கள் குறித்த விவரங்களை சேகரித்த போது சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள், பன்னீர்செல்வம் தரப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தகவல் கிடைத்ததும் சசிகலா தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை கண்காணித்து சமரசப்படுத்தும் பொறுப்பு மூத்த அமைச்சர் ஒருவருக்கு சசிகலா தரப்பு கொடுத்துள்ளது. அதே மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ., ஒருவர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர்.

மேலும் அவர், பன்னீர்செல்வத்தின் மூலமே கட்சியில் வளர்ச்சியடைந்தவர். இதனால் அவரின் செயல்பாடுகளை  கண்காணித்து வருகின்றனர். அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் சசிகலா தரப்பினரின் கண்காணிப்பில் இருக்கின்றனர். இந்த சமயத்தில்தான் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து அந்த எம்.எல்.ஏ. குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அந்த விவரத்தை சசிகலா தரப்பு சேகரித்து சசிகலாவிடம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதே மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு எம்.எல்.ஏ.வின் நடவடிக்கையில் சில மாற்றத்தை மன்னார்குடி குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர். அவருக்கு கட்சியில் பல்வேறு முக்கியப்பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அந்த பதவிசுகத்தை அனுபவித்தவர்களுக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதல் அதிர்ஷடம் அடித்தது. இதற்கு அவர் கட்சிக்காக உழைத்த உழைப்பே காரணம். இந்நிலையில் அந்த எம்.எல்.ஏ.வும் பன்னீர்செல்வத்தின் அணிக்கு தாவும் மனநிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரிடமும் சமரச பேச்சுவார்த்தையுடன் சில வாக்குறுதிகளும் சசிகலா தரப்பு கொடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் விவகாரத்தில் சிக்கி பதவியை இழந்தவர் சசிகலாவின் அணியில் தீவிரம் காட்டிவருகிறார். அவருக்கு எதிரணியிலிருக்கும் எம்.எல்.ஏ.வின் உறவினர் தீபாவின் அணியில் உள்ளார். ஆந்திர எல்லையில் அமைந்துள்ள அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வும் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.

இந்த எம்.எல்.ஏ.வுக்கு மாவட்டத்தில் முக்கியப் பதவி மற்றும் சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்க வழிவகை செய்தவர் பன்னீர்செல்வம். அந்த விசுவாசத்துடன் இருக்கும் அவர், பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். இவ்வாறு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர், சசிகலா முகாமில் சத்தமில்லாமல் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் சசிகலாவை ஆதரிப்பதைப் போல நாடகமாடிக் கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை ரகசியமாக பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவின் முகாமில் பன்னீர்செல்வத்தின் உளவாளி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைமெண்டை சரியாக இதுவரை செய்துவருகின்றனர். இந்த நம்பிக்கையில்தான் பன்னீர்செல்வமும் நல்லது நடக்கும் என்று ஆளுநரை சந்தித்து விட்டு பேட்டி அளித்தார். பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ.க்களின் பலம் ஆறு என்ற எண்ணிக்கையில் உள்ளது. அந்த எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் இருமடங்காகும் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/80719-mlas-working-as-spy-for-ops-in-sasikala-camp.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.