Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா குற்றவாளி..! இனி தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார்...? #OPSVsSasikala #DACase

Featured Replies

சசிகலா குற்றவாளி..! இனி தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார்...? #OPSVsSasikala #DACase

சசிகலா

ட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்திருந்தார். இந்த சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது தமிழகத்தின் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. இப்போதைக்கு கவர்னர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இன்னொருபுறம் முதல்வர் பன்னீர்செல்வம் தமது ராஜினாமா கடித த்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகச் சொல்லி இருக்கிறார். எனவே, முதலில் பன்னீர்செல்வத்தை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் சொல்லலாம். ஓ.பி.எஸ் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அவர் பதவி விலக நேரிடும். அப்போது சசிகலாவால் சுட்டிக்காட்டப்படும் நபர் ஆளுநரிடம் சென்று தமக்கு இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை அவர் தரக்கூடும். அதன் அடிப்படையில் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம். சசிகலா ஆதரவு அணி ஆட்சி அமைத்த தில் இருந்தது ஆளுநர் தரும் கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அவர் முதல்வராக ஆட்சியில் தொடர முடியும். இதுதான் மரபு.

வித்யா சாகர் ராவ்

சட்டசபையில் வாக்கெடுப்பு முறை எப்படி இருக்கும்?

மூத்த அரசியல்வாதியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்சிடம் கேட்டோம். "ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி தரும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களின் அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதிப்பார். பின்னர் அந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால், அதன் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளும் கட்சிக்கு ஆளுநர் உத்தரவிடுவார். சட்டசபையில் ஆளும் கட்சி மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அந்த கட்சியின் அவை முன்னவர் முன்மொழிவார். அந்தத் தீர்மானம் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்படும். குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை இருப்பதாக சபாநாயகர் சொன்னால், அது ஏற்கப்படும்.

எதிர் அணியினர் அதை ஏற்க மறுத்து, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்களை எண்ணி அதனை வெளியிட வேண்டும் என்று கேட்கலாம். அப்படிக் கேட்கும் பட்சத்தில், அவையின் கதவுகள் அடைக்கப்பட்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிப்பவர்களை கைகளை உயர்த்தச் சொல்லி அவர்களை சட்டசபை செயலகத்தின் பணியாளர்கள் எண்ணுவார்கள். அந்த எண்ணிக்கையை சபாநாயகரிடம் கொடுப்பார்கள். 117 பேரின் ஆதரவை நிரூபித்தால் அந்த ஆட்சி தொடரும். பெரும்பான்மை நிரூபிக்கப்படும் நாளில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் கொறடா உத்தரவு போடப்படும். தங்கள் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் அவசியம் சபையில் இருக்க வேண்டும் என்று கட்சிகளின் கொறடா  உத்தரவிடுவார்" என்றார்.

நம்பிக்கைத் தீர்மானம் முன்மொழியப்படும்போது அவையில் இருந்து ஆதரவு தரும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் நம்பிக்கைத் தீர்மானத்தின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இது குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயனிடம் பேசினோம்.
"அசாதாரண சூழலில் சட்டசபையை கூட்ட ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆட்சி அமைக்க உரிமை கோரிய கட்சி, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கைத் தீர்மானத்தை முன்மொழியலாம். தீர்மானம் கொண்டு வரப்படும் சமயத்தில் சபையில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் எத்தனைபேர் நம்பிக்கைத் தீர்மானத்தினை ஆதரித்து வாக்களிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு சபையில் இருக்கும் 50 எம்.எல்.ஏ-க்களில் 40 பேர் ஆதரவு தெரிவித்தால் கூட அந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று அர்த்தம்தான்" என்றார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான நிலையில் ஆளுநர் இப்போது முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

http://www.vikatan.com/news/coverstory/80725-sasikala-convicted-in-da-case--what-will-be-the-next-move-of-governor--opsvssasikala-dacase.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.