Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ - பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க.

Featured Replies

‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ - பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க.

மு.க.ஸ்டாலின்

மிழகம் அரசியல் களம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் கலவர முகத்தோடு அமர்ந்துள்ளனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள். 'அடுத்து என்ன செய்வது?' என்ற ஆலோசனையில் இருக்கிறார் சசிகலா. 'பா.ஜ.க மேலிட நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பில் இருந்து சிலர் தூது சென்றுள்ளனர். தி.மு.க தரப்பில் இருந்து சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற பிறகு, முதலமைச்சர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தினார் சசிகலா. 'அதிகாரத்திற்குள் நீங்கள் வர வேண்டும் என்று விரும்பினால், உங்கள் அதிகாரம் மொத்தமும் பறிபோய்விடும்' என தொடக்கத்திலேயே எச்சரித்தார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். 'அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உடனே முதல்வர் பதவியை ஏற்றாக வேண்டும்' என சசிகலா தரப்பில் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, முதலமைச்சர் பதவியை கடந்த 5-ம் தேதி ராஜினாமா செய்தார் பன்னீர்செல்வம். 'எம்.எல்.ஏக்கள் செல்வாக்கு யார் பக்கம்?' என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், தி.மு.கவின் நடவடிக்கைகளையும் உற்று கவனித்து வருகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

"தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நேற்று அறிவாலயத்தில் நடந்தது. 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 'ஆளும்கட்சிக்குள் யார் முதல்வர் என்ற அதிகாரப் போட்டி நிலவுகிறது. நிலையான அரசை அமைக்க முன்வராமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார். அரசியல் சட்டவிதிகள் மற்றும் மரபுகளுக்கு உள்பட்டு நிலையான ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 'அரசியல் சட்டப்படி, சட்டப் பேரவையில் இரண்டாவது கட்சி என்ற பலத்துடன் இருக்கும் எங்களுக்கு ஆளுநர் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்பதுதான் தி.மு.கவின் கோரிக்கையாக இருக்கிறது" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

கவர்னர் வித்யாசாகர் ராவ்"தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல்களை தி.மு.க மிகுந்த எச்சரிக்கையோடு கையாண்டு வருகிறது. எந்தச் சூழலிலும், 'அதிகாரத்தைப் பெறுவதற்காக தி.மு.க போராடுகிறது' என்கின்ற பிம்பம் தெரியாத அளவுக்கு அரசியல் நடவடிக்கைகளை முன்வைக்கிறார் ஸ்டாலின். மத்திய அரசும் தி.மு.கவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 7-ம் தேதி பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டியில், 'தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு ராஜினாமா பெறப்பட்டது' என்றார். கடந்த ஒரு வார காலமாக அரசியல் சூழல்களை ஆளுநர் முடிவுக்குக் கொண்டு வரவில்லை. 'ஆளுநர் தாமதிப்பது கட்சியை பிளவுபடுத்தும்' என சசிகலா பகிரங்கமாக பேட்டி அளித்தாலும், ஆளுநர் அலுவலகம் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. 'அரசியல் சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி வருகிறார் ஸ்டாலின். தற்போதுள்ள சூழலில் மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்வதையே அவர் விரும்புகிறார்.

இந்நிலையில், பா.ஜ.கவின் முன்னாள் தேசியத் தலைவராகவும் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் முக்கியப் புள்ளியை சந்தித்துப் பேசினார் தி.மு.கவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஒருவர். இந்த சந்திப்பில், பா.ஜ.கவின் விருப்பங்களை எந்த வகையில் நிறைவேற்றுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ' 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தென்மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தில் 12 தொகுதிகளை அடையாளம் காட்டுகிறோம். அதில் 5 தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தி.மு.கவால் தீர்வைக் கொடுக்க முடியும். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அழைத்தால், அ.தி.மு.கவின் கணிசமான எம்.எல்.ஏக்களும் எங்கள் பக்கம் வருவார்கள். எளிதாக எங்கள் பலத்தை நிரூபிக்க முடியும்' என விவரித்திருக்கிறார். இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை. தி.மு.கவின் கோரிக்கையை பா.ஜ.க ஏற்றால், அடுத்தகட்டத்தை நோக்கி தமிழக அரசியல் களம் நகரும்" என்றார் விரிவாக. 

"சசிகலாவை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதற்கு, சொத்துக் குவிப்பு வழக்கு மட்டும் காரணமல்ல. அவர் மீது நான்கு பெரா வழக்குகள் இருப்பதும் ஒரு காரணம். தவிர, அவர் எம்.எல்.ஏவாகவும் இல்லை. இதற்காகத்தான் ஆளுநர் அமைதி காத்தார். கூடவே, எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவிந்திருப்பதில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை. அங்கிருந்து தப்பி வருகின்றவர்களும், 'அடைத்து வைத்திருப்பதாகச்' சொல்கின்றனர். அ.தி.மு.கவில் நிலவும் உச்சகட்ட குழப்பத்தால், கட்சித் தொண்டர்கள் பல அணிகளாக சிதறியுள்ளனர். இதில், பன்னீர்செல்வத்தின் பலத்தை அதிகரிக்க வைத்து, நிரந்தர முதலமைச்சராக்குவது; அது நடக்காதபட்சத்தில் தி.மு.கவுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாமா என்பது குறித்து பா.ஜ.க மேலிடம் விவாதித்து வருகிறது. அ.தி.மு.க சிதறி இருப்பதால், தி.மு.கவை பலம் பொருந்திய கட்சியாக அவர்கள் பார்க்கிறார்கள். அதை மனதில் வைத்துத்தான், கனிமொழி வெளிநாடு செல்ல சி.பி.ஐ விதித்திருந்த தடையை நீக்கினார்கள். தி.மு.கவும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியது. கருணாநிதி உடல்நிலை குறித்தும் கவலைப்படுகிறார் மோடி. வரும் காலங்களில் தி.மு.கவுடனான கூட்டணி வாய்ப்பையும் பரிசீலனையில் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80742-we-can-show-our-majority---dmk-tells-bjp.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.