Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்துக் குவிப்பு வழக்கு: ‘சிவன் மலை முருகன் முன்கூட்டியே வழங்கிய தீர்ப்பு’ - சமூக வலைதளங்களில் பரவும் வைரல்

Featured Replies

சொத்துக் குவிப்பு வழக்கு: ‘சிவன் மலை முருகன் முன்கூட்டியே வழங்கிய தீர்ப்பு’ - சமூக வலைதளங்களில் பரவும் வைரல்

 

 
 
 
சிவன்மலை முருகன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள இரும்புச் சங்கிலி.
சிவன்மலை முருகன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள இரும்புச் சங்கிலி.
 
 

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம்.

பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கற்தூணில் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்தக் கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண் டும் என்ற தேர்வு முறை சற்று வித்தி யாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தான், இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

இப்படி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை.

கடந்த ஆண்டு ஆக.29-ம் தேதி பூமாலை வைத்துப் பூஜை செய்யப்பட்டு, அது கண்ணாடிப் பெட்டிக்குள் கடந்த ஜனவரி 9-ம் தேதி வரை வைக்கப்பட்டிருந்தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் பகுதியைச் சேர்ந்த கே.எம்.சிவராம் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, ஜன.10-ம் தேதி இரும்புச் சங்கிலி வைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. இதன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என அப்போது பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் சிவன்மலையில் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டை மேற்கோள் காட்டியும், இது ஆண்டவன் முன்பே கணித்த தீர்ப்பு என்ற வகையிலும் வைரலாக பரவியது.

http://tamil.thehindu.com/tamilnadu/சொத்துக்-குவிப்பு-வழக்கு-சிவன்-மலை-முருகன்-முன்கூட்டியே-வழங்கிய-தீர்ப்பு-சமூக-வலைதளங்களில்-பரவும்-வைரல்/article9544268.ece?homepage=true

  • தொடங்கியவர்
தீர்ப்பை முன்கூட்டியே உணர்த்திய
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி
 
 
 

திருப்பூர்: சசிகலா வழக்கில் வெளியான தீர்ப்பை, முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான், சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி யில், இரும்பு சங்கிலி வைத்து பூஜிக்கப்பட்ட தாக, பக்தர்கள் கருதுகின்றனர்.

 

Tamil_News_large_171091620170214233206_318_219.jpg


திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை யில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.

பழமை வாய்ந்த இக்கோவிலின் சிறப்பு அம்சமாக, 'ஆண்டவன் உத்தரவு' பெட்டி உள்ளது. ஏதாவது, ஒரு பக்தரின் கனவில் தோன்றும் சிவன் மலை ஆண்டவர், குறிப்பிட்ட பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து, பூஜிக்கு மாறு கட்டளையிடுவார்.

உத்தரவு கிடைத்தபக்தர், கோவிலுக்கு வந்து சொன்னால், அதை உறுதி செய்ய, ஆண்டவனிடம் பூ கேட்டு அனுமதி பெற்று, அதன்பின், உத்தரவு பொருள் பெட்டியில் வைக்கப்படும்.

அந்த பொருள், அடுத்த உத்தரவு வரும் வரை, பெட்டி யில் இருக்கும். அந்த பொருள் தொடர்பான ஏதாவது ஒரு தாக்கம் ஏற்படுவதாக, பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.ஆண்டவன் உத்தரவு பெட்டியில், துப்பாக்கிவைத்த போது, சீனா போர், நீர் வைத்து பூஜித்த போது, சுனாமி என, பல்வேறு சம்பவங்களை பக்தர்கள் பட்டியலிடுகின்றனர்.

ஜன., 10 முதல், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டு

 

வருகிறது. இந்நிலையில் நேற்று, சசிகலா உள்ளிட்டோ ருக்கு, சிறை தண்டனையை உறுதி செய்து,சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை, முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான், சிவன்மலை ஆண்டவர், இரும்பு சங்கிலி வைத்து பூஜிக்க உத்தரவிட்ட தாக கருதி, பக்தர்கள் பரவசமடைந்து உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710916

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.