Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

Featured Replies

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 

 
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய சசிகலா | படம்: எல்.சீனிவாசன்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய சசிகலா | படம்: எல்.சீனிவாசன்.
 
 

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க.

1.10 pm: சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

1.07 pm: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அறை எண் 43-ல் சசிகலா ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அவர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள நீதிமன்ற அறையில் ஆஜராகலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சரணடைய வேண்டிய நீதிமன்ற அறையை கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மாற்றம் செய்துள்ளது. பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து 2.5 கி.மீ தூரம் வரையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

sirai1_3133315a.jpg

பரப்பன அக்ரஹார சிறை வளாகம்

1.00 pm: அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி.தினகரன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்.

12.45 pm: ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து புறப்பட்ட சசிகலா ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்குச் சென்றார். அங்கு எம்.ஜி.ஆர். சிலை முன் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

12.30 pm: "நான் எப்படி விட்டுக் கொடுப்பது, நான் எப்படி அவரிடத்தில் போவது என்ற வகையில், பகைமை பாராட்டாமல், பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற நல்ல முடிவினை எடுத்து, கட்சி பிளவுபடவில்லை - ஆட்சி பிளவுபடவில்லை. இந்த ஆட்சி தொடர்கிறது என்ற நல்ல செய்தியை நாட்டுக்கு சொல்லுங்கள்" என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சைதை துரைசாமி சூசக அறிவுரை வழங்கியுள்ளார். | அவரிடம் போக தயங்காதீர்: அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சைதை துரைசாமி சூசக அறிவுரை |

12.22 pm: அதிமுக எம்.எல்.ஏ.க்களை அடைத்துவைத்திருப்பதாக கூவத்தூர் காவல் நிலையத்தில் வி.கே.சசிகலா மீது வழக்கு பதிவு.

12.20 pm: திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வர வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல: மு.க.ஸ்டாலின்.

12.05 pm: ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார் சசிகலா. அவருடன் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ஆகியோர் இருந்தனர். நினைவிடத்தை வலம்வந்து வணங்கிய சசிகலா அங்கு சபதம் செய்தார். நினைவிடத்தின் மீது ஓங்கி அடித்து அவர் சபதம் செய்தார். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என அவர் சபதம் மேற்கொண்டார்.

11.50 am: "ஜெயலலிதா ஆட்சி ஊழலாட்சி என்பது நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில், அவரது அணுகுமுறையை பின்பற்ற வேண்டும், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்று கூறுவதன் மூலம் ஊழலாட்சி தான் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறாரா? என்பதை பன்னீர்செல்வம் விளக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | ஜெ. வழியில் ஊழல் முதல்வராக தொடர்வீர்களா?- ஓபிஎஸ் விளக்க ராமதாஸ் வலியுறுத்தல் |

11.45 am: போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்டார் சசிகலா. சரணடைவதற்காக பெங்களூரு செல்கிறார்.

 

11.15 am: நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் கோரி வி.கே.சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் சார்பில் வழக்கறிஞர் துளசி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்னதாக கட்சி விவகாரங்களை கவனிக்க வேண்டியிருப்பதால் அவகாசம் தேவைப்படுகிறது எனக் கூறப்பட்டிருந்தது. | சரணடைய கால அவகாசம் கேட்டு சசிகலா விண்ணபித்த மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு |

11.00 am: போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்றுள்ளார். முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியும் போயஸ் தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

10.45 am: சசிகலா இன்னும் சற்று நேரத்தில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்டுச் செல்வார் எனத் தெரிகிறது.

10.30 am: கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதிக்குச் சென்றார் அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டயன். பெரும்பான்மை இருப்பதால் விரைவில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பர் என நம்புவதாகத் தெரிவித்தார்.

10.15 am: டிடிவி.தினகரன் அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். | அதிமுக துணை பொதுச் செயலர் தினகரன் நியமன பின்னணி |

10.00 am:சசிகலாவின் உறவினர்கள் டிடிவி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டனர்.

முந்தைய நிகழ்வுகள்:

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மவுனத்தை கலைத்தார் மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ்!

natraj-_jaya_13041.jpg

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் கூறியுள்ளார். ஒருவாரத்துக்கு மேல் மவுனமாக இருந்த நட்ராஜ் இன்று மவுனத்தை கலைத்துள்ளார்.

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சுமார் 130 பேர் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நட்ராஜ் அங்கு செல்லவில்லை. இதனிடையே, பத்து எம்எல்ஏக்கள், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ நட்ராஜ், யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்காமல் மவுனமாகவே இருந்தார். இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமிக்கு, நட்ராஜ் ஆதரவு அளிப்பதாக தகவல் வெளியானது.

இது குறித்து நட்ராஜிடம் கேட்டபோது, "கட்சி உடையக்கூடாது. பெரும்பான்மை எங்கே இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன்" என்று கூறினார். தற்போது, 120க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/80893-mylapore-mla--natraj-extends-supports-for-sasikala.html

  • தொடங்கியவர்

எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் வழக்கு: எடப்பாடி பழனிச்சாமி எந்த நேரத்திலும் கைது?

 

எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் என கூறப்படுகிறது.

 

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களை கடத்திய வழக்கில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எடப்பாடி பழனிச்சாமி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் உத்தரவின் பேரில் மன்னார்குடி குண்டர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

 

இந்த சிறையில் இருந்து மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் மாறுவேடத்தில் தப்பினார். அவர் நேரடியாக முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று தமது ஆதரவை தெரிவித்தார். அத்துடன் தாம் கடத்தி வைக்கப்பட்டதாக காவல்துறை இயக்குநரிடம் எம்.எல்.ஏ. சரவணன் புகார் தெரிவித்திருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் கூவத்தூர் போலீசார் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிலர் மீது ஆட்கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுவிட்டார். இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை போலீசார் ஆட்கடத்தல் வழக்கில் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என கூறப்படுகிறது. கூவத்தூர் காவல்நிலையத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டு எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்யும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrest-edapaadi-palanisamy-274160.html

  • தொடங்கியவர்

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 

 
சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதி முன்பு குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை போலீஸார் | படம்: கோ.கார்த்திக்
சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதி முன்பு குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை போலீஸார் | படம்: கோ.கார்த்திக்
 
 

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க.

2.15 pm: கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

1.30 pm: பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் ஆளுநர் காலம் தாழ்த்தாமல் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராம்ஜெயலிங்கம் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதி முன்பு குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை போலீஸார் | படம்: கோ.கார்த்திக்
சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதி முன்பு குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை போலீஸார் | படம்: கோ.கார்த்திக்
 
 

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க.

3.00 pm: அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்தது சட்டப்படி செல்லாது என்று பொன்னையன் தெரிவித்துள்ளார். | அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்தது செல்லாது: பொன்னையன் |

2.55 pm: தினகரன் நியமனம் சட்டவிரோதமானது என மதுசூதனன் தெரிவித்துள்ளார். 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "அதிமுக விதிகளின்படி கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே கட்சிப் பதவிக்கு தகுதியானவர். அந்த வகையில் தினகரன் அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது" என்றார்.

2.30 pm: தற்போதைய சூழலில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
 
சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதி முன்பு குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை போலீஸார் | படம்: கோ.கார்த்திக்
சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதி முன்பு குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை போலீஸார் | படம்: கோ.கார்த்திக்
 
 

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க.

3.45 pm: கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

3.30 pm: "என்வழிதான் நேர்வழி என்று முரண்டு பிடித்து நின்றால் படுகுழி காத்திருக்கும் என்பதை உணர வேண்டும். ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டிருந்தால் எதிரிக்குத்தான் கும்மாளம்." என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். | அதிமுக ஓரணியாக திரள முயற்சி எடுத்து வருகிறேன்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் தகவல் |

3.15 pm: தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என பாஜக எம்.பி. இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும

 
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக செல்லும் வி.கே.சசிகலா | படம்: சி.வெங்கடாசலபதி.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக செல்லும் வி.கே.சசிகலா | படம்: சி.வெங்கடாசலபதி.
 
 

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க.

5.20 pm: சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறையில் சரணடைந்தனர். சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

4.30 pm: சசிகலா சரணடையவுள்ள நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்துக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் ஆகியோர் வந்தடைந்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

  • தொடங்கியவர்

5.40 pm: சரணடைய அவகாசம் கோரி சுதாகரன் மனு

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை. சரணடைய கால அவகாசம் தேவை என்று சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
எம்.பி. நவநீத கிருஷ்ணன் | கோப்புப் படம்.
எம்.பி. நவநீத கிருஷ்ணன் | கோப்புப் படம்.
 
 

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க.

5.55 pm: ஆட்சியமைக்கக் கோரி ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் - எம்.பி.நவநீதகிருஷ்ணன் பேட்டி

கூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. நவநீதகிருஷ்ணன், ''ஏற்கெனவே கடிதம் கொடுத்தும் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்கக் கோரி ஆளுநர் அழைக்காதது நியாயமற்றது. தற்போது ஆட்சியமைக் கோரி அழைப்பு விடுக்க ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளோம். அதிமுக எம்.பி.க்கள் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

  • தொடங்கியவர்

சசிகலா தரப்பு கார்கள் மீது தாக்குதல்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி  ஆகியோர் சரண் அடைந்தனர். இந்நிலையில் அப்போது, தமிழ்நாடு பதிவு எண்ணுடன் சசிகலா தரப்பில் சென்ற ஐந்து கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த கார்களின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது பெங்களூரு காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
 

16776368_603774659820905_1827559012_o_18

குறிப்பாக, அவற்றில் சசிகலாவுக்கு உடைகளை எடுத்துச் சென்ற ஒரு காரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/india/80930-sasikala-supporters-car-attacked-in-bengaluru.html

 

 

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 

 
 
வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
 
 

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க.

6.15 pm: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
ஓ. பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: எல்.ஸ்ரீனிவாசன்
ஓ. பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: எல்.ஸ்ரீனிவாசன்
 
 

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க.

6.40 pm: சுதாகரன் சரணடைந்தார்

பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஷ்வத் நாராயணன் முன்பு சுதாகரன் சரணடைந்தார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை. சரணடைய கால அவகாசம் தேவை என்று சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6.35 pm: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் அவசர ஆலோசனை

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அவசர ஆலோசனை செய்து வருகிறார். மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

6.15 pm: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டனர்.

5.55 pm: ஆட்சியமைக்கக் கோரி ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் - எம்.பி.நவநீதகிருஷ்ணன் பேட்டி

கூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. நவநீதகிருஷ்ணன், ''ஏற்கெனவே கடிதம் கொடுத்தும் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்கக் கோரி ஆளுநர் அழைக்காதது நியாயமற்றது. தற்போது ஆட்சியமைக் கோரி அழைப்பு விடுக்க ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளோம். அதிமுக எம்.பி.க்கள் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

5.50 pm: பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியில் சசிகலாவுடன் வந்த கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. நீதிமன்றம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதால், அங்கு குவிந்திருந்த மக்களைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

5.40 pm: சரணடைய அவகாசம் கோரி சுதாகரன் மனு

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை. சரணடைய கால அவகாசம் தேவை என்று சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஏழரைக்கு எடப்பாடி பழனிச்சாமி, எட்டரைக்கு ஓ.பன்னீர் செல்வம் இன்று கவர்னருடன் சந்திப்பு

 

இன்றிரவு ஏழரை மணியளவில் எடப்பாடி பழனிச்சாமியும், எட்டரை மணியளவில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 
 
ஏழரைக்கு எடப்பாடி பழனிச்சாமி, எட்டரைக்கு ஓ.பன்னீர் செல்வம் இன்று கவர்னருடன் சந்திப்பு
 
சென்னை:
 
தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பு நிலையை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
 
இதையடுத்து, கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
 
இந்நிலையில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 8.30 மணியளவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/15192232/1068539/pannir-selvam-and-edapaty-palanichami-meets-governor.vpf

  • தொடங்கியவர்

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
 
 

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க.

நிகழ்நேரப் பதிவு நிறைவு

 

9.00 pm சட்டப்பேரவையை கூட்ட ஆளுநரிடம் ஓபிஎஸ் கோரிக்கை

ஆளுநரிடம் ''பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்'' என்ற கோரிக்கையை ஓபிஎஸ் முன்வைத்தார். அதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார். அதன் விவரம்: ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு

8.50 pm: ஆளுநரை சந்தித்தார் ஓபிஎஸ்

8.30 pm: ஆளுநர் மாளிகை புறப்பட்டார் பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ்

பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். ஓபிஎஸ் உடன் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன், எம்.பி. மைத்ரேயன் ஆகியோர் உள்ளனர்.

8.25 pm: ஆளுநர் ஜனநாயகத்தைக் காப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

எங்கள் கருத்தை ஆவன செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார். நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதன் விவரம்: எங்கள் கருத்தை ஆவன செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்

7.45 pm: ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டப்பேரவை கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் 10 அமைச்சர்கள் இருந்தனர்.

7.20 pm எதிர்க்கட்சிகள் மற்றும் எதிரிக் கட்சிகள் தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.அதன் விவரம்: கூவத்தூரில் தங்கி இருப்பது ஏன்?- அமைச்சர் நிலோபர் கபில் விளக்கம்

7.10 pm: பரப்பன அக்ரஹார சிறையில் சுதாகரன் அடைக்கப்பட்டார்

பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஸ்வதா நாராயணா முன்பு சுதாகரன் சரணடைந்தார். நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

6.55 pm: எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்ந்து, பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்திக்க உள்ளார். 8.30 மணிக்கு நேரம் ஒதுக்கினார் ஆளுநர்.

6.45 pm: ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கூவத்தூரில் இருந்து புறப்பட்டார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்15ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9544328.ece?homepage=true

  • தொடங்கியவர்

எங்கள் கருத்தை ஆவன செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்

 

 
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் | படம்: பிடிஐ
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் | படம்: பிடிஐ
 
 

எங்கள் கருத்தை ஆவன செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார். நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஆளுநரை எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவின் 10 அமைச்சர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''ஆளுநர் ஜனநாயகத்தைக் காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழ்னக்கியுள்ளோம். எங்கள் கருத்தை ஆவன செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார். நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு 8 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளார். எங்கள் அணியில் 124 எம்.ஏல்.ஏக்கள் உள்ளனர்'' என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/எங்கள்-கருத்தை-ஆவன-செய்வதாக-ஆளுநர்-கூறியுள்ளார்-அமைச்சர்-ஜெயக்குமார்/article9545127.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.