Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்த்தது உள்ளாட்சி...வரப் போகுது சட்டசபை தேர்தல்: ஸ்டாலின்

Featured Replies

 

 

 

 

 

 
Tamil_News_large_1711308_318_219.jpg
 
எதிர்பார்த்தது உள்ளாட்சி...வரப் போகுது சட்டசபை தேர்தல்: ஸ்டாலின்

 

சூலூர் : உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் சட்டசபை தேர்தலே வரும் நிலை ஏற்பட்டுள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

அற்ப ஆயுள் அரசு :

 

கோவை மாவட்டம் சூலூரில் திமுக.,வின் மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் இடைக்கால அரசே உள்ளது. இது நிலையான அரசு கிடையாது. இவர்களுக்கு மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ சிந்தனை இல்லை. அதிமுக.,வில் உருவாகி உள்ள 2 அணியில் எந்த அணி, அடுத்து ஆட்சி அமைத்தாலும் அது அற்ப ஆயுள் கொண்ட அரசாகவே இருக்கும். நம்மிடம் 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் 1.1 சதவீதம் ஓட்டுக்கள் குறைவாக பெற்றதாலேயே நம்மால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

 

வரப் போகுது சட்டசபை தேர்தல் :

 

உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் சட்டசபை தேர்தலே வரும் போல் உள்ளது. கடுமையாக உழைத்தால் நமக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது. நமக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதனால் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இளைஞரணியில் உள்ள அனைவரும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.,க்களை சென்னை வர அழைத்ததாக வெளியான தகவல் பொய்யானது. நான் தான் செயல் தலைவர். நான் கூறாமல் எப்படி அவசர அழைப்பு விடுக்க முடியும் என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711308

  • தொடங்கியவர்

‘அவர்களே ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்... நாம் அமைப்போம்!’ - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

"அ.தி.மு.க.வில் நான் முதல்வரா ? நீ முதல்வரா என்ற சண்டை டி.வி சீரியலை விட கேவலவமாக நடக்கிறது என்றும், அவர்கள் ஆட்சியை கவிழ்ப்பார்கள், நாம் ஆட்சி அமைப்போம்," எனவும் மு.க.ஸ்டாலின் கோவையில் பேசினார்.

தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் கூட்டம் கோவையில் இன்று நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்ததற்கு கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்தும், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பது, ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பது, விவசாயிகள் மரணம், வறட்சி போன்றவற்றை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வரும் தமிழக அரசை கண்டிப்பது, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வுக்கு விலக்களிக்க உடனடியாக குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மு.க.ஸ்டாலின்

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், "கொள்ளைப்புறமாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. ஆட்சி, பதவியை தேடி நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. பொறுத்திருங்கள். பதவி நம்மை தேடி வரும். ஜல்லிக்கட்டு போரட்டத்தை தொடக்கி வைத்ததும் தி.மு.க. தான்.. போராட்டத்தை முடித்து வைத்ததும் தி.மு.க. தான். மாணவர்கள் போரட்டமே ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருக்கும் என்று நான் சொல்லியிருந்தேன். அதன்படி மெரினா புரட்சியே, புதிய ஆட்சி அமைய வித்திட்டுள்ளது. அது இப்போது நடக்க போகிறது.

வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும். சமூக வலைதளங்களை முழுமையாக உபயோகித்து பெண்கள் , மாணவர்களை நமக்கான வாக்காளர்களாக மாற்ற வேண்டும். இனி நாம் எளிமையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்களுக்கு மட்டுமே கார்களை பயன்படுத்த வேண்டும். உள்ளூர் பயணங்களுக்கு மக்களுடன் பயணிங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்த்து, மக்களை எளிமையாக அணுகுங்கள். மாபெரும் மாற்றம் நடக்கவிருக்கிறது..

மு.க.ஸ்டாலின்

அவர்களில் நான் முதல்வரா? நீ முதல்வரா என்ற சண்டை டி.வி சீரியலை விட கேவலவமாக நடக்கிறது. இதை தமிழ்நாடே கவனிக்கிறது, இதனால் மக்கள், மாணவர்கள் மனதில் மாற்றம் நிகழும்..அ.தி.மு.க.வின் ஆட்சி ஒரு மாதமோ, இரண்டு மாதமே தான் நிற்கும். அதற்குள் அவர்களே அவர்கள் ஆட்சியை கவிழ்ப்பார்கள்," என மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், "அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி . தினகரன் நியமிக்கப்பட்டுள்ளது அவர்கள் உட்கட்சி விவகாரம். உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  கூட்டம்  நடைபெறுவதாக தகவல் வந்துள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, நான் தான் எதிர்கட்சி தலைவர், நான் தான் கூட்ட வேண்டும் ஆதராம் இல்லாமல் கேள்வி கேட்க வேண்டாம்," என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80887-aiadmk-dissolve-assembly-and-we-will-form-government-says-dmk-working-president-mkstalin.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.