Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘என்ன செய்யப் போகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ - திகில் கிளப்பும் டெல்லி மூவ்

Featured Replies

‘என்ன செய்யப் போகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ - திகில் கிளப்பும் டெல்லி மூவ்

பன்னீர்செல்வம்-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

ட்டசபைக் குழுத் தலைவராக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. 'எம்.எல்.ஏக்கள் தொகுதிக்குள் செல்லும் வரையில் ஆளுநர் எந்த உத்தரவும் பிறப்பிக்க வாய்ப்பில்லை. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில்.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அடுத்து, பெங்களூருவுக்குப் பயணப்பட இருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. புதிய துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். இதை எதிர்த்து அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கருப்பசாமி பாண்டியன். "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்தே நீக்கப்பட்ட தினகரனுக்கு மீண்டும் பதவியை வழங்கியதில் நிர்வாகிகள் பலருக்கு விருப்பமில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் பலரும் பன்னீர்செல்வம் ஆதரவு மனநிலையில் உள்ளனர். அவர்களை ஓ.பி.எஸ் பக்கம் முழுமையாகக் கொண்டு வருவதற்கான வேலைகளும் வேகமெடுத்து வருகின்றன" என விவரித்த பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர், 

எடப்பாடி பழனிச்சாமி"கூவத்தூர், கோல்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவரால் கொண்டு வரப்பட்ட குண்டர்கள்தான் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இவர்களைத் தாண்டி வெளியே செல்வது என்பது சாத்தியமில்லாதது. 'எடப்பாடியை ஆளுநர் அழைப்பார்' என நம்பிய சசிகலா உறவினர்களும் ஏமாந்துவிட்டனர். எம்.எல்.ஏக்களின் நிலை குறித்துத்தான் எடப்பாடியிடம் விசாரித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று ஆளுநரிடம் மனு கொடுத்தபோது எந்த வாக்குறுதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. சில நிமிடங்களில் சந்திப்பு முடிந்துவிட்டது. ஆளுநரின் நடவடிக்கைகளையும் அதிர்ச்சியோடு கவனித்தார் பழனிச்சாமி. 'நம்மை அழைப்பதற்கு வாய்ப்பு குறைவுதான்' எனத் தெரிந்த பிறகே, ரிசார்ட்டில் ஐந்து நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. 'நாம் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. நமக்குத் துரோகம் செய்த பன்னீர்செல்வம் ஜெயித்துவிடக் கூடாது' எனக் கோபத்தைக் காட்டியிருக்கிறார் சசிகலா.

'அவர்கள் பக்கம் 119 எம்.எல்.ஏக்கள் வரையில் ஆதரவு மனநிலையில் உள்ளனர்' எனச் சொல்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் ஓ.பி.எஸ் பக்கம் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கான வாய்ப்பை உருவாக்கும்விதமாகவே, எம்.எல்.ஏ சரவணன் கொடுத்த ஆள்கடத்தல் புகாரின் அடிப்படையில் சசிகலா மற்றும் எடப்பாடி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கும் முடிவில் இருக்கிறார் ஆளுநர். 'ஆட்சி பறிபோய்விடக் கூடாது' என்ற எண்ணத்தில், எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ் தோற்றுவிட்டால், 356 என்ற ஆட்சிக் கலைப்பு அஸ்திரத்தை ஆளுநர் பயன்படுத்துவார். எடப்பாடியை அழைக்கும் முடிவில் ஆளுநர் இருந்திருந்தால், இப்படியொரு வழக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எம்.எல்.ஏக்கள் அனைவரும் தொகுதிக்குச் செல்லும் வரையில் ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்பில்லை" என்றார் உறுதியாக. 

"பன்னீர்செல்வத்தின் கரங்களை வலுப்படுத்துவதுதான் பா.ஜ.கவின் முக்கியப் பணியாக இருக்கிறது. அதையொட்டியே அனைத்துப் பணிகளும் வேகமெடுத்து வருகின்றன. ஆட்சிக் கலைத்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக ஆலோசித்து வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 'பன்னீர்செல்வம் தோற்றுவிட்டாலும், தேர்தல் வரும்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மத்தை முன்வைத்தே வெற்றி பெற்றுவிடலாம். அனுதாப அலை வெற்றியைக் கொடுக்கும்' எனவும் பேசி வருகின்றனர். எந்தப் பிரச்னை வந்தாலும் சசிகலா ஆதரவு மனநிலையில் முப்பது எம்.எல்.ஏக்கள் வரையில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பன்னீர்செல்வம் பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. கடைசி நிமிடம் வரையில் எம்.எல்.ஏக்களை வளைப்பது முக்கிய அசைன்மெண்டாக இருக்கிறது. அப்படி நடக்காதபட்சத்தில் ஆட்சிக் கலைப்பைத் தவிர்க்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது எந்தக் காலத்திலும் நடக்காத ஒன்று" என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

'முதல்வர் பன்னீர்செல்வம் அல்லது 356' என இரண்டில் ஒரு விரலைத் தொடும் ஆட்டத்தைக் கனகச்சிதமாக நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. 'மாநில சுயாட்சி முழக்கங்கள் எங்கே போனது?' என ஜனநாயகக் குரல் எழுப்புகின்றவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாகவே இருக்கிறது. அகில இந்திய அளவில் எந்த ஆதரவும் இல்லாமல் தவிக்க விடப்பட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. 

http://www.vikatan.com/news/tamilnadu/80899-now-whats-next-for-governor-vidyasagar-rao---the-delhi-secret.html

  • தொடங்கியவர்

ஆளுநர் வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிராவில் செய்ததை இங்கும் செய்வாரா?

வித்யாசாகர் ராவ்

மிழக அரசியலின் அடுத்த காட்சி இப்போது ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சுற்றி நகர்ந்து வருகிறது. ராஜினாமா செய்யப்போவதாகக் கொடுத்த கடிதத்தை ரத்து செய்யும்படி பன்னீர் செல்வம் ஆளுநரிடம் சொல்லி இருக்கிறார். இன்னொருபுறம் "என்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கடிதம் கொடுத்து இருக்கிறார். ஆனால், எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டு எந்த ஒரு முடிவும் எடுக்காமல் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறார். அவரது மெளனத்துக்கு அர்த்தம் தெரியாமல் தமிழகத்தின் அரசியல் ஸ்திரத் தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.

கவர்னர் மனதில் என்ன இருக்கிறது?

வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவின் ஆளுநராகவும் இருக்கிறார். மகாராஷ்டிராவில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 288 இடங்களில் 145 இடங்களைப் பெறுபவர்தான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  

பி.ஜே.பி 122 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.சிவசேனா 45 இடங்களைப் பிடித்தது. சிவசேனா கட்சி பி.ஜே.பி கூட்டணியில் சேர முடியாது என்று முரண்டு பிடித்தது. தேசியவாத காங்கிரஸ் 42 இடங்களைப் பிடித்திருந்தது.

பி.ஜே.பி சட்டமன்றக் குழுத் தலைவராக பட்நாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தார். அவருக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் வித்யாசாகர் ராவ். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி 2014-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி மகாராஷ்டிரா சட்டசபை கூடியது. பட்னாவிஸ் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார்.

இந்தத் தீர்மானத்துக்கு பி.ஜே.பி-ஐயை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்தனர். சிவசேனா, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் குரல் ஓட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். டிவிஷன் ஓட்டெடுப்பு கேட்டனர். ஆனால், அதற்கு சபாநாயகர் வாய்ப்பளிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சி பி.ஜே.பி-க்கு ஆதரவு அளிக்கவும் இல்லை, எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. எனவே, பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில் பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதனை  ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக்கொண்டார்.

இத்தனைக்கும் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று கேட்டனர். ஆனால், ஆளுநர் வித்யாசாகர் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. ஒரு கட்டத்தில் சிவசேனாவே பி.ஜே.பி கூட்டணியில் இணைந்தது என்பது தனிக்கதை. இப்போது தமிழகத்தை கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வரும் வித்யாசாகர் மனதில் இருப்பதும் அதே போன்ற ஒரு திட்டம்தான் என்கின்றனர்.

முதல்வராக பொறுப்பு ஏற்பவர்கள் தங்களுக்கு உரிய பலத்தை சட்டசபையில் நிரூபிக்கும்போது குரல் ஓட்டெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அதிக எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருக்கும் எடப்பாடிக்கு முதல்வாய்ப்பு அளிக்கப்படும். அதில் சிக்கல் ஏற்பட்டால் அடுத்ததாக அதிக எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருக்கும் தி.மு.க-வுக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது. திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, தி.மு.க-வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதும் இதைக் கருத்தில் கொண்டுதான் என்கின்றனர். என்ன நடக்கப்போகிறது?

http://www.vikatan.com/news/coverstory/80897-would-vidyasagar-rao-do-what-he-have-done-at-maharashtra.html

  • தொடங்கியவர்

MLA: ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால்தான் விடுதியை விட்டு வெளியே வருவோம்

கவர்னர்: விடுதியை விட்டு வெளியே வந்தால்தான் ஆட்சி அமைக்க அழைப்பேன் ??

  • தொடங்கியவர்
கவர்னர் முடிவு என்ன? பன்னீர், பழனி பதற்றம்
 
 
 

முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், நேற்று, கவர்னர் வித்யாசாகர் ராவை, தனித்தனியே சந்தித்து, தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி வலியுறுத்தினர்.

 

Tamil_News_large_171137720170215231354_318_219.jpg

சட்டசபை, அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி, நேற்று முன்தினம், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை கொடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நேற்று மாலை வரை, கவர்னரிடம் இருந்து அழைப்பு வராததால், இரவு, 7:57 மணிக்கு,

எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் மாளிகைக்கு சென்றார். அவருடன், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, எம்.பி., நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் சென்றனர். அவர்கள், தங்களுக்கு பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ள தால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி, கவர்னரிடம் வலியுறுத்தினர்.
 

இது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:


எங்களுக்கு பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதால், ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரினோம். 'ஜனநாயகத்தை காப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது; நாளை அழைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என, கவர்னரிடம் கூறினோம். விரைவில் அழைப்பார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரவு, 8:45 மணிக்கு, முதல்வர்பன்னீர்செல்வம், கவர்னர் மாளிகைக்கு சென்றார். அவருடன், அமைச் சர் பாண்டியராஜன், அவைத் தலைவர் மதுசூதனன், ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உடன் சென்றனர்.

அவர்கள், 'சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏ.,க்களை

 

அடைத்து வைத்துள்ளனர். அவர்களால் வெளி படையாக, தங்களுடையஆதரவை தெரிவிக்க முடியவில்லை. சட்டசபையில் பெரும்பான் மையை நிரூபிக்க வாய்ப்பளித்தால், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிப்பர்; எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்' என, வலியுறுத்தினர்.

இரு தரப்பினரையும் சந்தித்த கவர்னர், ஆட்சி அமைக்க யாருக்கு அழைப்பு விடப் போகிறார் என்பது தெரியவில்லை. அதனால், இரு தரப்பினரும் பதற்றத்துடன் உள்ளனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711377

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.