Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கோட்டையனை ஓரங்கட்டிய சிஷ்யன் :ஏறிய ஏணியை எட்டி உதைத்த 'எடப்பாடி'

Featured Replies

 
 
செங்கோட்டையனை ஓரங்கட்டிய சிஷ்யன் :ஏறிய ஏணியை எட்டி உதைத்த 'எடப்பாடி'
 
 

 

 

 

செங்கோட்டையனிடம் அரசியல் கற்று, அவர் மூலம், கட்சியில் படிப்படியாக வளர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது, செங்கோட்டையனை ஓரங்கட்டி, முதல்வர் பதவியை
கைப்பற்ற உள்ளார்.

அ.தி.மு.க.,வில் சீனியர், எட்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், கொங்கு மண்டல கவுண்டர் சமுதாயம் மற்றும் இதர சமூக மக்களிடமும் செல்வாக்குள்ளவர், கோபி தொகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

கடந்த, 1991 - 96ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 2011ல் மீண்டும் அமைச்சராக்கப்பட்டாலும், ஓரே ஆண்டில், ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையனுக்கு, ஜெ., மறைவுக்கு பின் தான், முக்கியத்துவம் கிடைத்தது.சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்தால், செங்கோட்டையன் முதல்வராக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சசிகலா குடும்பத்தினர் முடிவுப்படி, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், செங்கோட்டையன் கடும் விரக்தியில் உள்ளார்.

எடப்பாடி தொகுதியில், 1989, 1991, 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தலிலும், 1998ல் திருச்செங்கோடு பார்லிமென்ட் தொகுதியிலும், பழனிச்சாமி ஜெயித்தார். 2011ல், நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.அப்போதே, சசிகலா குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். 2011 அமைச்சரவையில், வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு, மூன்றாவது இடத்தையும், எடப்பாடிக்கு, ஏழாவது இடத்தையும் ஜெயலலிதா கொடுத்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனிடம் அரசியல் கற்றவர். ஒவ்வொரு முறையும் அவராலேயே சீட் பெற்றவர். ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் போதெல்லாம், பிரசார வழித்தடம் அமைத்து, சாரதியாக செயல்பட்டவர் செங்கோட்டையன். அப்போது அவருடன் பவனி வந்தவர் தான், எடப்பாடி பழனிச்சாமி.ஆனால், 2012ல் செங்கோட்டையன் ஒதுக்கப்பட்ட பின், முற்றிலுமாக அவரிடம் இருந்து, எடப்பாடி பழனிச்சாமி ஒதுங்கினார். அவரது சாதாரண பரிந்துரைகளைக் கூட தவிர்த்தார்.

மேலும், அவருக்கு எதிராக காய் நகர்த்தி, கவுண்டர் இனத்தை சேர்ந்த தங்கமணி, செந்தில் பாலாஜி, கரூர் விஜயபாஸ்கர், வேலுமணி, கே.பி.ராமலிங்கம், தோப்பு வெங்கடாசலம் ஆகியோரை ஒருங்கிணைத்து அரசியல் செய்து வந்தார்.செங்கோட்டையனிடம் பாடம் கற்ற எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராவதை, கொங்கு மக்களும் விரும்பவில்லை. அவர்கள், செங்கோட்டையனை தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறி வருவதுடன், முதல்வருக்கு இணையான பதவி அல்லது கட்சியின் பொது செயலர் பதவி கேட்குமாறு, வற்புறுத்தி வருகின்றனர்.

வெடிக்க காத்திருக்கும் செங்கோட்டையன்

முக்கிய பதவிகள் அனைத்தும் மறுக்கப்படுவதால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஜெ., மறைந்ததும், சசிகலா, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முடிவு செய்தார்.

அவரது குடும்பத்தினர், கட்சியின் முன்னணி தலைவரான, செங்கோட்டையனை முதலில் வளைத்தனர். 'கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் வழங்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, செங்கோட்டையன், சசிகலாவை ஆதரித்தார்.இதன்படி, அவரை அமைப்பு செயலராக்கினர். அவருடன் சேர்ந்து, 12 பேர் அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டனர். துணை பொது செயலர் பதவியை எதிர்பார்த்த நிலையில், 'டம்மி'யான அமைப்பு செயலர் வழங்கப்பட்டதால், அதிருப்திக்கு ஆளானார்.

ஆயினும், பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கிய போதும், சசிகலா பக்கம் நின்றார். பன்னீர்செல்வத்தை, பொருளாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கியதும், அப்பதவியை எதிர்பார்த்தார்.
ஆனால், பொருளாளராக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, சசிகலா நியமித்தார். இதனால், செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தி அடைந்தார். அவைத் தலைவர் மதுசூதனன், பன்னீர்செல்வம் அணிக்கு தாவியதும், அந்த பதவியில், செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.

அந்த பதவி, கட்சியில் முக்கியத்துவம் இல்லாதது என்பதால், செங்கோட்டையன் திருப்தி அடையவில்லை. அடுத்து, முதல்வர் பதவிக்கு, தன்னை சசிகலா பரிந்துரைப்பார் என, செங்கோட்டையன் எதிர்பார்த்தார். ஆனால், அவரால் வளர்த்து விடப்பட்ட, எடப்பாடி பழனிசாமியை, சசிகலா தேர்வு செய்தார்.

அடுத்த அடியாக, துணை பொது செயலராக, தன் அக்கா மகன் தினகரனை, சசிகலா நியமித்தார். பொருளாளர், முதல்வர், துணை பொது செயலர் என, முக்கிய பதவி எதையும், சசிகலா தராதது, செங்கோட்டையனுக்கு கடும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:

செங்கோட்டையனின் சீனியாரிட்டிக்கு ஏற்ற, எந்த பதவியும் அவருக்கு தரப்படவில்லை. எம்.ஜி.ஆரின் பாசறையில் இருந்தவரை விட்டுவிட்டு, அவரது பார்வையில் வளர்ந்த, எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததை, எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், கட்சியை, சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றுவதையும் அவர் விரும்பவில்லை. ஆனாலும், அவரை சரிக்கட்டி வைத்திருக்கின்றனர். எந்த நேரத்திலும், அவர் வெடிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.