Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வராததால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம்

Featured Replies

மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வராததால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 9 பேரை தவிர வேறு யாரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர் செல்வம் கலக்கம் அடைந்துள்ளார்.

 
 
மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வராததால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம்
 
சென்னை:

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவால் முதல்- அமைச்சராக 2 முறை அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், 3-வது முறையாகவும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் முதல்- அமைச்சர் ஆனார். ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை சசிகலா பிடித்தார். அடுத்த கட்டமாக முதல்-அமைச்சர் பதவிக்கு அவர் குறி வைத்தார்.

இதற்கு வசதியாக ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தான் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும், குற்றம் சாட்டிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க தொடங்கினர். கடந்த 7-ந்தேதியில் இருந்து அடையாறில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டனர்.

அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் மா.பாண்டியராஜன் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மக்கள் மத்தியிலும், அ.தி.மு.க. தொண்டர்களிடையேயும் ஓ.பன்னீர் செல்வத்துக்கே ஆதரவு இருந்தது. இதனால் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஓ.பன்னீர்செல்வமே முதல்-அமைச்சராக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்திருப்பது ஏன்? அவர்களை சுதந்திரமாக வெளியில் நடமாட விட வேண்டியது தானே? என்று கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், கூவத்தூர் விடுதியில் இருந்து தப்பி வெளியில் வந்து, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதன் காரணமாக அவரைப் போல மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் இருந்து வெளியேறி, ஓ.பி.எஸ்.சை ஆதரிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துப் போனது.

இதற்கிடையே, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனையை உறுதி செய்யும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு புயலாய் வந்தது. அது அரசியல் களத்தையே புரட்டிப் போட்டு விட்டது.

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 10 ஆண்டு களுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இதனை தொடர்ந்து சசிகலாவுக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆட்சி அமைக்கவும் அவர் தயாராகி வருகிறார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 9 பேரை தவிர வேறு யாரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே உள்ளனர்.

இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பன்னீர் செல்வம் கலங்கிப் போய் உள்ளார். அவரது ஆதரவாளர்களும் களை இழந்து காணப்படுகிறார்கள்.

அடையாறில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்திலும் தொண்டர்களின் எழுச்சி குறைந்துள்ளது.

இது அரசியல் களத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/16110226/1068621/O-Panneer-Selvam-unfazed-more-ADMK-MLAs-not-support.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.