Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: சிறையில் சசிகலாவுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை - ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர்

Featured Replies

பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: சிறையில் சசிகலாவுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை - ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர்

 

 
 
வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
 
 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழ‌க்கில் அதிமுக பொதுச் செயலாள‌ர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக் கறிஞர்கள் செந்தில், அசோகன், மூர்த்தி ராவ் ஆகியோர் நேற்று காலை பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ சசிகலாவை சந்தித்தனர். அப்போது சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனுவை தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இது தொடர்பான ஆவணங்களில் மூவரிடமும் கையெழுத்து பெற்றனர்.

சிறையில் சசிகலா கேட்ட ஏசி அறை, வீட்டு சாப்பாடு உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட வில்லை. எனவே சசிகலா சிறையில் கஷ்டப்படுவதாக வழக்கறிஞர்களிடம் இளவரசி தெரிவித்துள்ளார்.

இதனால் வழக்கறிஞர்கள் சட்ட விதிமுறைகளின்படி சசிகலா, இளவரசி உள்ளிட்டோரை பெங்க ளூரு சிறையில் இருந்து தமிழகத் தில் உள்ள சிறைக்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர். அதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழ கத்தில் அதிமுக ஆட்சி நடைபெறு வதால் கர்நாடக சிறையில் இருந்து தமிழகத்துக்கு மாற்றுவது சிரமமான காரியமாக இருக்காது. கர்நாடக அரசும், சிறைத் துறையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது என நம்பிக்கை அளித்துள்ளனர்.

இதையடுத்து வ‌ழக்கறிஞர்கள் செந்திலும், அசோகனும் உடனடி யாக சிறையை மாற்றுவது தொடர்பான பணிகளை முடுக்கி விடுவதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு வையும் விரைவில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறையில் வழங்க வேண்டிய வசதிகள் தொடர்பாக கர்நாடக சிறை துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

இதனிடையே நேற்று மாலை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு வந்த கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற தகவலைக் கடிதமாக எழுதி காவலர்கள் மூலமாக சசிகலாவுக்கு கொடுத்து அனுப்பினார். இதேவேளையில் பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலாவின் கணவர் ம. நடராஜன், உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார் உள்ளிட்டோர் சசிகலாவைச் சிறைக்கு சென்று சந்திக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது திரண்ட அளவுக்கு அதிமுக நிர்வாகிகளோ, தொண்டர்களோ சசிகலாவைக் காண சிறைக்கு வரவில்லை.

http://tamil.thehindu.com/india/பெங்களூருவில்-இருந்து-தமிழக-சிறைக்கு-மாற்ற-திட்டம்-சிறையில்-சசிகலாவுடன்-வழக்கறிஞர்கள்-ஆலோசனை-ஆவணங்களில்-கையெழுத்து-பெற்றனர்/article9547674.ece?homepage=true

  • தொடங்கியவர்
தமிழக சிறையில் சசிகலா?
வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு
 
 
 

பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, பரப்பன அக்ரஹாரா சிறையில், தண்டனை அனுபவித்து வரும், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, சென்னை சிறைக்கு மாற, முயற்சி மேற்கொண்டு உள்ளார்.

 

Tamil_News_large_171279320170217231135_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலர், சசிகலாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது' என்ற தமிழக உளவுத் துறை அதிகாரிகளின் தகவல் அடிப் படையில், பெங்களூரு சிறையிலிருந்து, சென்னைக்கு இடமாற்றம் செய்யும்படி கோரி, நீதிமன்றத்தில், சசிகலா மனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

பரப்பன அக்ரஹாரா சிறையில் அமர்ந்திருந் தால், தமிழக அரசியலை கட்டுப்படுத்துவது கஷ்டம். சென்னை சிறைக்கு இடம் பெயர்ந்தால், அங்குள்ள அரசை, கட்டுப் பாட்டுக் குள் வைத்து, மறைமுகமாக ஆட்சி நடத்தலாம் என்பது, சசிகலாவின் திட்டமாக கூறப்படுகிறது. மேலும், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந் தால், சலுகை, வசதிகளுக்காக மன்றாட வேண்டும். தமிழகம் என்றால், சிறை வாழ்க் கையை எளிதாக கழிக்கலாம் என்பதும், மற்றொரு காரணம்.

தமிழக முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, தன்

பலத்தை இன்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அவரும், அமைச்சர்கள் பலரும், இன்று மாலை அல்லது திங்கட்கிழமை காலை, சசிகலாவை சந்திக்க வரவுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு நலன் கருதி, சிறையை சுற்றி, கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு உள்ள னர். மறைந்த முதல்வர்ஜெயலலிதா, சிறையிலிருக் கும் போது வந்திருந்த, அ.தி.மு.க., தொண்டர்களில், 5 சதவீதம் பேர் கூட வரவில்லை என்பதால், அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவை: 'சசிகலாவை, தமிழக சிறைக்கு மாற்றக் கூடாது' என, வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களை, தமிழக சிறைக்கு மாற்றக் கோரி, அ.தி.மு.க., தரப்பு, கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளது. சட்டப்படி, தமிழக சிறைக்கு மாற்ற முடியுமா என்பது குறித்து, கோவை வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வழக்கறிஞர் சண்முகம்:

வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியை, மாநிலத்திற்கு உட்பட்ட சிறைக்கு மாற்றுவதற்கு, சிறைச்சாலைஉயரதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. சசிகலா வழக்கை பொறுத்தவரை, கர்நாடக சிறையில் இருந்து, தமிழகத்திற்கு மாற்றுவதற்கு, சிறை நிர்வாகத்திற்கோ, அம்மாநில அரசுக்கோ அதிகாரம் இல்லை.

வழக்கில், இறுதி தீர்ப்பு அளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்ய வேண்டும். எதிர்ப்பு தெரிவித்து, எதிர் தரப்பினர் மனு தாக் கல்

 

செய்தால், அவற்றை பரிசீலித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும்.

வழக்கறிஞர் விஜயசேகர்:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராக உள்ளார். அவரால் தேர்வு செய்யப் பட்டவர் தான், தமிழக முதல்வராக பொறுப் பேற்று உள்ளார்.

அ.தி.மு.க., ஆட்சி நடக்கும் போது, குற்றவாளி யான சசிகலாவை, தமிழக சிறைக்கு மாற்றி னால், அவர் தண்டனை அனுபவிக்க மாட்டார். சிறைக்குள் இருப்பது போல கணக்கு காட்டி விட்டு, போயஸ் கார்டனில், மறைமுக வாழ்க்கை நடத்தவும் வாய்ப்புள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தால், அண்ணா துரை பிறந்த நாளின் போது, நன்னடத்தை விதியை காரணம் காட்டி, சசிகலாவை விடுதலை செய்து விடுவர். எனவே, தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்ற, கர்நாடக அரசும், சுப்ரீம் கோர்ட்டும் அனுமதிக்கக்கூடாது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712793

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.