Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ஜெயில் கதவை திற... எங்க அம்மாவைப் பாக்கணும்..!’ பரப்பன அக்ரஹாரவை பரபரப்பாக்கிய பெண்

Featured Replies

‘ஜெயில் கதவை திற... எங்க அம்மாவைப் பாக்கணும்..!’ பரப்பன அக்ரஹாரவை பரபரப்பாக்கிய பெண்

பரப்பன அக்ரஹார சிறை

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறை வளாகம் பரபரப்பு மிகுந்து காட்சியளிக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறை வளாகம் முழுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது. உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், கீழமை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்தது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை தவிர  3 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா, இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

பரப்பன அக்ரஹார சிறை

ஜெயலலிதா இருந்தபோது ஆயிரக்கணக்கானோர் திரண்ட நிலையில், இப்போது 10 பேர் கூட சிறை வளாகத்தில் இல்லாத சூழல் தான் நிலவி வருகிறது. கட்சியினரே வராத போது பொதுமக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கட்சியின் பொதுச்செயலாளர் சிறை வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெருமளவில் திரள்வார்கள் என எண்ணிய கர்நாடகா போலீஸார், பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். ஆனால் சிறைப்பக்கம் யாரும் எட்டி பார்க்காதது போலீஸாருக்கு ஷாக். இருந்தாலும் போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு சிறை வளாகத்திற்கு காரில் வந்து இறங்கினார் ஒரு பெண். தங்க நிற பாடர் வைத்த கறுப்பு நிற சீலை. கழுத்து நிறைய நகைகள் என டிப் டாப் தோற்றத்தோடு வந்த அவர், நேராக சிறை வளாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் நுனிநாக்கு ஆங்கிலத்தில் போலீஸாரை மிரட்டும் தொனியில் பேச... தமிழகத்தைச் சேர்ந்த வி.ஐ.பி.யாக இருக்குமென நினைத்து அவரை உள்ளே அனுமதித்தனர்.

கையில் இரு செல்போன்களில் மாறி மாறி... வி.ஐ.பி.க்களிடம் பேசுவது போல பேசிக்கொண்டிருந்தார் அவர். சிறைவளாகத்துக்குள் சென்ற அந்த பெண், துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு நின்ற பெண்ணிடம், 'சிறை கதவை திற, எங்க அம்மாவை பார்க்க வேண்டும்' என கேட்டார். சசிகலாவை சொல்கிறாரோ என நினைத்து அவரிடம் போலீஸார் பேசிய போலீஸார், யாரைப்பார்க்க வேண்டும் என மீண்டும் கேட்டனர்.

பரப்பன அக்ரஹார சிறை

'ஜெயலலிதா அம்மாவைத்தான் பாக்கணும். அவங்க உள்ளே தானே இருக்காங்க. அவுங்கள நான் பாக்கணும். உன் துப்பாக்கிக்கு நான் பயந்தவள் அல்ல' என சொல்ல அதிர்ந்து போனார்கள் போலீஸார். அவரிடம் உள்ளே 'ஜெயலலிதா இல்லை. அவர் இறந்து விட்டார்' எனச் சொல்ல... ஆவேசமடைந்த அந்த பெண் 'என் தெய்வத்தை இந்த ஜெயில்ல போட்டு கொன்னுட்டீங்களே... பாவிகளா! என் தெய்வம் இறந்ததை ஏன் சொல்லவில்லை' என கதறி அழ சிறை வளாகம் பரபரத்தது.

இதையடுத்து போலீஸார் விசாரித்த போது அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் சிறை வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த பெண்ணின் பெயர் சந்திரம்மாள் என்பது, மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த அவர், பெங்களூருவில் தங்கி இருக்கிறார். ஜெயலலிதா மீது பற்று கொண்டிருந்ததால் அவர் சிறையில் இருக்கும்போது தினமும் சிறைக்கு வந்து  சென்றுள்ளார். ஜெயலலிதா இறந்த பிறகு உளவியல் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

http://www.vikatan.com/news/india/81094-‘open-the-jail-i-want-to-see-my-amma’-furore-in-parappana-agrahara-jail.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.