Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது எல்லையை மீறி செயற்பட முயற்சி

Featured Replies

அர­ச சார்­பற்ற நிறு­வ­னங்கள் தமது எல்­லையை மீறி செயற்­பட முயற்சி

my3-e82f6bd654dee40a9c34139f5e4da4fdd83d96ea.jpg

 

அனு­ம­திக்க முடி­யாது என்­கிறார் ஜனா­தி­பதி

(எம்.எம்.மின்ஹாஜ்)

எனது சொத்து விப­ரங்­களை  தேர்தல்கள் ஆணை­யா­ள­ரிடம் பெறலாம்

தகவல் அறியும் உரி­மையை பயன்­ப­டுத்தி அரச சார்­பற்ற அமைப்­பொன்று எனது சொத்து விப­ரங்­களை கோரி­ யுள்­ளது. எனது சொத்து விப­ரங்­களை மறைக்க வேண்­டிய எந்­த­வொரு தேவையும் எனக்கு இல்லை. ஜனா­தி­ப­தியின் சொத்து விப­ரங்­களை கோரு­வ­தற்கு தேர்தல்கள் ஆணை­யா­ள­ருக்கு அதி­காரம் இல்­லாத போதும் ஜனா­தி­ப­தி­யாக பொறுப்­பேற்று 2வரு­டங்­க­ளுக்குள் சொத்து விப  ரங்­களை சமர்ப்­பித்த நாட்டின் ஒரே ஜனா­தி­பதி நான்தான் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

அத்­துடன் தற்­போது நாட்டில் ஜன­நா­யக உரி­மையை துச்­ச­மாக மதித்து ஆர்ப்­பாட்­டங்­களும் உண்­ணா­வி­ரத போராட்­டங்­களும் நடந்து கொண்ட வண்­ணமே உள்­ளன. கொழும்பில் ஒவ்­வொரு நாளும் ஆர்ப்­பாட்­டங்கள் நடந்த வண்­ணமே உள்­ளன. நாம் வழங்­கிய சுதந்­தி­ரத்தை பிர­யோ­ச­மான முறையில் பயன்­ப­டுத்த வேண்டும் இப்­ப­டி­யொரு சுதந்­திரம் ஏன் வழங்­கப்­பட்­டது என்­ப­தனை தெரிந்து செயற்­பட வேண்டும் என்றும் அவர் கோரினார். 

அரச சார்­ப­பற்ற நிறு­வ­னங்கள் சில முறை­யற்ற விதத்­திலும் அவர்­க­ளது காரி­யங்­க­ளுக்கு அப்­பாலும் செல்­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தெளி­வா­கவும் தமக்கு உரிய வேலை­களை உரிய முறையில் முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

தகவல் அறியும் உரி­மையை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மக்­க­ளுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வு பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தலை­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அரச அதி­கா­ரிகள் பெருந்­தொ­கை­யா­னோரும் கலந்து கொண்­டனர். இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில், தகவல் அறியும் உரிமை ஏன் வழங்­கப்­பட்­டது? தகவல் அறியும் உரிமை சட்­ட­மூலம் அரச நிர்­வா­கத்தின் நேர்­மையை பாது­காக்­கவும் வெளிப்­படை தன்­மை­யுடன் செயற்­ப­டு­வ­தற்கே இந்த உரிமை நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. மனிதன் என்றால் பயமும் வெட்­கமும் இருக்க வேண்டும். பயமும் வெட்­கமும் இல்­லாது போனால் அவர்கள் மனி­தர்கள் அல்ல. மிரு­கங்­க­ளாகும். மிரு­கங்­க­ளு­டைய தன்மை அப்­ப­டி­யா­கதான் இருக்கும். எனவே அபி­வி­ருத்தி உள்­ளிட்ட அரச நிர்­வாக நட­வ­டிக்­கைகள் தொடர்பில் வெளிப்­படை தன்­மையை பாது­காக்­கவே தகவல் அறியும் உரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் என்ற அடிப்­ப­டையில் மறை­மு­க­மாக செயற்­பட வேண்­டிய எந்­த­வொரு தேவையும் இல்லை. 

எனவே அரச நிர்­வா­கத்­தின்­போது வெளிப்­படை தன்மை மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மாகும். நாட்டில் தற்­போது ஒழுங்கு முறை­மையில் பாரிய பிரச்­சி­னைகள் உள்­ளன. நாட்டில் அர­சி­யல்­வா­தி­களும் அரச அதி­கா­ரி­களும் ஒழுங்கு விதி­களை சீராக பின்­பற்­றாமல் உள்­ளனர். அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் அரச அதி­கா­ரி­க­ளி­டமும் இணக்­க­பாடு இல்­லாமல் உள்­ளது. அர­சி­யல்­வா­தி­களும் அரச அதி­கா­ரி­களும் தமது சுய இலா­பத்­திற்­காக செயற்­பட்டு வரு­கின்­றனர். நாட்டு நிர்­வா­கத்தின் போது இந்த இரு தரப்பும் ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் தற்­போது இரு தரப்பும் ஒற்­று­மை­யாக இல்லை. இந்த இரு தரப்பும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டாது விட்டால் நாட்டை நிர்­வ­கிப்­பது மிகவும் கடி­ன­மான காரி­ய­மாகும். நிர்­வா­கி­க­ளாக செயற்­பட வேண்­டி­ய­வர்கள் இரு தரப்­பாக பிரிந்து செயற்­பட்டு வரு­கின்­றனர். இப்­ப­டியே இருந்தால் அது நாட்­டிற்கு பாரிய கேடாகும். அத்­துடன் தற்­போது அரச அதி­கா­ரி­க­ளு­டனும் அர­சி­யல்­வா­தி­க­ளு­டனும் மக்கள் அதி­ருப்­தி­யுடன் உள்­ளனர். மக்­க­ளிடம் கருத்து கணிப்­பொன்றை நடத்தி அர­சி­யல்­வா­தி­க­ளையும் அரச அதி­கா­ரி­க­ளையும் பற்றி வின­வினால் அர­சி­யல்­வா­திகள் நூற்­றுக்கு பூச்­சி­யத்­தையே ஆத­ர­வாக பெறு­வார்கள். அரச அதி­கா­ரிகள் அவர்­களை விடவும் ஒரு படி மேல் இருந்­தாலும் நூற்­றுக்கு 20 சத­வீத ஆத­ர­வி­னையே பெறு­வார்கள். ஆகவே நாட்டின் நலனை கருத்­திற்கு கொண்டு இரு­த­ரப்பும் இணைந்து செயற்­பட வேண்டும்.

எனவே அரச அதி­கா­ரிகள் மீது எனக்கு பரந்­த­ள­வி­லான நம்­பிக்கை உள்­ளது. ஒரு சில அதி­கா­ரி­க­ளினால் பொது­வாக அரச அதி­கா­ரிகள் அனை­வ­ருக்கும் அவப்­பெயர் ஏற்­ப­டு­கின்­றது. நல்ல அதி­கா­ரி­களும் உள்­ளனர். அவர்­களை நாம் பாராட்ட வேண்டும். ஆகவே மக்கள் மத்­தியில் உள்ள தப்­பான அபிப்­பி­ரா­யங்­களை போக்கி அர­சியல் வாதி­களும் அரச அதி­கா­ரி­களும் செயற்­பட வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.

இதே­வேளை தற்­போது நாட்டில் ஆர்ப்­பாட்­டங்­களும் உண்­ணா­வி­ரத போராட்­டங்­க­ளுக்கும் முடி­வில்­லாமல் உள்­ளன. கொழும்பு நக­ரத்தை எடுத்­துக்­கொண்டால் ஒவ்­வொரு நாளும் போராட்­டங்­களும் ஆர்ப்­பாட்­டங்­களும் நடந்த வண்­ணமே உள்­ளன. ஜன­நா­யக உரி­மையை வழங்­கி­ய­தனை பிடித்­துக்­கொண்டு ஒவ்­வொரு நாளும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் உண்­ணா­வி­ரத போராட்­டங்­க­ளையும் நடத்­து­ப­வர்கள் அர­சாங்கம் வழங்­கிய சுதந்­தி­ரத்தை உரிய முறையில் பயன்­ப­டுத்த வேண்டும். போராட்­டங்­களை பிர­யோ­ச­ன­மாக நடத்த வேண்டும். புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். வழங்­கி­யுள்ள சுதந்­தி­ரத்தை கட்டிக் காக்க வேண்­டி­யது மக்­களின் பொறுப்­பாகும்.

அத்­துடன் குற்றம் செய்ய பழ­கி­ய­வர்கள் அதனை விடு­வ­தற்கு விருப்பம் இல்­லா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர். அதற்கே அவர்கள் பழக்­கப்­பட்டு விட்­டனர். நாட்டின் கடந்த கால ஆட்­சி­களை விடவும் நேர்­மை­மிக்க மாற்று ஆட்­சியை கொண்டு செல்­வ­தற்கே மக்கள் எனக்கு வாக்­க­ளித்­துள்­ளனர். ஆகவே முன்­னைய ஆட்­சியில் நடந்த குற்­றங்கள் இந்த ஆட்­சியில் நடை­பெறா வண்ணம் பாது­காக்க வேண்டும். முன்­னைய ஆட்­சியின் குற்­றங்கள் இந்த ஆட்­சி­யிலும் இடம்­பெற கூடாது.

அதே­போன்று தகவல் அறியும் உரிமை இம்­மாதம் 2 ஆம் திக­தியில் இருந்தே அமு­லுக்கு வந்­தது. ஆனால் அந்த உரி­மையை பயன்­ப­டுத்தி முத­லா­வது தகவல் பெறு­த­லாக அரச சார்­பற்ற அமைப்­பொன்று எனது சொத்து விபரங்களை கோரியுள்ளது. எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் எனக்கு கிடையாது. ஜனாதிபதியின் சொத்து விபரங்களை கோருவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லாத போதும் ஜனாதிபதியாக பொறுப்பேற்று 2 வருடத்திற்கான சொத்து விபரங்களை சமர்ப்பித்த நாட்டின் ஒரே ஜனாதிபதி நானேயாகும். இருப்பினும் எனது சொத்து விபரங்கள் தேவையாயின் தேர்தல் ஆணையாளரை அணுகி பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே அரச சார்பபற்ற நிறுவனங்கள் சில முறையற்ற விதத்திலும் அவர்களது காரியங்களுக்கு அப்பால் செல்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தெளிவாகவும் தமக்கு உரிய வேலைகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.