Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேரிடம் ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்க வழி என்ன

Featured Replies

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேரிடம்
ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்க வழி என்ன
 
 
 

மதுரை,:சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள 130 கோடி ரூபாய் அபராதத்தை, தீர்ப்பு வெளியான தேதியிலி ருந்து, 6 ஆண்டுகளுக்குள் வசூலிக்கும்
நடவடிக்கையை முடிவுக்குகொண்டுவர, சட்டத்தில் வழிவகை உள்ளது.

 

Tamil_News_large_171363720170219001507_318_219.jpg

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 100 கோடி ரூபாய் அபராதம், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.அபராதத்தை செலுத்தத்தவறி னால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அபராதம் வசூலிக்கும் நடைமுறைகள் பற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் கூறியதாவது:

குற்றவழக்குகளில் துாக்கு, ஆயுள், கடுங் காவல், மெய்க்காவல்(சாதாரண) சிறை தண்டனை, அபராதம் தண்டனையாக விதிக் கப்படும். கடுங்காவல் தண்டனை என்பது

சிறை யில் வேலை பார்க்க வேண்டும்.சாதாரண தண்டனை என்பது சிறையில் வேலை பார்க்கத் தேவையில்லை. இவ்வழக்கில்சாதாரண சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.குற்றவழக்கை பொறுத்த வரை, 'ஆளுடன் வழக்கு ஆளுடன் முடியும்' என்பது சட்டத்தின் நெறி.

இதன்படி ஜெயலலிதா இறந்ததால், அவருக்கு எதிரான வழக்கில் அனுபவிக்க வேண்டிய சிறை தண்டனை குறித்த பகுதி,உச்சநீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.சிவில் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் இறந்தால், 30 நாட்களுக்குள் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள், வழக்கின் ஒரு தரப்பினராக இணைய வேண்டும் அல்லது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அதுபோல் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டகுற்றவாளி இறந்து போனால்,அதிலிருந்து 30 நாட்களுக்குள் அபராதம் தொடர்பான குறைபாடு பற்றி அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் தங்களை வழக்கின் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ள மனு செய்ய வழிவகை உள்ளது.

ஆனால், இவ்வழக்கில் தீர்ப்புஒத்தி வைக்கப்பட்ட பிறகு தான், முதல் குற்றவாளியான ஜெ.,இறந்தார். சிறை தண்டனை யுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும் போது, அபராதத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில் தண்டனை காலத்தின் நான்கின் ஒரு பங்கு காலத் திற்கு குறையாத ஒரு காலத்தை, தண்டனையாக அனுபவிக்க உத்தரவிடலாம்.

அதன்படி 4 ஆண்டு சிறை தண்டனையின் ஒரு பகுதியான, ஓராண்டு சிறை தண்டனை, இவ் வழக்கில் விதிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பு வெளியான தேதியிலிருந்து 6 ஆண்டுகளுக் குள், அபராதத்தை வசூலிக்கும் நடவடிக் கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். செலுத்த தவறும் பட்சத்தில், வருவாய் வசூல்சட்டப்படி, அபராதத்தை வசூலிக்க

 

சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமானது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், சம்பந்தப்பட்ட கலெக்டர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியானவர், குற்ற வாளியின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் கொண்டுவர வேண்டும். தொகையை வசூலித்து, அரசுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

சசிகலா உட்பட 3 பேரின் தண்டனையைப் பொறுத்தவரை, அபராதத்தை செலுத்தாமல், அதற்கு பதிலாக அவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஓராண்டு சிறை தண்டனையை அவர்கள் அனுபவிக்க விரும்பினால்அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்களிப்படுவர். அப்படிகூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்கும்பட்சத்தில், அவர்கள் தண்டனை காலம் முடிந்ததிலிருந்து 6 ஆண்டு களுக்கு பொதுத்தேர்தல்களில் போட்டியிடமுடியாது.

ஜெ.,விற்கு விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்க, அவரது பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையாசொத்துக்களை, பறிமுதல் செய்ய, மேற்கண்ட வழிவகையை விசாரணை நீதிமன்றம் பின்பற்றும் என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713637

  • தொடங்கியவர்
5 ஆண்டு சிறையில் இருந்தாலும்
சசிக்கு ரூ.10 கோடி அபராதம் உண்டு
 
 
 

குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப் பட்டு, அபராதம் விதிக்கப்பட்டவர், அபராத தொகையை கண்டிப்பாக செலுத்தியே ஆக வேண்டும்; அபராதம் கட்டாமல், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்து விடலாம் என, தப்பிக்க முடியாது.

 

Tamil_News_large_171347720170218232758_318_219.jpg

 

நான்கு ஆண்டு


சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு, தலா நான்கு ஆண்டுகளும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராத தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு, விலக்கி வைக்கப்பட்டது. அதேநேரத்தில், மற்ற

மூவருக்கும், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா, சுதாகரன், இளவரசி அடைக்கப்பட்டனர். இவர்கள் தரப்பில், அபராத தொகையை செலுத்தியதாக தெரியவில்லை; ஆனாலும், தண்டனை காலத்துக்குள், அபராத தொகையை செலுத்தலாம்; இல்லையென்றால், சட்டப்படி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:


குற்ற வழக்கில், அபராதம் விதிக்கப்பட்டால், உத்தரவு பிறப்பித்த நீதிமன்றத்தில், அதை செலுத்த வேண்டும். அபராத தொகையை செலுத்தி விட்டு, மேல்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியதற்கான ரசீதையும், மேல் முறையீட்டு மனுவில் இணைக்க வேண்டும். இது ஒரு நடைமுறை.

கூடுதல் காலம்அபராத தொகையின் அளவு அதிகமாக இருந்தால், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து,தண்டனையை நிறுத்தி வைக்க கோர முடியும். அதில், அபராதமும் அடங்கும். அதை, உயர் நீதிமன்றம் அனுமதிக்கலாம்.

அபராத தொகையை, தண்டனையை அனுபவிக்கும் காலத்துக்குள் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், நீதிமன்றம் விதித்துள்ள படி, கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவிக்க

 

வேண்டும். அவ்வாறு கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவித்து விட்டால், அபராதம் செலுத்த தேவையில்லை என்கிற அர்த்தம் அல்ல.சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தாலும், ஆறு ஆண்டுகள் வரை, அபராத தொகையை வசூலிக்க, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும்.

குற்றவாளி பெயரில் சொத்துக்கள் இருந்தால், அதை முடக்கி வைத்து, கலெக்டர் மூலம், வருவாய் வசூல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அந்த சொத்துக்களை விற்று, நீதிமன்றத்துக்கு அபராத தொகையை, செலுத்தும்படி உத்தரவிட முடியும். அதுவே, ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டால், அபராத தொகையை வசூலிக்க முடியாது.இவ்வாறு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். - நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713477

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.